விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிறது 'கடைசி விவசாயி'

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிறது 'கடைசி விவசாயி'

2 mins read
c35fa697-913d-4b25-9c18-e019b1c6adf9
மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, யோகிபாபு, நல்லாண்டி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கடைசி விவசாயி'. விவசாயம், விவசாயிகளை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது. படங்கள்: ஊடகம் -
multi-img1 of 2

மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, யோகிபாபு, நல்லாண்டி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கடைசி விவசாயி'. விவசாயம், விவசாயிகளை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது.

சமுதாய அக்கறையோடு உருவாகும் படைப்பு என்றாலும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு நகைச்சுவை, காதல் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு அயனகா போஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை பி.அருண்குமார் கவனிக்கிறார். "கதைப்படி நல்லாண்டி ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். அதேசமயம் விஜய் சேதுபதி தனது பாத்திரத்தின் மூலம் ரசிகர்களை நிச்சயம் கவர்வார்," என்கிறார் இயக்குநர் மணிகண்டன்.

சந்தானம் படங்கள் அடுத்தடுத்து வெளியீடு

'பாரிஸ் ஜெய­ராஜ்', 'சபா­பதி', 'கொரோனா குமார்' என அடுத்­தடுத்து புதுப்­ப­டங்­களில் நாய­க­னாக நடித்து வரு­கி­றார் சந்­தா­னம்.

இந்­நி­லை­யில் அவர் ஏற்­கெ­னவே நடித்து முடித்­துள்ள 'சர்­வர் சுந்­த­ரம்', 'டிக்­கி­லோனா' ஆகிய இரு படங்­களும் விரைவில் வெளி­யாக உள்­ளன. 'சர்­வர் சுந்­த­ரம்' படம் மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்பே முடிந்­து­விட்­டது. எனி­னும் ஆனந்த் பால்கி இயக்­கிய இப்­ப­டம் பல்­வேறு சிக்­கல்­க­ளால் உரிய நேரத்­தில் வெளி­யா­க­வில்லை.

இந்­நி­லை­யில் அனைத்­துப் பிரச்­சி­னை­க­ளை­யும் கடந்து இப்­ப­டம் வெளி­யாக உள்­ளது.

இதற்­கி­டையே சந்­தா­னம் மூன்று கதா­பாத்­திரங்­களில் நடித்­துள்ள 'டிக்­கி­லோனா' பட­மும் ரசி­கர்­கள் மத்­தி­யில் எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இதில் இந்­திய அணி­யின் சுழற்­பந்து வீச்­சா­ளர் ஹர்­ப­ஜன் சிங் நடித்­துள்­ளார். இறு­திக்­கட்­டப் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

'இதற்­குத்­தானே ஆசைப்­பட்­டாய் பால­கு­மாரா' படத்­தின் இரண்­டாம் பாக­மாக உரு­வா­கும் 'கொரோனா குமார்' படத்­தி­லும் சந்­தா­னத்தை நாய­க­னாக ஒப்­பந்­தம் செய்­துள்­ள­னர்.

'சபாபதி' படத்தில் திக்குவாய் பிரச்சினை உள்ள இளையராக நடிக்கிறார் சந்தானம். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியீடு காண உள்ளது.

'பாரிஸ் ஜெயராஜ்' படத்தை பிப்ரவரியில் வெளியிட உள்ளனராம். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் சந்தானம் ஜோடியாக அனேகா சோடி, சஷ்டிகா ஆகிய இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.

அடுத்தடுத்து படங்கள் வெளியாக இருப்பதால் சந்தானம் தரப்பினர் உற்சாகத்தில் உள்ளனர்.