தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, திரைப்படத்தில் வளர்ச்சி அடைய திறமை மட்டும் போதாது என்று தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தா 'ஓடிடி' தளத்தில் புதிய நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரு
கிறார். அதில் தனது திரைப்
பட வாழ்க்கை குறித்து அவர் பேசியபோது, "திரைப்
படத்தில் பிரபலமாக ஒரு பூசணிக்காய் அளவுக்கு திறமை இருந்தாலும் போதாது.
கடுகளவு அதிர்ஷ்டமும் வேண்டும் என்று சொல்வார்கள். எனக்கு இரண்டுமே பூசணிக்காய் அளவுக்கு இருந்தது. திரைப்படத் துறையில் அடியெடுத்து வைத்த கொஞ்ச நாட்களிலேயே
அற்புதமான கதைகள், கதாபாத்திரங்கள் கிடைத்தன.
"என்னைவிட திறமையானவர்கள், அழகானவர்கள் நிறைய பேர் இருந்தாலும் வாய்ப்புகள் என்னைத் தேடி வந்தன. அதற்கு காரணம் அதிர்ஷ்டம். திருமணத்துக்குப் பிறகும் நல்ல படங்களில் நடித்துக்கொண்டு இருப்பதற்கு காரணம் நிச்சயம் அதிர்ஷ்டம்தான். அதிர்ஷ்டத்தை அதிகம் நம்புகிறேன்.
"கதாநாயகிகள் திறமைக்குத் திருமணம் ஒரு தடை இல்லை. திருமணத்திற்குப் பிறகு வாய்ப்புகள் வராது என்று நம்பி அதற்கும் தயாராகிக் கொண்டுதான் திருமணம் செய்துகொண்டேன். ஆனால் அதிர்ஷ்டம் எனது பக்கம் இருப்பதால் திருமணத்துக்குப் பிறகும் நல்ல படங்கள் எனக்கு அமைகின்றன," என்றார்.
கொரோனா காலத்தில் படப்பிடிப்புகள் இல்லாததால் மாலத் தீவில் அதிகமாக கொரோனா பாதிப்பு இல்லை என்ற எண்ணத்தில் பல நடிகைகள் மாலத் தீவிற்குச் சென்று வருகின்றனர். அவர்களில் சமந்தாவும் ஒருவர். அங்கு அவர் எடுத்துக்கொண்ட படங்களை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

