வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தமன்னா

வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தமன்னா

2 mins read

கொரோனா விவ­கா­ரம் மெல்ல அடங்­கி­வ­ரும் நிலை­யில் கோடம்­பாக்­கம் மீண்­டும் முழு இயல்பு நிலைக்­குத் திரும்பி வரு­கிறது.

இத­னால் இது­வரை அமை­தி­யாக இருந்த திரைக்­க­லை­ஞர்­கள் தங்­க­ளுக்­கு­ரிய புதிய வாய்ப்­பு­களை வேட்­டை­யா­டத் துவங்கி உள்­ள­னர்.

இந்­நி­லை­யில், நடிகை தமன்னா பல நல்ல கதா­பாத்­தி­ரங்­களும் கதை­களும் தம்­மைத் தேடி வரு­வ­தாக மகிழ்ச்சி தெரி­வித்­துள்­ளார். தற்­போது தமிழ், தெலுங்கு, இந்தி என மும்­மொ­ழி­களில் நடித்து வரு­ப­வர், அடுத்து ஒரு வாழ்க்கை வர­லாற்­றுப் படத்­தில் நடிக்க இருப்­ப­தா­கத் தெரி­கிறது.

பழம்­பெ­ரும் நடிகை ஜமு­னா­வின் வாழ்க்­கை­யைப் பட­மாக்க உள்­ள­னர். இதற்­கான ஏற்­பா­டு­கள் நடை­பெற்று வரு­கின்­றன. 'தேவி­னேனே' தெலுங்கு படத்தை இயக்­கிய சிவ­நாகு, ஜமு­னா­வின் வாழ்க்கை வர­லாற்­றுப் படத்தை இயக்­கு­வார் எனத் தெரி­கிறது.

கடந்­தாண்டு நாக் அஸ்­வின் இயக்­கத்­தில் பழம்­பெ­ரும் நடிகை சாவித்­தி­ரி­யின் வாழ்க்கை வர­லாற்­றுப் படம் வெளி­யீடு கண்­டது. 'மகா­நதி' என்ற தலைப்­பில் வெளி­யான இப்­ப­டத்­தில் கீர்த்தி சுரேஷ் நாய­கி­யாக நடித்­தி­ருந்­தார்.

விமர்­சன, வசூல் ரீதி­யில் நல்ல வர­வேற்­பைப் பெற்ற இப்­ப­டத்­தில் சிறப்­பாக நடித்த கீர்த்­திக்கு சிறந்த நடி­கைக்­கான இந்­திய தேசிய திரைப்­பட விருது கிடைத்­தது. இந்­நி­லை­யில் அக்­கா­லத்­தில் ரசி­கர்­கள் மத்­தி­யில் பிர­ப­ல­மாக இருந்த நடிகை ஜமு­னா­வின் வாழ்க்­கை­யை­யும் பட­மாக்க முயற்­சி­கள் தொடங்­கப்­பட்­டுள்­ளன.

இது­தொ­டர்­பாக படத்­தின் தயா­ரிப்­புத் தரப்பு தமன்­னா­வு­டன் பேச்­சு­வார்த்தை நடத்தி உள்­ளது. இயக்­கு­நர் விவ­ரித்த திரைக்­க­தை­யைக் கேட்ட தமன்னா, தனது முதற்­கட்ட சம்­ம­தத்­தைத் தெரி­வித்­துள்­ளா­ராம்.

அதி­கா­ர­பூர்வ அறி­விப்­புக்கு முன்­னர் தமது தரப்­பில் முன்­வைக்­கப்­படும் சில கேள்­வி­கள், சந்­தே­கங்­க­ளுக்­கான விளக்­கங்­களை தமன்னா எதிர்­பார்­பார்ப்­ப­தா­க­வும் அவை திருப்தி அளிக்­கும் பட்­சத்­தில் அவர் தமது முழு சம்­ம­தத்­தைத் தெரி­விப்­பார் என்­றும் படக்­குழு தரப்­புத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த 1952ஆம் ஆண்டு 'புட்­டிலு' தெலுங்­குப் படத்­தின் மூலம் திரை­யு­ல­கில் அறி­மு­க­மான ஜமுனா தமிழ், கன்­ன­டம், தெலுங்கு, இந்தி மொழி­களில் இரு­நூ­றுக்­கும் மேற்­பட்ட படங்­களில் நடித்­துள்­ளார். சுமார் 30 ஆண்­டு­கள் தெலுங்­குத் திரை­யு­ல­கில் கோலோச்­சிய அவர் தமிழ் ரசி­கர்­க­ளை­யும் தன் நடிப்­பால் கவர்ந்­த­வர்.

இன்­னும் திரை­யு­ல­கில் பவனி வரும் ஜமு­னா­வின் நடிப்­பில் 'அன்­ன­பூர்­ன­மா­கரி மண­வாடு' என்ற படம் விரை­வில் திரை காண உள்­ளது. தமன்­னா­வைப் பொறுத்­த­வரை தான் நடித்த 'சீட்டி மார்' படத்­தின் வெளி­யீட்­டுக்­காக ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கி­றார். இது தமி­ழி­லும் வெளி­யா­கிறது.

இதில் முதன்­மு­றை­யாக திரை­யில் கபடி வீராங்­க­னை­யா­கத் தோன்­று­கி­றார். கோபி­சந்த் நாய­க­னாக நடித்­துள்ள இப்­ப­டம் எதிர்­வ­ரும் ஏப்­ரல் 2ஆம் தேதி உல­கெங்­கும் வெளி­யீடு காண்­கிறது. இதில் பூமிகா சாவ்லா, சூரிய வன்சி உள்­ளிட்ட பலர் நடித்­துள்­ள­னர்.

பிப்­ர­வரி 22ஆம் தேதி வெளி­யி­டப்­பட்ட இப்­ப­டத்­தின் குறு முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்­புக்கு ரசி­கர்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது. மணி­சர்மா இசை­ய­மைத்­துள்­ளார்.