தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திரைத் துளிகள்

2 mins read

பிரபுதேவாவிற்கே இந்த நிலையா?

தமிழ்த் திரை­யு­ல­கத்­தில் ரஜி­னிக்கு இணை­யாக சம்­ப­ளம் வாங்­கி­ய­வர் நடி­கர் பிரபுதேவா. முன்­னணி நாய­க­னாக விளங்­கி­னா­லும் இவர் நடித்து முடித்த 'யங் மங் சங்' படத்­தைப் பற்­றிய செய்­தி­கள் 2019ல் வெளி­யா­கின. அதன்பிறகு அந்­தப் படம் வெளி­யா­க­வில்லை. அத­னைத் தொடர்ந்து 'பொன்­மா­ணிக்­க­வேல்', 'தேள்' படங்­கள் எடுக்­கப்­பட்­டன. அந்­தப் படங்­களும் வெளி­யா­க­வில்லை. தற்­பொ­ழுது இவர் பகீரா', 'ஊமை விழி­கள்' படங்­களில் நடித்து வரு­கி­றார். எத்­த­னையோ படங்­கள் வெளி­வ­ரா­மல் தவிப்­ப­தற்­கும் முன்­னணி நடி­க­ரும் இந்­தி­யில் வெற்றிபெற்ற இயக்­கு­நருமான பிரபு தேவா­வின் படங்­கள் வெளி­வ­ரா­மல் தவிப்­ப­தற்­கும் வித்­தி­யா­சம் இருக்­கிறது என்­கின்­ற­னர் அவ­ரின் ஆத­ர­வா­ளர்­கள்.

சாதனை படைக்கும் 'கேஜிஎப் 2'

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் கதாநாயகனாக நடிக்கும் 'கேஜிஎப் 2' படத்தின் முன்னோட்டக் காட்சி கடந்த ஜனவரி மாதம் இணையத்தில் வெளியாகி முந்தைய பல இந்திய சாதனைகளை முறியடித்து வருகிறது. இதற்கு முன்பு 2019ஆம் ஆண்டு வெளிவந்த 'முலன்' படத்தின் முன்னோட்டக் காட்சிதான் 175 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனைப் படைத்தது. அந்தச் சாதனையைத் தற்போது 'கேஜிஎப் 2' முறியடித்துள்ளது. இந்தப் படம் ஜூலை 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தடகள வீராங்கனையாக ஐஸ்வர்யா

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை சாந்தி செளந்தரராஜன் வாழ்க்கை திரைப்படமாகிறது. அவரின் வாழ்க்கையில் நடந்த திருப்பங்கள் நிறைந்த சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. சாந்தி கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். புதுக்கோட்டை அருகே உள்ள சாந்தி செளந்தரராஜனின் கிராமத்தில் படப்பிடிப்பை தொடங்கி பஞ்சாப், கத்தார், ஓமன் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.