'அண்ணாத்த' படப்பிடிப்பில் கீர்த்திக்காக கவலைப்பட்ட ரஜினி

'அண்ணாத்த' படப்பிடிப்பில் கீர்த்திக்காக கவலைப்பட்ட ரஜினி

2 mins read
b9b05525-b067-466c-bd59-e061406737c5
'அண்ணாத்த' படப்பிடிப்பில் ரஜினியுடன் கீர்த்தி சுரேஷ். -

ரஜி­னி­காந்த் கொரோனா கிரு­மித்­தொற்று பாதிப்­பின்றி சென்னை திரும்­பி­யி­ருப்­பது அவ­ரது குடும்­பத்­தா­ரை­யும் ரசி­கர்­க­ளை­யும் நிம்­ம­திப் பெரு­மூச்­சு விட வைத்­துள்­ளது.

இந்­நி­லை­யில் 'அண்­ணாத்த' படத்­தின் படப்­பி­டிப்­பின்­போது உடன் நடித்த கீர்த்தி சுரே­ஷுக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருக்க வாய்ப்­புள்­ள­தாகக் கூறப்­பட்­ட­தும் அவர் மிக­வும் கவலையா­கி­விட்­டா­ராம்.

'அண்­ணாத்த' படப்­பி­டிப்பு ஹைத­ரா­பாத்­தில் டிசம்­பர் 14ஆம் தேதி தொடங்­கி­யது. தனி விமா­னத்­தில் சென்று அதில் பங்­கேற்­றார் ரஜினி.

ஒன்­பது நாட்­கள் எந்­த­வி­தச் சிக்­க­லு­மின்றி பணி­கள் நடை­பெற்­றன. இந்­நி­லை­யில் 22ஆம் தேதி மாலை கீர்த்தி சுரே­ஷின் ஒப்­ப­னை­யா­ளர், சிகை­ய­லங்­கார நிபு­ணர் உள்­ளிட்ட நான்கு பேருக்­குக் கிரு­மித்­தொற்று இருப்­பது உறு­தி­யா­னது.

'அண்­ணாத்த'வில் ரஜி­னிக்­குத் தங்­கை­யாக நடிக்­கி­றார் கீர்த்தி. அண்­ணன், தங்கை பாசத்தை ஆழ­மாக எடுத்­துச் சொல்­லும் பல காட்­சி­கள் அண்­மை­யில் பட­மாக்­கப்­பட்­ட­ன­வாம்.

உண்­மை­யான அண்­ணன் தங்­கை­யைப் போல் ரஜி­னி­யும் கீர்த்­தி­யும் பாசம் காட்டி உள்­ள­னர். இந்­நி­லை­யில் கீர்த்­தி­யின் உத­வி­யா­ள­ருக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்­ப­தாக தெரி­ய­வந்­த­தும் கடும் அதிர்ச்சி அடைந்­தி­ருக்­கி­றார் ரஜினி.

படக்­கு­ழு­வி­ன­ருக்கு முன்­கூட்­டியே ஏன் கொரோனா பரி­சோ­தனை மேற்­கொள்­ள­வில்லை என்று படத் தயா­ரிப்பு நிர்­வா­கி­யி­டம் கடிந்து கொண்­ட­தா­கத் தக­வல். அதற்­குள் ரஜி­னிக்­கும் பாதிப்பு ஏற்­பட வாய்ப்­புள்­ள­தாக படக்­கு­ழு­வி­னர் பயந்­துள்­ள­னர்.

பரி­சோ­த­னைக்­குப் பிறகு ரஜி­னிக்கு கிரு­மித்­தொற்று இல்லை என்­பது உறு­தி­யா­ன­தும்­தான் அனை­வ­ரும் நிம்­மதி அடைந்­துள்­ள­னர்.

ஹைத­ரா­பாத்­தில் உள்ள தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் அனுமதிக்­கப்­பட்­டி­ருந்த ரஜி­னிக்­குத் தேவை­யான பணி­வி­டை­களை உட­னி­ருந்து செய்­துள்­ளார் அவ­ரது மகள் ஐஸ்­வர்யா.

அச்­ச­ம­யம் அர­சி­யல் களத்­தில் கால்­ப­திக்க வேண்­டாம் என்­றும் சினி­மா­வில் மட்­டும் கவ­னம் செலுத்­து­மா­றும் அவர் கேட்­டுக் கொண்­டா­ராம். ஆனால், அப்­போது இதற்கு ரஜினி எந்த பதி­லும் அளிக்­க­வில்லை என்று கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே ரஜி­னிக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருக்­க­லாம் என்று தக­வல் வெளி­யா­ன­தைக் கேள்­விப்­பட்டு கீர்த்தி சுரே­ஷும் கவ­லை­யில் மூழ்­கி­விட்­டார்.

பரி­சோ­த­னைக்­குப் பிறகு ரஜி­னிக்கு தொற்று இல்லை எனத் தெரி­ய­வந்­த­தும்­தான் நிம்­மதி அடைந்­தா­ராம். ரஜினி குடும்­பத்­தாரை அவர் தொலை­பே­சி­யில் தொடர்­பு­கொண்டு நலம் விசா­ரித்­த­தா­கத் தக­வல்.

ஜன­வரி மாத இறு­திக்­குள் 'அண்­ணாத்த' படத்தை முடித்­து­விட வேண்­டும் என்­ப­தில் அவர் உறு­தி­யாக உள்­ளா­ராம்.

நேரடி அர­சி­ய­லில் ஈடு­ப­ட­வில்லை என்­றா­லும் தமி­ழக அர­சி­யல் நில­வ­ரங்­கள் குறித்து அவ்­வப்­போது அவர் கருத்து தெரி­விப்­பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மேலும், திரை­யு­ல­கப் பணி­களில் தொடர்ந்து ஈடு­ப­டு­வது என அவர் முடிவு செய்­தி­ருப்­ப­தா­க­வும் அடுத்­த­டுத்து புதுப் படங்­களில் நடிப்­பார் என்றும் கோடம்பாக்க விவரப் புள்ளிகள் கூறுகின்றனர்.