'பிகில்' படத்தில் நடித்த ரெபா மோனிகா தன் காதலரைக் கைபிடிக்க உள்ளார்.இதையடுத்து திரையுலகத்தினரும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிப்ரவரி 4ஆம் தேதி தமது பிறந்தநாளைக் கொண்டாடினார் ரெபா. இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர். அப்போது எதிர்பாராத விதமாக ரெபாவின் நீண்டநாள் நண்பரான ஜோமென் ஜோசஃப் ஒரு ரோஜாப் பூவை கொடுத்து தமது காதலை வெளிப்படுத்தினார்.
இதனால் ஆச்சரியத்தில் மூழ்கிய ரெபா, பிறகு சுதாரித்துக் கொண்டு அக்காதலை ஏற்றுக் கொண்டார். ரெபாவின் காதலர் இப்படி திடீரென இன்ப அதிர்ச்சி கொடுப்பார் என்பது இவர்களின் நெருக்கமான நண்பர்களுக்கே தெரியாதாம்.
கொரோனா ஊரடங்கின்போது ரெபா மோனிகாவை நேரில் சந்திக்க முடியாமல் தவித்த ஜோமென் தற்போது இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருப்பதை அடுத்து உடனடியாக தன் மனதில் உள்ள காதலை வெளிப்படுத்தி உள்ளார்.

