கோடிக்கணக்கான மக்களை கவர்ந்த தமிழ்ப் பாடல்

கோடிக்கணக்கான மக்களை கவர்ந்த தமிழ்ப் பாடல்

2 mins read
e258447c-ceb1-49a6-9c75-ca14b7fd5bc8
-

திரைப்­ப­டத்­தில் வெளி­யா­காத ஒரு தமிழ்ப் பாடல் கோடிக்­க­ணக்­கான மக்­க­ளால் ரசிக்­கப்­பட்டு வெற்றி பெற்­றி­ருக்­கிறது. அதற்கு அந்­தப் பாட­லின் எளி­மை­யான தமிழ் வார்த்­தை­களும் இசை­யும் பாட­லைப் பாடி­ய­வர்­க­ளும்­தான் கார­ணம் என்­கின்­றது சமூக வலைத்­த­ளம்.

வழக்­க­மான அர்த்­தம் புரி­யாத பாடல்­க­ளைக் கேட்டு கேட்டு புளித்­துப்­போன காது­க­ளுக்கு, 'என்­ஜாய் எஞ்­சாமி' பாடல் இத­மாய் வந்து நிற்­கிறது. கடும் தாகத்­தில் வெய்­யி­லில் அலைந்து திரிந்து வந்­த­வ­னுக்கு, ஐஸ்கட்டி போட்டு கொடுத்த பழர­சம்­போல, தித்­திப்­பாய் இசை சுவைக்­கின்­றது.

ஒன்­றுக்­கும் ஆகாத அர்த்­தம் புரி­யாத பாடல்­கள் எல்­லாம் உலக சாதனை படைக்கும்போது அதற்­கான அத்­தனை தகு­தி­யும் கொண்ட இந்தப் பாடல் ஏன் வெற்றி பெறக்­கூ­டாது என்­கின்­ற­னர் திரை­யு­ல­கத்­தி­னர்.

சினிமா பிர­ப­லங்­களை மட்­டுமே ஊக்­கு­விக்­கக்­கூ­டாது. வெளி­யி­லும் பெயர் தெரி­யாத நிறைய திற­மை­சா­லி­கள் இருக்­கின்­ற­னர் என்­பதை உணர்த்­து­கிறது இந்­தப் பாடல்.

'என்­ஜாய் எஞ்­சாமி' பாடலை, இசை­ய­மைப்­பா­ளர் சந்­தோஷ் நாரா­ய­ண­னின் மகள் தீயும் தெருக்­கு­ரல் அறி­வும் இணைந்து பாடி­யுள்­ள­னர்.

படத்­தில் இருக்­கும் 'தீ' ஒன்­றும் சாதா­ரண பெண் கிடை­யாது. 'கபாலி' படத்­தில் வரும் 'கண்­ணம்மா கண்­ணம்மா', 'இறு­திச் சுற்று' படத்­தில் 'ஏ சண்­டக்­காரா', 'மாரி 2' படத்­தில் 'ரெளடி பேபி', 'ஜிப்ஸி' படத்­தில் 'எங்­கும் மாய ஊஞ்­சல்', 'சூர­ரைப் போற்று' படத்­தில் 'காட்­டுப் பயலே', 'ஜகமே தந்­தி­ரம்' படத்­தில் 'ரகிட ரகிட' என வெற்றி பெற்ற பாடல்­க­ளைப் பாடி­ய­வர் இவர்.

சுய­மாக ஒரு பாடல் தயா­ரிக்க வேண்­டும் என்ற முனைப்­பில், தீயும் தெருக்­கு­ரல் அறி­வும் இணைந்து, ரகு­மான் இசை அமைப்­பில் உரு­வா­ன­து­தான் இந்த 'என்­ஜாய் எஞ்­சாமி' பாடல்.

வெறும் பாட­லா­கக் கேட்­டால், ஒரே முறை­யில் கடந்து சென்­று­வி­டு­வோம். மீண்­டும் மீண்­டும் அர்த்­தம் புரிந்து கேட்­டுப் பார்த்­தால்

தமி­ழில் வெளி­வந்த அற்­பு­த­மான படைப்பு இது என்று புரி­யும்.

சமூ­க­வி­யல், சூழ­லி­யல், அறி­வி­யல், இயற்கை, வலி என்று எல்­லாம் கலந்த ஒரு கல­வை­

யா­கத் தெரி­யும்.

பாட­லின் ஆரம்­பமே குல­வைச் சத்­த­மும் பறை இசை­யும் அசத்­து­கிறது. 'நல்­ல­படி வாழச்­சொல்லி இந்த மண்­ணக் கொடுத்­தானே

பூர்­வக்­குடி' என்­ப­தில் தொடங்­கும் ஆழ­மான கருத்து, பாடல் முடி­யும் வரை அப்­ப­டியே தொடர்­கிறது.

'பாட்­டன் பூட்­டன் காத்த பூமி, ஆட்­டம் போட்டு காட்­டும் சாமி, ராட்­டி­னம்­போல் சுத்தி வந்தா சேவ கூவுச்சி, அது போட்டு வச்ச எச்­ச­மெல்­லாம் காடா மாறுச்சி, நம்ம வீடா மாறுச்சி' இந்த வரி­கள் எல்­லாம் இயற்கை அறி­வி­யலை நமக்கு ஞாபகப்படுத்தும்.

கூடவே எல்­லோ­ருக்­கும் புரி­யும் எளி­மை­யான தமிழ் வரி­கள் சேர்ந்­த­தால், மிகப் பெரிய அள­வில் வெற்றி பெற்­றி­ருக்­கிறது இப்­பா­டல். மொழி தெரி­யா­த­வர்­களும் இந்­தப் பாடலை முணு­மு­ணுக்­கத் தொடங்கி உள்­ள­னர்.