'நம்பிக்கையோடு இருந்தேன்'

'நம்பிக்கையோடு இருந்தேன்'

3 mins read
749fabe3-decf-4b0c-a3ad-e600ed09b0ff
-

திரும்­பிய பக்­க­மெல்­லாம் பாராட்­டு­கள் குவி­வதால் உற்­சா­கத்­தில் மிதக்­கி­றார் ரெஜினா கஸாண்ட்ரா.

கார­ணம் அண்­மை­யில் வெளி­யீடு கண்ட 'நெஞ்­சம் மறப்­ப­தில்லை' படம். செல்­வ­ரா­க­வன் இயக்­கத்­தில் உரு­வா­கி­யுள்ள இப்­ப­டத்­துக்கு கல­வை­யான விமர்­ச­னங்­கள் கிடைத்­துள்­ளன.

எனி­னும், ரெஜி­னா­வின் நடிப்பு மிக நன்­றாக இருப்­ப­தாக பெரும்­பா­லா­னோர் கூறி­யுள்­ள­னர்.

"முன்பே வெளி­யீடு கண்­டி­ருக்க வேண்­டிய ப­டம் இது. இப்­போ­தா­வது வெளி­யா­னதே என்று முத­லில் நிம்­மதி அடைந்­தேன்.

"இப்­போது கிடைக்­கும் பாராட்­டு­க­ளைப் பார்க்­கும்­போது முன்பே வெளி­யாகி இருந்­தால் திரை­உ­ல­கில் எனது மதிப்பு இந்­நே­ரம் இரு­ம­டங்­காக அதி­க­ரித்­தி­ருக்­கும் என நினைக்­கத் தோன்­று­கிறது," என்­கி­றார் ரெஜினா.

அவர் சொல்­வ­தும் உண்­மை­தான். கார­ணம் ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன்பே தொடங்­கப்­பட்ட படம் 'நெஞ்­சம் மறப்­ப­தில்லை'.

சற்றே தாம­த­மா­னா­லும் முழுப் படத்­தை­யும் எப்­போதோ முடித்து விட்­டார் செல்­வ­ரா­க­வன்.

அதன்பிறகு இப்­ப­டத்­துக்­கான வெளி­யீட்­டுத் தேதி பல­முறை அறி­விக்­கப்­பட்­டது. ஆனால், படம் திரைக்கு வந்த பாடில்லை. எப்­ப­டியோ பிரச்­சி­னை­க­ளுக்கு முடிவு காணப்­பட்டு இப்­போது வெளி­யா­கி­யுள்­ளது.

"ஒவ்­வொரு முறை­யும் பட வெளி­யீட்­டுத் தேதி அறி­விக்­கப்­ப­டும்­போது எனக்கு ஏமாற்­றங்­கள் காத்­தி­ருக்­கும்.

"காலை­யில் அறி­விப்­பைப் பார்த்­து­விட்டு பலர் என்­னைத் தொடர்பு கொண்டு பேசு­வார்­கள். என்னுடைய கைபேசி­யில் வாழ்த்து செய்­தி­கள் குவி­யும்.

"ஆனால், திரை­ய­ரங்­குக்­குச் சென்­றால் கடைசி நேரத்­தில் வெளி­யீடு ரத்­தாகிவிட்­ட­தாக தக­வல் கூறு­வார்­கள். இப்­படி பல­முறை எனது எதிர்­பார்ப்பு வீணா­கிப் போனது," என்­கி­றார் ரெஜினா.

இந்த ஏமாற்­றங்­க­ளுக்கு மத்­தி­யில் இப்­ப­டம் எப்­போது வெளி­யீடு கண்­டா­லும் நிச்­ச­யம் வெற்றி பெறும் என்ற நம்­பிக்கை மட்­டும் மனதை விட்டு அக­ல­வில்­லை­யாம். கார­ணம் செல்­வ­ரா­க­வ­ன் இயக்­கத்­தின் மீது தனக்கு மிகுந்த நம்­பிக்கை இருந்­தது என்­கி­றார்.

'சக்ரா', 'நெஞ்­சம் மறப்­ப­தில்லை' என அடுத்தடுத்து இவர் எதிர்­மறை கதா­பாத்­தி­ரங்­களில் நடித்த படங்­கள் வெளி­யாகி உள்­ளன. இனி அடுத்த ஓராண்­டுக்கு இப்­ப­டிப்­பட்ட கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்கமாட்­டா­ராம்.

வில்லி வேடத்­தில் நடிப்­ப­தற்­கா­கத்­தான் இரு­சக்­கர வாக­னங்­கள் ஓட்ட கற்­றுக் கொண்­டீர்­களா என்று கேட்­டால், அப்­ப­டி­யெல்­லாம் ஏது­மில்லை என சிரிப்­பு­டன் பதி­ல­ளிக்­கி­றார்.

"நான் ஏற்­கெ­னவே தெலுங்­கில் 'எவரு' படத்­தில் வில்­லி­யாக நடித்­துள்­ளேன். அதன்­பி­ற­கு­தான் 'சக்ரா' வாய்ப்­புக் கிடைத்­தது. நான் ஏற்ற கதா­பாத்­தி­ரத்­துக்கு 'புல்­லட்' ஓட்ட தெரிந்­தி­ருக்க வேண்­டும் என்று இயக்­கு­நர் கூறி­னார். அத­னால் கற்­றுக்கொண்­டேன்.

"இது­கு­றித்து ரசி­கர்­களில் சிலர் கிண்­டல் செய்­வார்­கள் என்று கூட தோன்­றி­யது. ஆனால் அதற்கு நேர்­மா­றாக, இரு­சக்­கர வாக­னம் ஓட்­டும்­போது கூட அழ­காக இருக்­கி­றீர்­கள். இது கம்­பீ­ர­மான அழகு என்­றெல்­லாம் பலர் பாராட்டி உள்­ள­னர்," என்று சொல்­லும் ரெஜினா, தற்­போது தமி­ழில் மட்­டும் நான்கு படங்­களில் நடித்து வரு­கி­றார்.

இத­னால் தின­மும் ஏதே­னும் ஒரு படப்­பி­டிப்­பில் பங்­கேற்க வேண்டி உள்­ள­தாம். கொரோனா காலம் என்­ப­தால் தகுந்த முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களைப் பின்­பற்­று­கி­றார்.

"அண்­மை­யில் மும்பை சென்­றி­ருந்­தேன். இணை­யத் தொட­ருக்­கான படப்­பி­டிப்பு அங்கு நடை­பெற்­ற­போ­து­ கொ­ரோனா வழி­காட்டி நெறி­மு­றை­க­ளைப் பின்­பற்­று­வ­தில் மிகுந்த கண்­டிப்­பும் கெடு­பி­டி­யும் காட்­டி­னர்.

"மும்பையில் இப்போது இடைவிடாமல் பணியாற்றுகிறார்கள். படப்­பி­டிப்­புத் தளங்களில் தின­மும் நான்­கைந்து முறை அனை­வ­ருக்­கும் உடல் வெப்­பம் பரி­சோ­திக்­கப்­ப­டு­கிறது. படப்­பி­டிப்­பின் இடை­வே­ளை­யி­லும்­கூட அனை­வ­ரும் கட்டாயம் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருக்க வேண்­டும். தொடக்­கத்­தில் சற்றே சலிப்­பும் எரிச்­ச­லும் ஏற்­பட்­டது.

"ஆனால், மொத்­தப் படப்­பி­டிப்­பும் முடி­வ­டைந்த பிறகு ஒரு­வ­ருக்­குக்­கூட கிரு­மித்தொற்று ஏற்­ப­ட­வில்லை என்று தெரி­ய­ வந்­த­போது நிம்­ம­தி­யாக உணர்ந்­தேன். அப்­போ­து­தான் அவர்­கள் காட்­டிய கெடு­பிடிக்­கான கார­ண­மும் பல­னும் தெரி­ய­ வந்தது," என்று சொல்­லும் ரெஜினா, தொடர்ந்து தன்னை ரசி­கர்­கள் சவா­லான கதா­பாத்­தி­ரங்­களில் பார்க்க முடி­யும் என்­கி­றார்.

, :   

ரெஜினா