'சிவா கூறிய அறிவுரை'

'சிவா கூறிய அறிவுரை'

3 mins read
dbd91ee5-a222-4bb9-a3ef-fa616864d223
ரியோ -

சின்­னத்­திரை மூலம் பிர­ப­ல­மான ரியோ நாய­க­னாக நடித்­துள்ள படம் 'பிளான் பண்ணி பண்­ண­னும்'. பத்ரி வெங்­க­டேஷ் இயக்­கத்­தில் படம் உரு­வாகி உள்­ளது.

கொரோனா விவ­கா­ரம் தலை­தூக்­க­வில்லை என்­றால் இந்­நே­ரம் இப்­ப­டம் திரை­கண்­டி­ருக்­கும். எனி­னும் சுவா­ர­சி­ய­மான கதை, திரைக்­க­தை­யு­டன் உரு­வா­கி­யி­ருப்­ப­தால் எப்­போது வெளி­யீடு கண்­டா­லும் ரசி­கர்­களை நிச்­ச­யம் மகிழ்­விக்­கும் என்­கி­றார் ரியோ.

"ஒரு கதா­பாத்­தி­ரத்தை எப்­படி அணுக வேண்­டும் என எனக்­குள் சில விதி­முறை­களை வகுத்­துள்­ளேன். பல ஆண்­டு­க­ளாக அப்­ப­டித்­தான் எனக்­கான கதா­பாத்­தி­ரங்­களை அணு­கு­கி­றேன்.

"ஒரு படத்­தில் கதா­நாய­க­னின் சாக­சங்­களை சித்­தி­ரிப்­ப­தற்கு இணை­யாக நகைச்­சுவை அம்­ச­மும் இருக்க வேண்­டும். அப்­போது­தான் ரசி­கர்­க­ளைத் திருப்­திப்­ப­டுத்த முடி­யும் என்ற விதி­மு­றை­யில் எனக்கு நம்­பிக்கை இல்லை.

"எப்­போ­துமே கதா­நா­ய­க­னின் சாக­சங்­க­ளை­விட கதை­தான் முக்­கி­யம் எனக் கரு­து­கி­றேன்.

"அதே சம­யம் ஒரு கதா­நா­ய­கனை எவ்­வாறு திரை­யில் வெளிப்­ப­டுத்த வேண்­டும், எந்­த­ளவுக்கு நாய­கனை முன்­னி­லைப்­ப­டுத்த வேண்­டும் என்­பது இயக்­கு­ந­ரின் முடி­வாக இருப்­பதே நல்­லது.

"எனவே அவரை நம்பி நம்மை ஒப்­ப­டைப்­ப­து­தான் புத்­தி­சா­லித்­த­னம்," என்­கி­றார் ரியோ.

இவர் சொல்­வதை தாம் ஆமோ­திப்­ப­தா­கச் சொல்­கி­றார் இயக்­கு­நர் பத்ரி வெங்­க­டேஷ். இந்­தப் படத்­தி­லும் கதைக்கு முக்­கி­யத்­து­வம் தரு­மா­று­தான் ரியோ தொடக்­கம் முதல் வலி­யு­றுத்தி வந்­தா­ராம். ஆனால் அதை ஏற்­கா­மல் நாய­கனை முன்­னி­லைப்­ப­டுத்­து­வது என தாம் முடி­வெ­டுத்­த­தாக பத்ரி கூறு­கி­றார்.

"இந்­தப் படம் ரியோ­வின் கதா­பாத்­தி­ரத்தை மட்­டும் மையப்­ப­டுத்தி உரு­வா­க­வில்லை. படத்­தின் முதல் பாதி­யில் பால­ச­ர­வ­ணனை மையப்­ப­டுத்தி கதை நக­ரும். பின்­னர் ரம்யா நம்­பீ­சன் உள்­ளிட்ட இதர கதா­பாத்­தி­ரங்­க­ளுக்கு முக்­கி­யத்­து­வம் இருக்­கும்.

"ரியோ­வின் நகைச்­சுவை குறித்து அனை­வ­ருக்­கும் தெரி­யும். இதில் அவ­ருக்­குப் போட்­டி­யாக பால­ச­ர­வ­ணன், முனீஷ்­காந்த், எம்.எஸ். பாஸ்­கர், ரோபோ சங்­கர் என்று மேலும் பலர் நகைச்­சு­வை­யால் வயிறு குலுங்க வைப்­பார்­கள். இவர்­க­ளுக்கு இடை­யே­யான போட்டி ரசி­கர்­களை மகிழ்­விக்­கும்," என்­கி­றார் பத்ரி வெங்­க­டேஷ்.

ரியோ­வின் நடிப்பு இந்தி நடி­கர் ஷாருக்­கான், தமிழ் நடி­கர் சிவ­கார்த்­தி­கே­யன் ஆகிய இருவரது கலவை­யாக உள்­ளது என்று பாராட்­டு­ப­வர், அனைத்து வகை­யி­லும் ரசி­கர்­களை உற்­சா­கப்­ப­டுத்­தும் ஆற்­றல் மிகுந்­த­வர் ரியோ என்று சிலா­கிக்­கி­றார்.

அதைக் கேட்டு புன்­ன­கைக்­கும் ரியோ தாம் நாய­க­னாக நடிக்­கும் இரண்­டா­வது படத்­தி­லேயே இப்­ப­டி­யொரு பாராட்டு கிடைப்­பது மகிழ்ச்சி அளித்­தா­லும் மற்­றொரு பக்­கம் பய­மாக இருக்­கிறது என்­றும் சொல்­கி­றார்.

"என்­னை­விட சிறந்த நடி­கர்­கள் இருக்­கி­றார்­கள். ஆனால், எனக்கு வாய்ப்­பு­கள் கிடைப்­பது என் அதிர்ஷ்­டம். இந்­தத் தரு­ணத்­தில் சிவ­கார்த்­தி­கே­யன் சார் கூறிய அறி­வு­ரை­தான் நினை­வுக்கு வரு­கிறது.

"நாம் வள­ரும்­போது நிறைய அறி­வு­ரை­கள் தேடி­வ­ரும். பல­ரும் பல­வி­த­மான கருத்­து­களை முன்­வைப்­பர். அவை அனைத்­தை­யும் பின்­பற்­று­வது சரி­யாக இருக்­காது. 'நம் உள்­ளு­ணர்­வு­தான் நாம் தற்­போது நிற்­கும் இடத்­துக்கு நம்மை அழைத்து வந்­தி­ருக்­கிறது. எனவே, உள்­ளு­ணர்வு சொல்­லும்­படி நடந்­து­கொள்ள வேண்­டும்,' என்று சிவா கூறி­யுள்­ளார். அப்­ப­டித்­தான் செயல்­பட்டு வரு­கி­றேன்," என்­கி­றார் ரியோ. 'பிளான் பண்ணி பண்­ண­னும்' படத்­தின் வெளி­யீடு தாம­த­மா­னா­லும் தனது தன்­னம்­பிக்கை சிறி­த­ள­வும் குறை­ய­வில்லை என்று குறிப்­பி­டு­ப­வர், தர­மான படைப்­பு­க­ளுக்கு நிச்­ச­யம் வர­வேற்பு கிடைக்­கும் என அடித்­துச் சொல்­கி­றார்.