கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான 'கிரிக்பார்ட்டி' மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். இவர் தற்பொழுது விஜய்யின் 65வது படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
'கீதா கோவிந்தம்' திரைப்படம் மூலம் டோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தன்னுடைய முதல் படத்திலேயே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
பின்பு 'டியர் காம்ரேட்' படத்தில் நடித்து பாராட்டைப் பெற்றார். இவர் நடித்த தெலுங்கு படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தயாரிப்பாளர்களின் பார்வை இவர் பக்கம் திரும்பியது. ராசியான நடிகை என்ற பெயரையும் பெற்றார்.
24 வயதான ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து 'மிஷன் மஜ்னு' படத்தில் நடித்துள்ளார்.
அடுத்து, இந்தி இயக்குநர் விகாஸ் இயக்கும் 'டெட்லி' படத்தில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். அந்தப் படத்திலும் ராஷ்மிகா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து அடர்ந்த காட்டில் தெலுங்குப் படமான 'புஷ்பா' படப்பிடிப்பில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்துக்கொண்டு இருக்கிறார் ராஷ்மிகா.
தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'சுல்தான்' படம் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார்.
இந்தப் படத்தின் பெயரை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்பாக ராஷ்மிகா சமூக வலைத்தளங்களில் படத்தின் பெயரை குறிப்பிட்டுவிட்டார்.
அதனால் படக்குழு அவர் மீது செம கடுப்பில் இருந்ததாக கூறப்பட்டது.
கிஷோர் திருமலை இயக்கிய 'ஆதல்லு மீகு ஜோஹர்லு' என்ற படத்தில் சர்வானந்துடன் ராஷ்மிகா அட்டகாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திருப்பதியில் தசரா நிகழ்ச்சியை மையமாக வைத்து இந்தக் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் எடுக்கப்படுகிறது.
ராஸ்மிகாவின் குறும்புத்தனம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். "கார்த்திக்கு செய்ததுபோல
சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும் செய்துவிடாதீர்கள். உங்களை நம்பி படம் எடுக்கிறார்கள். பாலிவுட்டிலாவது கொஞ்சம் அமைதியாக இருக்க முயற்சிக்கவும்," என்று ரசிகர்கள் பதிவிட்டுள்ளனர்.
பல்வேறு மொழிப் படங்களில் மும்முரமாக நடித்து வரும் ராஷ்மிகா, ஏராளமான நிகழ்சிகளில் தனக்குப் பிடித்த நடிகர் விஜய் என்றும் அவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க தீவிர முயற்சி எடுத்தார். கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு மாளவிகா மோகனன் வசம் சென்றது.
இந்நிலையில், தற்போது நெல்சன் இயக்க உள்ள 'தளபதி 65' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக அண்மையில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் தற்போது ராஷ்மிகாவை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்யின் 'தளபதி 65' படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக, நடிகை ராஷ்மிகா, ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகக் கூறப் படுகிறது. அவர் கைவிட்ட வாய்ப்பை பூஜா ஹெக்டே கைப்பற்றி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கன்னட பேரழகியான ராஷ்மிகா "காதல்-நகைச்சுவைக் கதைகள் தனக்குப் பிடிக்கும் என்றும் விடுமுறை நாட்களில் தூங்குவதையே தனது பொழுதுபோக்காக வைத்து இருப்பதாகவும் கூறியுள் ளார். மயக்கும் புன்னகைக்கு உரியவரான ராஷ்மிகா மந்தனா விரைவில் டோலிவுட், கோலிவுட்டில் முன்னணி நடிகையாவார் என்று கூறப்படுகிறது.

