கோவிலைப் போல் இருக்கிறது: மனம் திறந்த ரஜினி

கோவிலைப் போல் இருக்கிறது: மனம் திறந்த ரஜினி

1 mins read
d4542c0e-dbf3-4517-a42d-6a311b06b90e
புதிய ஒலிப்பதிவுக் கூடத்தில் இளையராஜாவுடன் ரஜினிகாந்த். -

இளை­ய­ராஜா புதி­தா­கத் திறந்­தி­ருக்­கும் ஒலிப்­ப­தி­வுக்­கூ­டம் ஒரு கோவி­லைப் போல் இருப்­ப­தாக கூறி­யுள்­ளார் ரஜினி.

அந்­தப் புதிய ஒலிப்­ப­திவு கூடத்­துக்கு இரண்­டா­வது முறை­யாக அவர் நேற்று முன்­தி­னம் வருகை புரிந்­தார்.

சென்­னை­யில் உள்ள பிர­சாத் ஸ்டு­டி­யோ­வில் இளை­ய­ரா­ஜா­வுக்கு என தனி ஒலிப்­ப­திவுக் கூடம் ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. அண்­மை­யில் சில பிரச்­சி­னை­க­ளால் அவர் அங்­கி­ருந்து வெளி­யே­றி­யுள்­ளார்.

இதை­ய­டுத்து, சென்னை தியா­க­ராயா நக­ரில் 'இளை­ய­ராஜா ஸ்டு­டியோ' என்ற பெய­ரில் புதிய ஒலிப்­பதிவுக் கூடம் ஒன்றை அமைத்­துள்­ளார் இளை­ய­ராஜா. அங்­கு­தான் அவ­ரது இசைப்­ப­ணி­கள் தற்­போது நடை­பெற்று வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தினம் இளை­ய­ரா­ஜா­வின் வீட்­டுக்­குச் சென்றார் ரஜினி. அங்கு சிறிது நேரம் அவ­ரு­டன் பேசிக் கொண்­டி­ருந்த பின்­னர் புதிய ஒலிப்­ப­தி­வுக் கூடத்­தை­யும் சுற்­றிப் பார்த்­தார்.

இந்­தப் புதிய ஒலிப்­ப­தி­வுக் கூடத்­துக்­குள் நுழைந்­த­தும் ஒரு கோவி­லுக்­குள் நுழைந்த உணர்வு தமக்­குள் ஏற்­பட்­ட­தாக தெரி­வித்­தார் ரஜினி.

அடுத்தடுத்த நாள்களில் இரண்டு முறை அவர் இளையராஜாவின் ஒலிப்­ப­தி­வுக் கூடத்­துக்கு வருகை தந்­தார்.

அண்­மைக் கால­மாக பொது நிகழ்ச்­சி­கள், விழாக்­களில் பங்­கேற்­ப­தைத் தவிர்த்து வரு­கி­றார் ரஜினி. இந்­நி­லை­யில், இளை­ய­ரா­ஜா­வின் ஒலிப்­ப­தி­வுக் கூடத்­துக்கு அவர் இரு­முறை வருகை தந்­தது கோடம்­பாக்­கத்­தி­னரை ஆச்­ச­ரி­யப்­பட வைத்­துள்­ளது.