ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘களத்தில் சந்திப்போம்’. எதிர்வரும் தைப்பூசத்தன்று (28ஆம் தேதி) வெளியீடு காண உள்ளது.
ஜீவாவின் குடும்பத் தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் அவரது ஜோடியாக மஞ்சிமா மோகனும், அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும் நடித்துள்ளனர்.
மேலும் ரோபோ சங்கர், பாலசரவணன், ஆடுகளம் நரேன், ரேணுகா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நட்பை அடிப்படையாகக் கொண்டு கதைக்களத்தை அமைத்துள்ளனர். ஜீவாவும் அருள்நிதியும் நண்பர்களாக நடித்துள்ளனர். இவர்களுக்கு இடையே நிகழும் சம்பவங்கள் தான் கதை.
தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் இப்படம் வெளியீடு காண்கிறது.