சூர்யாவின் மனிதாபிமானம்

சூர்யாவின் மனிதாபிமானம்

1 mins read
67f97972-5b57-4654-95de-4b5f9202a3b1
படம்: ஊடகம் -

சூர்­யா­வும் அவ­ரது தம்­பி­யும் இணைந்து அறக்­கட்­ட­ளை­ மூலம் செய்­கிற உத­வி­கள் அனைத்­தும் அனை­வ­ருக்­கும் தெரிந்த செய்தி.

ஆனா­லும் வெளி­யில் தெரி­யா­மல் செய்­யும் உத­வி­கள் எப்­போ­தா­வ­து­தான் தெரிய வரும். அப்­ப­டி­யொரு நெகிழ்ச்­சி­யான சம்­ப­வம் அண்­மை­யில் நடந்­தது.

சூர்யா ஜோதி­கா­வைத் திரு­ம­ணம் செய்துகொண்­ட­போது தங்­கள் வீட்­டில் நீண்ட கால­மாக வேலைப் பார்த்த கார் ஓட்­டு­ரின் காலில் விழுந்து சூர்யா ஆசிர்­வா­தம் பெற்றார்.

அது­பற்­றிக் கேட்­ட­போது, "பள்­ளி­யில் படிக்­கும் காலத்­தி­லி­ருந்து அவர்­தான் எங்­க­ளைப் பத்­தி­ர­மாக அழைத்­துச் செல்­வார். நாங்­கள் நன்­றாக இருக்­க­வேண்­டும் என்று நினைப்­ப­வர் அவர். அவ­ரி­டம் ஆசி வாங்­கு­வது எவ்­வ­ளவு முக்­கி­யம் என்று எனக்­குத்­தான் தெரி­யும்," என்று சொல்­லி­யி­ருந்­தார்.

அது­போல் தற்­பொ­ழுது உள்ள ஓட்­டு­ந­ரின் மனைவி கர்ப்­ப­மாக இருப்­பதை அறிந்து அவரை வீட்­டிற்கு அழைத்து, விருந்து வைத்­தார் சூர்யா. பின்­னர் ஜோதிகா கர்ப்­ப­மாக இருந்­த­போது பார்த்த அதே மருத்­து­வ­ரி­டம் இந்­தப் பெண்­ணை­யும் அழைத்­துச் சென்று இனி­மேல் இங்­கேயே பார்த்­துக்­கொள்­ளுங்­கள், பிர­சவ செலவு அனைத்­தும் என்­னு­டை­யது என்று சொல்லி அந்­தக் கார் ஓட்டுநருக்கு இன்ப அதிர்ச்­சியை அளித்து இருக்கிறார் நடி­கர் சூர்யா.