விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'.
மறைந்த இயக்குநர் ஜனநாதனின் உதவியாளர் வெங்கடகிருஷ்ணா இயக்கியுள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தின் நாயகி மேகா ஆகாஷ்.
விவேக், மோகன்ராஜா, மகிழ்திருமேனி, கனிகா, ரித்திகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
நல்ல கருத்துகளை முன்வைக்கும் இப்படத்தின் குறுமுன்னோட்டக் காட்சித் தொகுப்பு அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலை இன்று வெளியிட உள்ளனர்.
'முருகா' என்று தொடங்கும் இப்பாடலுக்கு அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என தாம் உறுதியாக நம்புவதாக இயக்குநர் வெங்கடகிருஷ்ணா அண்மைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

