திருமணத்திற்குப் பிறகு காஜலின் நிலை

திருமணத்திற்குப் பிறகு காஜலின் நிலை

2 mins read
ba15f931-1f7c-41fe-9e04-9fd7e9e47484
-

திரு­ம­ணத்­திற்கு முன்பு காஜல் அகர்­வால் விஜய், சூர்யா, அஜீத், ராம் சரண் போன்ற முன்­னணி நடி­கர்­க­ளு­டன் நடித்து வந்­தார். அண்­மை­யில் இவ­ருக்­குத் திரு­ம­ணம் நடந்தது. அதன்­பி­றகு அவ­ருக்கு முன்­பு­போல வாய்ப்­பு­கள் வரா­த­தால் மூத்த நடி­கர்­க­ளு­டன் சேர்ந்து நடிக்­கத் தொடங்கி இருக்­

கி­றார். இந்தக் காரணத்தால்தான் நடி­கை­கள் திரு­ம­ணத்­தைத்

தள்­ளிப்­போட்­டுக்­கொண்டே வரு­கி­றார்­கள் என்­கிறது திரை­உ­ல­கம்.

தமிழ், தெலுங்கு, இந்திப் படங்­களில் நடித்து வரும் காஜல் அகர்­வால், தொழில் அதி­பர் கவு­தம் கிட்ச்­லுவை கடந்த அக்­டோ­பர் மாதம் திரு­ம­ணம் செய்துகொண்­டார். திரு­ம­ணத்­திற்குப் பிற­கு அவருக்கு முன்புபோல் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

திரு­ம­ண­மா­கி­விட்­டாலே நடி­கை­களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது அரிதாகிவிடும். இந்­நி­லை­யில்

திரு­மதி ஆன பிறகு காஜல்

அகர்­வால் நடிக்க ஒப்­புக் கொண்­டி­ருக்­கும் படங்கள் குறித்து அவரது ரசி­கர்­கள் விவா­தித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.

மூத்த நடி­க­ரான நாகார்­ஜு­னாவை வைத்து பிர­வீன் சத்­தாரு இயக்­கும் படத்­தில் காஜல் அகர்­வால் நாய­கி­யாக நடிக்­கி­றார். விரை­வில் அந்­தப் படத்­தின் படப்

­பிடிப்­பில் கலந்­து­கொள்ள இருக்­

கி­றார்.

இந்­நி­லை­யில் அந்தப் படத்­தில் நடிப்­பது பற்றி காஜல் அகர்­வால் பேட்டி ஒன்­றில் கூறி­ய­போது, "தெலுங்குத் திரை­யு­ல­கில் என்

பய­ணம் சிறப்­பாக இருக்­கிறது. இங்­குள்ள மக்­கள் என் மீது பாச­மாக இருக்­கி­றார்­கள். நான் பிர­வீன் சத்­தாரு இயக்­கத்­தில் நாகார்­ஜுனா ஜோடி­யாக நடிக்க இருக்­கி­றேன். என் வாழ்க்­கை­யில் இது­தான் மிக­வும் சிறந்த கதா­பாத்­தி­ர­மாக இருக்­கப்போகிறது.

"படப்­பி­டிப்­பில் கலந்­து­கொள்ள

காத்­துக் கொண்­டி­ருக்­கி­றேன். சிறு­வ­ய­தில் இருந்தே எனக்கு நாகார்­ஜுனா மீது ஆசை. இந்­நி­லை­யில் அவ­ரு­டன் சேர்ந்து நடிக்­கப் போவ­தில் மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றேன்.

"நான் டோலி­வுட்­டில் இதுபோன்ற ஒரு கதா­பாத்­தி­ரத்­தில் இது­வரை நடிக்­கா­த­தால் இந்­தப் படம் எனக்கு வேறு ஓர் அனு­ப­வத்­தைக் கொடுக்­கும்," என்­றார்.

மெகா ஸ்டார் சிரஞ்­சீவி ஜோடி­யாக காஜல் அகர்­வால் நடித்­துள்ள 'ஆச்­சார்யா' படம் மே மாதம் 13ஆம் தேதி வெளி­யாக இருக்­கிறது. நண்­பர் ராம் சர­ணுக்­காக அவர் அப்­பா­வுக்கு ஜோடி­யாக 'ஆச்சார்யா' படத்தில் நடிக்க ஒப்­புக் கொண்­டார் காஜல்.

மேலும் தமி­ழில் காஜல் அகர்­வால் உலக நாய­கன் கமல் ஹாச­னுக்கு ஜோடி­யாக நடித்து வந்த 'இந்­தி­யன் 2' படம் பாதி­யில் நிறுத்தப்பட்டது.

அதனால் 'இந்தியன் 2' படம் கைவிடப் பட்டதாக பேச்சு கிளம்பியது. இந்த நேரத்தில்தான் காஜல் புது விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

"இந்­தி­யன் 2' படத்­தில் வேலை பார்ப்­ப­வர்­களில் பலர் அமெ­ரிக்­கா­வைச் சேர்ந்­த­வர்­கள். கொரோனா நோய்த் தொற்று கார­ணத்­தால் அவர்­க­ளால் பய­ணம் செய்ய முடி­ய­வில்லை. அனைவரும் அமெரிக்காவில் மாட்டிக்கொண்டு விட்டார்கள். அத­னால்­தான் படப்­பி­டிப்பை மீண்­டும் துவங்­கா­மல் இருக்­கி­றார்­கள்," என்­று கூறியுள்ளார்.

இந்தப் படத்தில் நடிக்க காஜல் களரி என்ற நாட்டுப்புறக் கலையை மிகவும் சிறமப்பட்டு ஆர்வத்துடன் கற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.