விளைவுகளை அலசும் கதையில் ரெபா

விளைவுகளை அலசும் கதையில் ரெபா

2 mins read
59e501e5-ae2c-45ae-abf5-91a71f09b5a3
-

தமிழ் சினி­மா­வில் அண்­மைக்­கா­ல­மாக மழையை மைய­மாக வைத்து சில படங்­கள் உரு­வாகி வரு­கின்­றன. அவற்­றுள் 'மழை­யில் நனை­கி­றேன்' பட­மும் ஒன்று.

நாய­கி­யின் அறி­மு­கக் காட்­சி­யும் படத்­தின் இறு­திக் காட்­சி­யும் மழை­யில் நடக்­கு­மாம். அத­னால் இப்­படி ஒரு தலைப்­பைச் சூட்­டி­ய­தா­கச் சொல்­கிறது படக்­குழு.

ராஜேஷ்­கு­மார், ஸ்ரீவித்யா ராஜேஷ் இணைந்து தயா­ரித்­துள்ள இப்­ப­டத்தை டி.சுரேஷ்­கு­மார் இயக்கி உள்­ளார். வெவ்­வேறு சமூ­கங்­க­ளைச் சேர்ந்த இளம் காதல் ஜோடி எதிர்­கொள்­ளும் பிரச்­சினை­களை அல­சு­கிறது 'மழை­யில் நனை­கி­றேன்'.

இதில் ரெபா மோனிகா நாய­கி­யாக நடித்­துள்­ளார். அன்­சன் பால், ராஜா இரு­வ­ரும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர்.

"பொறி­யி­யல் படித்து வரும் பிரா­மண சமூ­கத்­தைச் சேர்ந்த பெண்­ணுக்கு ஒரு கிறிஸ்­துவ இளை­ஞன் மீது காதல் உண்­டா­கிறது. அந்த இளை­ஞ­னுக்கோ எந்த வேலை­யும் இல்லை. வெறு­மனே ஊர் சுற்­றிக் கொண்­டி­ருக்­கி­றான்.

"இந்­தக் காத­லுக்கு எதிர்ப்பு கிளம்­பு­கிறது. அதையும் மீறி காத­லர்­கள் என்ன செய்­கி­றார்­கள், அத­னால் ஏற்­படும் விளை­வு­கள் என்ன என்­பதை இப்­ப­டம் அல­சு­கிறது.

"இப்­போ­தெல்­லாம் காத­லில் ஏதா­வது பிரச்­சினை ஏற்­ப­டும்­போது ஒன்று காத­லர்­கள் காயப்­பட வேண்­டி­யி­ருக்­கிறது அல்­லது காத­லர்­க­ளின் பெற்­றோர் காயப்­பட நேரி­டு­கிறது. இது குறித்­தும் இந்­தப் படம் பேசும்," என்­கி­றார் ரெபா மோனிகா.

படத்­தில் சண்­டைக்­காட்­சி­கள் இருக்­கின்­றன என்­றா­லும் வில்­லன் என்று யாரும் கிடை­யா­தாம்.

வெளி­யீடு காணும் முன்பே உல­கத் திரைப்­பட விழாக்­களில் திரை­யிட தேர்­வாகி உள்­ளது. இது தமக்கு மகிழ்ச்சி அளிப்­ப­தா­கச் சொல்­கிறார் ரெபா.

"இப்­போ­தெல்­லாம் சமூ­கப் பிரச்­சி­னை­களை அல­சக்­கூ­டிய படங்­களை ரசி­கர்­கள் விரும்­பிப் பார்க்­கி­றார்­கள். மேலும் நியா­ய­மான அல­சல் என்­றால் அவற்றை வர­வேற்று ஆத­ரிக்­கி­றார்­கள்.

"இந்­தப் படம் உண்­மை­யில் நல்ல கருத்­து­களை முன்­வைக்­கும் வகை­யில் உரு­வாகி உள்­ளது. எனவே ரசி­கர்­க­ளின் ஆத­ரவு கிடைக்­கும் என நம்­பு­கி­றேன்," என்­கி­றார் இயக்குநர் சுரேஷ்­கு­மார்.

அடுத்த மாதம் திரை­கா­ணும் இப்­ப­டத்­துக்கு விஷ்ணு பிர­சாத் இசை­ய­மைத்­துள்­ளார். இயக்­கு­நர் விஜி­யும் கவின் பாண்­டி­ய­னும் வச­னங்­களை எழுதி உள்­ள­னர்.

"ரெபா மோனி­கா­வைப் பொருத்­த­வரை மிகுந்த அர்ப்­பணிப்­பு­டன் நடிக்­கக் கூடி­ய­வர்­. தனது கதா­பாத்­தி­ரத்தை அழ­காக மெரு­கேற்­று­வார். அதை கண்கூடாகப் பார்க்க முடிந்தது.

"பிகில்' படத்­திற்காக அவர் எந்­த­ள­வுக்கு பேசப்­பட்­டாரோ அதை­விட இந்­தப் படம் அவ­ரைப் பற்றி அதி­கம் பேச வைக்­கும்.

"இந்­தப் படத்­தில் நாங்­கள் எதிர்­பார்த்­த­தை­விட சிறந்த பங்­க­ளிப்­பைத் தந்­துள்­ளார். தமிழ் சினி­மா­வில் அவ­ருக்கு நல்ல எதிர்­கா­லம் உள்­ளது," என்று மனதாரப் பாராட்­டு­கி­றார் இயக்­கு­நர் சுரேஷ் குமார்.