'பத்து ஆண்டுகளாக காத்திருந்தேன்'

'பத்து ஆண்டுகளாக காத்திருந்தேன்'

3 mins read
a7ef7446-f9c1-4cdb-b1b6-a20f671ae1ae
-

அனுஷ்­கா­போல ராணி­யாக, நிறைய நகை­களை அணிந்து நடிக்­க­வேண்­டும் என்ற ஆசை தற்­பொ­ழுது நிறை­வேறி இருப்­ப­தாக சமந்தா மகிழ்ச்­சி­யு­டன் தெரி­வித்து இருக்­கி­றார்.

மகா­கவி காளி­தாஸ் எழு­திய

'சாகுந்­த­லம்' காவி­யத்தை தெலுங்­கில் பட­மாக எடுக்கி­றார்­கள். தமிழ், தெலுங்கு மொழி­களில் தயா­ரா­கும் இந்­தப் படத்தை குண­சே­கர் இயக்­கு­கி­றார்.

சகுந்­த­லை­யாக சமந்­தா­வும் அவ­ரது காத­லன் துஷ்­யந்­த­னாக மலை­யாள இளம் நடி­கர் தேவ் மோக­னும் நடிக்­கி­றார்­கள். அண்­மை­யில் இதன் படப்­பி­டிப்பு

ஹைத­ரா­பாத்­தில் பூஜை­யு­டன் தொடங்­கி­யது.

விசு­வா­மித்­திர முனி­வ­ருக்­கும்

மேன­கைக்­கும் பிறந்­த­வள் சகுந்­தலை. இவர் மன்­னர் துஷ்­யந்­தனை காத­லிக்­கி­றார். பின்­னர் காந்­தர்வ மணம் புரிந்து கொள்­கி­றார். ஒரு

கட்­டத்­தில் அவ­ரைப் பிரி­கி­றார் துஷ்­யந்­தன்.

முனி­வர் சாபத்­தால், துஷ்­யந்­தன் சகுந்தலையை மறக்­கும் நிலை ஏற்­ப­டு­கிறது. பல்­வேறு

துன்­பங்­க­ளைக் கடந்து

கண­வ­ரு­டன் சகுந்­தலை

எப்­படி இணை­

கி­றார் என்­ப­து­தான் கதை.

இந்­தக் கதையை

மைய­மாக வைத்­து­தான் 'சாகுந்­த­லம்' படம் உரு­வா­கிறது.

இதன் படப்­பி­டிப்­பில் கலந்துகொண்ட சமந்தா, செய்தியாளர்களிடம் பேசி­ய­போது, "இது­வரை 50 படங்­களில் நடித்துவிட்­டேன். வணிக ரீதி­யான படம் முதல் மர்­மம் நிறைந்த படம் வரை குணச்­சித்­திரம், வில்லி, சண்­டைக்­கா­ரி­ என பல­வி­த­மான கதா­பாத்­தி­ரங்­களில் நடித்திருக்கிறேன்.

இது­போன்ற படங்­களில் நடிப்­பது எனக்கு எளி­தாக இருந்­தது. கார­ணம் அதற்கு அவ்­வ­ள­வாக கஷ்­டப்­பட்டு நடிக்­கத் தேவை­யில்லை.

"ஆனால்

'சாகுந்­தலை' படம் அப்­படி அல்ல. இள­வ­ர­சி­யாக நடிக்கப் போகி­றேன் என்­ற பெருமை ஒரு­பு­றம் இருந்­தா­லும் அதைச் சிறப்­பாக செய்ய வேண்­டுமே என்­கிற கவலை மறு­பு­றம் இருக்­கிறது.

"இது­போன்ற சரித்­தி­ரப் படத்­திற்­காக 10 ஆண்­டு­கள் காத்­தி­ருந்­தேன். அது இப்­போது நிறை­வேறி இருக்­கிறது. நிறைய நகை­கள் அணிந்து, பள­பள உடை­கள் அணிந்து சரித்­திர படத்­தில் நடிக்­க­வேண்­டும் என்ற ஆசை இந்­தப் படத்­தில் நிறை­வேறி இருக்­கிறது.

"பிரம்­மாண்ட அரங்­கு­களில் பெரும் பொருட்­செ­ல­வில் தயா­ரா­கும் 'சாகுந்­த­லம்' படத்­தின் ஒரு பகு­தி­யாக நான் இருப்­பது பெரு­மை­யாக இருக்­கிறது. இந்­தப் படத்­திற்­காக நான் 100 விழுக்­காடு என்­னு­டைய உழைப்­பைக் கொடுப்­பேன்," என்­றார் சமந்தா. இந்­தப் படத்­தின் இயக்­கு­நர்

ஏற்­கெ­னவே, அனுஷ்கா நாய­கி­யாக நடித்து, 2015ல் வெளி­யான வர­லாற்­றுப் பட­மான 'ருத்­ர­மா­தேவி' படத்தை இயக்­கி­ய­வர்.

அந்­தப் படத்­தில் ராணா, அல்லு

அர்­ஜுன் உட்­பட பலர் நடித்­தி­ருந்­த­னர். தமி­ழி­லும் இந்­தப் படம் வெளி­யா­னது.

சமந்தா அண்­மை­யில் மகா சிவ­ராத்­திரி விழா­வின்போது கோவை­யில் உள்ள ஈஷா யோகா மையத்­திற்­குச் சென்று கண்­

வி­ழித்து அங்கு நடை­பெற்ற நிகழ்ச்சியில் கலந்­து­கொண்­டார்.

கொரோனா அச்­சு­றுத்­தல் கார­ண­மாக இந்த ஆண்டு குறை­வான பக்­தர்­களே இந்த மையத்­திற்­குள் அனு­ம­திக்­கப்­பட்­டார்­கள். இந்த நிகழ்ச்­சி­யில் நடி­கை­கள் சமந்தா, ரகுல் பிரீத் சிங், லட்­சுமி மஞ்சு உள்­பட பலர் கலந்துகொண்­ட­னர்.

அதோடு சக நடி­கை­க­ளைத்

தன்­னு­டன் இணைத்­துக்­கொண்டு

உற்­சாகமாக நட­ன­மா­டி­யி­ருக்­கி­றார் சமந்தா. மேலும், தனது சக தோழி­க­ளு­டன் ஆதி­யோ­கி­யின் சிலை முன்பு எடுத்­துக்­கொண்ட ஒரு புகைப்­ப­டத்­தை­யும் தனது இன்ஸ்­ட­கி­ரா­மில் பதி­விட்­டுள்­ளார் சமந்தா.

மேலும் இவர் அண்மையில் வெளியிட்ட ஒரு செய்தி திரையுலகில் பிரச்சினையைக் கிளப்பியிருக்கிறது.

இவர் நடி­கை­க­ளின் ஊதி­யம் நடி­கர்­

க­ளைப்­போல கிடை­யாது. படத்­திற்­குப் படம் நடி­கர்­க­ளின் ஊதி­யம் கோடிக்­க­ணக்­கில் ஏறிக்­கொண்டே போகிறது. ஆனால் நடி­கைக­ளின் ஊதி­யம் மட்­டும் அதே நிலை­யில் இருக்­கிறது. ஊதியத்தை உயர்த்திக் கேட்­டால் பிரச்­சி­னை­யாக்கி விடு­கி­றார்­கள். இதில் நியா­யமே இல்லை. இதுக்கு ஒரு தீர்வு வேண்­டும் என்று நடி­கை­க­ளின் சார்­பாக துணிச்­ச­லாக தன்­னு­டைய கருத்­தினை தெரி­வித்து இருந்தார் சமந்தா.

நிறைய நகைகள், பளபளக்கும் உடைகள் அணிந்து ராணியாக நடிக்கிறார் சமந்தா