'மாஸ்டர்' படத்திற்குப் பிறகு விஜய், இயக்குநர் ஏஆர்முருகதாஸ் கூட்டணியில் 'தளபதி 65' படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
'துப்பாக்கி' படத்தின் இரண்டாம் பாகம்போல் கதை அமைத்திருந்ததாக கூறப்பட்ட நிலையில் கதையில் திருப்தி ஏற்படாத நடிகர் விஜய், கூட்டணியை மறுத்துவிட்டு பின்னர் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் 'தளபதி 65' படத்தை ஒப்பந்தம் செய்துக்கொண்டார்.
இயக்குநர் நெல்சன் தற்பொழுது சிவகார்த்திகேயனை வைத்து 'டாக்டர்' படத்தை இயக்கி வருகிறார். அதன் பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயனுக்காக ஒரு கதையைத் தயார் செய்து வைத்திருந்தார். அதைத்தான் நடிகர் விஜய்யிடம் சொல்ல அவரும் கதை நன்றாக இருக்கிறது என்று ஒத்துக்கொண்டார். அதனால் சிறிது வருத்தத்தில் இருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் விஜய்க்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த கதையை சிவகார்த்திகேயனிடம் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் கூற, கதையும் அவருக்குப் பிடித்துப் போக அதில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
விஜய் வேண்டாம் என்ற இயக்குநருக்கும் சிவகார்த்திகேயனுக்காக கதையை வைத்திருந்து பின்னர் விஜய்யிடம் போன நெல்சனுக்கும் இடையே தற்பொழுது பெரும் போட்டி உண்டாகி இருக்கிறது.
இந்தப் போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்று இரண்டு இயக்குநரும் தங்கள் கதைகளை மெருகேற்றி வருகின்றனர்.

