சேதுபதி: சம்பளம் பற்றி எனக்கு கவலையில்லை

சேதுபதி: சம்பளம் பற்றி எனக்கு கவலையில்லை

2 mins read
7530ad2c-9f5a-4856-a144-40763707089f
'மாஸ்டர்' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் விஜய் சேதுபதி. -

பிர­பல இந்தி நடி­கர் அமீர் ­கான் படத்­தில் இ­ருந்து விஜய் சேது­பதி வில­கி­ய­தற்­கான கார­ணம் தெரி­ய­வந்­துள்­ளது.

டாம் ஹாங்ஸ் நடிப்­பில், ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்­கத்­தில் 1994ஆம் ஆண்டு வெளி­யான திரைப்­ப­டம் 'ஃபாரஸ்ட் கம்ப்'.

ஐந்து ஆஸ்­கர் விரு­து­களை வென்ற இந்­தப் படத்­தின் அதி­கா­ர­பூர்வ இந்தி மறு­ப­திப்­பில் அமீர் கான் நடிக்­கி­றார். அட்­வைத் சந்தன் இயக்­கும் இந்­தப் படத்­தில் முக்­கி­ய கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க விஜய் சேது­பதி ஒப்­பந்­த­மா­னார். 'லால் சிங் சட்டா' என தலைப்பு வைத்­துள்­ள­னர்.

கடந்த ஆண்டு தொடக்­கத்­தி­லேயே இத்­த­க­வல்­கள் வெளி­யா­கின. இப்­ப­டம் குறித்த எதிர்­பார்ப்பு ரசி­கர்­கள் மத்­தி­யில் அதி­க­ரித்து வந்­தது.

இந்­நி­லை­யில், சில மாதங்களுக்கு முன்பு, இந்­தப் படத்­தி­ல் இ­ருந்து விஜய் சேது­பதி வில­கி­விட்­டார் எனத் தக­வல் வெளி­யா­னது. வட இந்­திய ஊட­கங்­களும் இந்­தச் செய்தியை உறு­திப்­ப­டுத்­தின. இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி வில­க­லுக்­குப் பல்­வேறு கார­ணங்­கள் கூறப்­பட்­டன.

தற்­போது கால்­ஷீட் பிரச்­சி­னை­தான் விஜய் சேது­பதி வில­கி­ய­தற்­கான கார­ணம் எனத் தெரி­ய­வந்­துள்­ளது. இது­கு­றித்து அமீர் கானிடம் விவ­ரம் தெரி­வித்த பிறகே வில­கி­னா­ராம் சேது­பதி.

அது போகட்­டும். நல்ல கதா­பாத்­தி­ரங்­க­ளுக்­கா­க­வும் படைப்­பு­களுக்­கா­க­வும் தனது சம்பளத்தையே விட்­டுக்கொடுக்­கத் தயார் என்கிறார் விஜய் சேது­பதி.

தமது நடிப்பில் இதுவரை வெளியான படங்களில் மனநிறைவு தந்த கதாபாத்திரங்கள் குறித்து அண்மைய பேட்டியில் அவர் விவரித்துள்ளார்.

"என் குடும்­பத்தை வழி­ந­டத்து­வ­தற்­குத் தேவை­யா­ன­வற்றை ஓர­ளவு சம்­பா­தித்துவிட்­டேன். என் குடும்பத்துக்­கும் எனக்­கும் இது­போ­தும். இனி எனக்­கான கதா­பாத்­தி­ரங்­க­ளுக்கு எத்­த­கைய பங்­க­ளிப்பை என்­னால் தர­மு­டி­யும் என்­ப­தில்­தான் எனது கவ­னம் உள்­ளது. ஒரு நல்ல படத்­துக்­காக எனது சம்­ப­ளம் குறித்து யோசிக்­கா­மல் ஆத­ரவு வழங்­கு­வேன். அதை என் கட­மை­யா­க­வும் கரு­து­கி­றேன்," என்று தெரி­வித்­துள்­ளார் சேது­பதி.

கலை என்று வரும்­போது மொழி என்­பது தடை­யாக இருக்­காது என்று குறிப்­பி­டு­ப­வர், ஒரு படத்­தில் நடிப்­ப­தற்­கா­கத் தாம் எத்­த­கைய திட்­டங்­க­ளை­யும் தீட்­டு­வ­து இல்லை என்­கி­றார்.

"என் மன­தில் என்ன தோன்­று­கி­றதோ அதை நடிப்­பில் வெளிப்­படுத்­து­கி­றேன். எனது நடிப்பு அதன் போக்­கில் செல்­வ­தையே விரும்­பு­கி­றேன். நான் இது­வரை நடித்த படங்­களில் 'சூப்­பர் டீலக்ஸ்' படத்­தில் ஏற்­றி­ருந்த ஷில்பா கதா­பாத்­தி­ரம்­தான் ரொம்­பப் பிடித்­த­மா­னது. அதே­போல் 'சீதக்­காதி' படத்­தில் 75 வயது முதி­ய­வ­ராக ஒவ்­வொரு காட்­சி­யி­லும் ரசித்து நடித்­தேன். பொது­வாக நான் ஏற்­கும் எல்லா­பாத்­தி­ரங்­க­ளி­லும் விரும்­பித்­தான் நடிக்­கி­றேன் என்­றா­லும் இவ்­விரு ­பாத்­தி­ரங்­களும் மன­துக்கு நெருக்­க­மா­னவை," என்கிறார் சேதுபதி.