'ராங்கி மனம் கவர்வாள்'

3 mins read
a9d61782-d899-45ab-9a27-23d2910b2c1b
திரிஷா -

திரிஷா நடிப்­பில் அடுத்து வெளி­யாக இருக்­கும் 'ராங்கி' திரைப்­ப­டம் ரசி­கர்­கள் மத்­தி­யில் எதிர்­பார்ப்­பு­களை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

அண்­மை­யில் வெளி­யான இதன் குறு முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்­புக்கு நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

ஏ.ஆர்.முரு­க­தா­சி­டம் உதவி இயக்­கு­ந­ராக இருந்த எம்.சர­வ­ணன் இயக்­கத்­தில் உரு­வாகி உள்ள படம் இது.

சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு வெளி­யான 'எங்­கே­யும் எப்­போ­தும்' படத்­தின் மூலம் தமிழ் சினிமா ரசி­கர்­க­ளுக்கு அறி­மு­க­மா­ன­வர் சர­வ­ணன். இனி ரசி­கர்­கள் தன்னை 'ராங்கி' சர­வ­ணன் என அழைத்­தால் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை என்­கி­றார்.

நிமி­டத்­துக்கு ஒரு­முறை அவ­ரால் திரி­ஷா­வைப் பாராட்­டா­மல் இருக்க முடி­ய­வில்லை. அந்­த­ளவு இப்­ப­டத்­துக்­காக திரிஷா மெனக்­கெட்­டி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"இந்­தக் கதையை எழுதி முடித்த பிற­கு­தான் நடி­கர்­கள் குறித்து யோசிக்க ஆரம்­பித்­தேன். இதற்­கான விவா­தம் நடந்த போதெல்­லாம் மற்ற அனை­வ­ரை­யும்­விட திரி­ஷா­வின் நினை­வு­தான் அடிக்­கடி வந்­தது. ஒரு தனி ஆளாக படத்­தைத் தாங்­கக் கூடிய திறமை அவ­ருக்கு மட்­டுமே உள்­ளது என்று நினைத்­தோம். அதற்­கேற்ப திரிஷா தனது ஆன்­மா­வைக் கொடுத்து நடித்­தி­ருக்­கி­றார் என்­று­தான் சொல்ல வேண்­டும்.

"எனது குரு­நா­தர் ஏ.ஆர்.முரு­க­தாஸ் ஒற்றை வரி­யில் என்­னி­டம் சொன்ன கதை­தான் 'ராங்கி'யாக உரு­வெ­டுத்­துள்­ளது. அவர் காதலை மையப்­ப­டுத்தி சொன்ன கதை­யில் அர­சி­யலை கலந்­தி­ருக்­கி­றேன். 'ராங்கி' அனை­வர் மன­தை­யும் கவர்­வாள்," என்­கி­றார் சர­வ­ணன்.

லிபி­யாவை கதைக்­க­ள­மா­கக் கொண்டு உரு­வாகி இருக்க வேண்­டிய இந்­தப் படம், அந்­நாட்டு அர­சி­ய­லில் கொதி­நி­லை­யில் இருப்­ப­தால் உஸ்பெகிஸ்­தா­னில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. எனி­னும் கதை­யில் எந்­த­வித மாற்­ற­மும் செய்­யப்­ப­ட­வில்லை.

"இப்­போது திரை­யு­ல­கம் நிறைய மாறி­விட்­டது. அனைத்து கலை­ஞர்­க­ளுமே சினி­மாவை மேலும் ஆழ­மாக புரிந்­து­கொண்­டி­ருக்­கி­றார்­கள். நாய­கன், நாயகி, குணச்­சித்­திர நடி­கர்­கள், தொழில்­நுட்­பக் கலை­ஞர்­கள் என அனை­வ­ருமே தங்­க­ளது பங்­க­ளிப்பை எப்­படி அதி­கப்­ப­டுத்­த­லாம் என்று யோசிக்கி­றார்­கள்.

"திரி­ஷா­வும் அதற்கு விதி­வி­லக்­கல்ல. தனது கதா­பாத்­தி­ரத்­துக்­குள் முழு­மை­யாக நுழைந்­து­விட வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யாக இருக்­கி­றார். இந்­தப் புரி­த­லு­டன்­தான் ஒவ்­வொரு காட்­சி­யி­லும் நடித்­தார்," என்­கி­றார் சர­வ­ணன்.

தமிழ் சினி­மா­வில் இப்­ப­டிப்­பட்ட அர­சி­ய­லும் திகி­லும் கலந்த திரைப்­ப­டம் வந்­தி­ருப்­ப­தாக தாம் நினைக்­க­வில்லை என்று குறிப்­பி­டு­ப­வர், தாம் சொல்­வது உண்மை என்­பதை படம் பார்க்­கும்­போது ரசி­கர்­க­ளால் நிச்­ச­யம் உணர முடி­யும் என்­கி­றார்.

"குறு முன்­னோட்­டக் காட்­சி­க­ளைப் பார்த்­து­விட்டு பாராட்­டா­த­வர்­களே இல்லை. திரை­யில் தோன்­றும் அழ­க­ழ­கான ஊர்­கள் எங்கே இருக்­கிறது என்று கேட்­கி­றார்­கள்.

"இது­போன்று ஆச்­ச­ரி­யப்­பட்டு கேட்க வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான் இவ்­வ­ளவு மெனக்­கெட்டு ஊரும் பெய­ரும் தெரி­யாத இடங்­க­ளுக்­குச் சென்று பல நாட்­கள் பய­மில்­லா­மல் தங்கி காட்­சி­க­ளைப் பட­மாக்­கி­னோம். எங்­கள் முயற்­சி­யும் உழைப்­பும் வீண் போக­வில்லை.

"'ரேணி­குண்டா' படம் மூலம் அறி­மு­க­மான சக்­தி­வேல்­தான் ஒளிப்­ப­திவு செய்­துள்­ளார். ஒட்­டு­மொத்த உஸ்பெகிஸ்­தான் நாடும் அவ­ரது கைவண்­ணத்­தால் அப்­ப­டியே நம் கண் முன்னே வந்து நிற்­கும். ஒவ்­வொரு காட்­சி­யை­யும் அரு­மை­யா­கப் பதிவு செய்­துள்­ளார்.

"இது­போன்ற அர­சி­யல், திகில் படங்­க­ளுக்குப் பின்­னணி இசை­யும் பாடல்­களும் மிக முக்­கி­யம். அவை நல்­ல­ப­டி­யாக இருந்­தால்­தான் படத்தை ரசிக்க முடி­யும்.

"இதை உணர்ந்து அரு­மை­யாக இசை­ய­மைத்­துள்­ளார் சத்யா. அத­னால்­தான் அவ­ரு­டன் தொடர்ந்து பணி­யாற்று­கி­றேன்," என்று சொல்­லும் சர­வ­ணன், தாம் இயக்­கு­நர் முரு­க­தா­சி­டம் பணி­யாற்­றி­யது மிகச் சிறந்த வாய்ப்பு என்­கி­றார்.

இத்தகைய வாய்ப்பு கிடைத்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றும் குறிப்பிடுகிறார்.