எட்டு மாதங்கள் காத்திருந்து படத்தை திரையரங்குகளில் வெளியிட்டதற்குரிய பலன்களை 'மாஸ்டர்' அறுவடை செய்து வருகிறது.
'பாகுபலி-2' படத்தின் வசூலை முறியடித்துள்ளார் 'மாஸ்டர்'.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியீடு கண்ட 'மாஸ்டர்' வசூலை வாரிக் குவித்தது.
இதையடுத்து தமிழில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை 'பாகுபலி-2' படத்திடம் இருந்து பறித்துள்ளது விஜய் படம்.
இந்த சாதனையால் விஜய் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் நான்கு இடங்களை விஜய் படங்கள்தான் கைப்பற்றியுள்ளன.
'பிகில்', 'சர்கார்', 'மெர்சல்' ஆகிய படங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
'மாஸ்டர்' படத்தில் உண்மையான வசூல் நிலவரத்தை திரையரங்குகள் தயாரிப்புத் தரப்பிடம் தெரிவிக்கவில்லை என்று அண்மையில் புகார் எழுந்தது.
இதனால் விஜய் மிகுந்த கோபத்தில் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் இத்தகைய சிக்கல்களையும் கடந்து அப்படம் வசூலில் சாதனை புரிந்துள்ளது என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப்புள்ளிகள்.
இதனால் விஜய்யின் சந்தை மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.