காஜல்: மனதில் அச்சம் நீங்கவில்லை

காஜல்: மனதில் அச்சம் நீங்கவில்லை

2 mins read
acc33f0b-10c4-4f8c-a6b1-4b6f60f99f54
காஜல் அகர்வால் -

இணை­யத் தொடர்­களில் நடித்­து­வ­ரும் கதா­நா­ய­கி­க­ளின் பட்­டி­ய­லில் காஜல் அகர்­வா­லும் இணைந்­துள்­ளார்.

வெங்­கட் பிரபு இயக்­கத்­தில் அவர் நடித்­துள்ள 'லைவ் டெலி­காஸ்ட்' என்ற இணை­யத்­தொ­டர் இரு தினங்­க­ளுக்­கு­முன் வெளி­யாகி உள்­ளது.

இந்­தத் தொட­ரில் நடித்தபோது பல திகில் அனு­ப­வங்­கள் ஏற்­பட்­ட­தா­கச் சொல்­கி­றார் காஜல். ஆள் அர­வ­மற்ற ஒரு வீட்­டில்­தான் காட்­சி­க­ளைப் பட­மாக்­கி­னா­ராம் வெங்­கட் பிரபு.

"கதைக்­கேற்ற இடத்­தை­த்தான் படப்­பி­டிப்­புக்­கா­கத் தேர்ந்­தெ­டுத்­தார் வெங்­கட். அவ­ரது நண்­ப­ருக்­குச் சொந்­த­மான இடம் அது. ஒரு மலை உச்­சி­யில் இருக்­கும் அந்த வீட்­டில் படப்­பி­டிப்பு நடந்­தது.

"அந்த வீட்­டுக்­குள் நுழைந்­தாலே என் மன­தில் ஒரு­வித அச்­சம் சூழ்ந்­து­வி­டும். படப்­பி­டிப்பு முடிந்த பின்­ன­ரும்கூட அந்த வீடும் அது அமைந்­துள்ள பகு­தி­யும் அடிக்­கடி மன­தில் வந்து போகின்­றன. அத­னால் ஏற்­படும் அச்­சம் கார­ண­மாக என்­னால் நிம்­ம­தி­யா­கத் தூங்­கக்­கூட முடி­ய­வில்லை," என்­கி­றார் காஜல்.

படப்­பி­டிப்பு இல்­லாத நேரத்­தில்­கூட அந்த வீட்­டில் இருப்­பது போன்ற உணர்வு ஏற்­ப­டு­கி­ற­தாம். அந்த வீட்­டுக்­குள் நட­மா­டு­வது போன்ற உணர்­வும் ஏற்­ப­டு­வ­தால் இப்­போ­தும் அந்­தப் பயம் மனதை விட்டு நீங்­க­வில்லை என்­கி­றார்.

"அந்த வீட்டை நினைத்­தாலே குலை நடுங்­கு­கிறது. இந்­தத் தொட­ரில் நடித்த அனு­ப­வத்தை வாழ்­நாள் முழுக்க மறக்க இய­லாது. படம் பார்க்­கும் ரசி­கர்­க­ளுக்­கும் மன­தில் ஒரு­வித திகில் உண்­டா­கும். சிலர் தூக்­கத்தை இழக்­க­வும் நேரி­டும்," என எச்­ச­ரிக்­கி­றார் காஜல் அகர்­வால்.

கடந்த 2008ஆம் ஆண்­டில் வெங்­கட் பிரபு இயக்­கத்­தில் உரு­வான 'சரோஜா' படத்­தில் சிறிய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தி­ருந்­தார் காஜல். அதன் பிறகு வெங்­கட்­டின் வளர்ச்சி தமக்கு மகிழ்ச்சி அளிப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"முதன்­மு­த­லாக இணைந்து பணி­யாற்­றி­ய­போதே அவர் அரு­மை­யான மனி­தர் என்­ப­தைப் புரிந்­து­கொண்­டேன். அவ­ரது குணா­தி­ச­யம் அவ­ரது பணி­யி­லும் வெளிப்­ப­டு­கிறது.

"ஒரு படத்­தில் இடம்­பெ­றும் அனைத்­துக் கதா­பாத்­தி­ரங்­க­ளுக்­கும் கூடு­மா­ன­வரை முக்­கி­யத்­து­வம் அளிக்­கப் பார்ப்­பார். எல்லா இயக்­கு­ந­ருக்­கும் இப்­ப­டி­யொரு எண்­ணம் வராது.

"மீண்­டும் வெங்­கட் பிரபுவு­டன் பணி­யாற்­றிய பிறகு அவர்­மீதான மரி­யாதை மன­தில் மேலும் அதி­க­ரித்­துள்­ளது," என்று சொல்­லும் காஜ­லுக்­கும் இயக்­கு­ந­ராக வேண்­டும் எனும் விருப்­பம் உள்­ள­தாம். இப்­போது இல்லை என்­றா­லும் என்­றே­னும் ஒரு­நாள் அது சாத்­தி­ய­மா­கும் என்­கி­றார்.