நாயகிகளின் காதல் அனுபவங்கள்

காதல் அனு­ப­வங்­கள் குறித்து இளம் நடி­கை­கள் தங்­கள் அனு­ப­வங்­களை சமூக வலைத்­த­ளங்­களில் பகிர்ந்­துள்­ள­னர். அப்பதிவு­கள் ரசி­கர்­களை வெகு­வா­கக் கவர்ந்­துள்­ளன.

'துய்­மை­யான காதல்' என்ற தலைப்­பில் கீர்த்தி சுரேஷ் டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார். அத­னு­டன் ஒரு புகைப்­ப­டத்­தை­யும் அவர் வெளி­யிட்­டுள்­ளார்.

அண்­மை­யில் இசை­ய­மைப்­பா­ளர் அனி­ருத்­து­டன் இவர் எடுத்­துக்­கொண்ட சில புகைப்­ப­டங்­கள் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தின. இரு­வ­ரும் காத­லிப்­ப­தா­கக் கூறப்­பட்­டது. ஆனால், கீர்த்தி சுரேஷ் தரப்பு இதை மறுத்­தி­ருந்­தது.

இரு­வ­ரும் தங்­கள் தொழி­லில் மட்­டுமே தற்­போது கவ­னம் செலுத்தி வரு­வ­தா­க­வும் நண்­பர்­க­ளாக மட்­டுமே பழ­கு­வ­தா­க­வும் கீர்த்­தி­யின் தந்தை தெரி­வித்­தி­ருந்­தார்.

தற்­போது படப்­பி­டிப்­புக்­காக துபாய் சென்­றுள்­ளார் கீர்த்தி சுரேஷ். அத­னால் குடும்­பத்­தா­ரின் அரு­காமை இல்­லா­மல் தவிப்­ப­தாக கூறி வரு­கி­றார்.

இந்­நி­லை­யில்தான் தாயா­ரு­டன் இருக்­கும் புகைப்­ப­டத்தை அவர் வெளி­யிட்­டுள்­ளார். அதில் கீர்த்­திக்கு அவ­ரது தாயார் மேனகா மரு­தாணி வைத்து விடும் காட்சி பதி­வாகி உள்­ளது. இப்­ப­தி­வுக்கு 'தூய்­மை­யான வடி­வத்­தில் காதல்' என்று கீர்த்தி தலைப்­பிட்­டுள்­ளார். இது ஊர­டங்­கின்­போது எடுக்­கப்­பட்ட புகைப்­ப­டம். கீர்த்­தி­யின் ரசி­கர்­கள் இதைப் பர­வ­லா­கப் பகிர்ந்து வரு­வ­து­டன் இந்­தத் தூய்­மை­யான காதலுக்கு ஈடு இணை இல்லை என்­றும் பின்­னூட்­ட­மிட்­டுள்­ள­னர்.

இதே­போல் நடிகை ராஷி கன்னா, சிறு வய­தில் தனக்கு வந்த காதல் கடி­தங்­கள் குறித்து பதி­விட்­டுள்­ளார். பள்­ளி­யில் படித்­த­போது மூத்த மாண­வன் ஒரு­வன் இவ­ரைக் காத­லித்­தானாம். பல­முறை ராஷிக்கு காதல் கடி­தம் கொடுக்­க­வும் முயன்­றா­னாம்.

"அப்­போ­தெல்­லாம் அவ­னி­ட­மி­ருந்து எப்­ப­டியோ தப்­பித்து விடு­வேன். ஆனா­லும் ஒரு­நாள் சிக்­கிக் கொண்­டேன். அவன் தைரி­ய­மாக என்­னைப் பின்­தொ­டர்ந்து வந்து என் கையில் ஒரு கடி­தத்தை திணித்து­விட்­டான். கூடவே ஒரு­ ரோஜா பூவை­யும் கொடுத்­துச் சென்­றான்.

"தொடக்­கத்­தில் எனக்கு அந்த மாண­வனை அறவே பிடிக்­காது. ஆனால், தன் காதல் கடி­தத்­தில் என்­னப் பற்றி வர்­ணித்து பெரு­மை­யாக குறிப்­பிட்டு இருந்­த­தைப் படித்­த­போது மகிழ்ச்­சி­யாக இருந்­தது. அந்­தக் கடி­தத்தை பத்­தி­ர­மாக எடுத்­துச் சென்று என் அம்­மா­வி­டம் கொடுத்­தேன். அவ­ரும் அதைப் படித்­துப் பார்த்­தார்.

"'உன்­னைப் பற்றி வேறு யாரா­லும் இந்­த­ளவு வர்­ணிக்க முடி­யாது போல் இருக்­கிறது. நீ இத்­தனை அழ­காக இருப்­பதை நாங்­களே கூட கவ­னிக்­க­வில்லை. அவ­னைப் பிடித்­தி­ருக்­கி­றதா... உண்­மை­யைச் சொல்' என்­றார் அம்மா. எனக்கு அது­போன்ற எண்­ணம் இல்லை என்­றேன்.

"அதன்பிறகு அந்த மாணவனைப் பற்றி நான் யோசித்ததே இல்லை. அவனைச் சந்திக்கவும் இல்லை. அவன் என்னவானான் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது," என்று ராஷி கன்னா தமது சமூக வலைத்தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!