நடிப்பு, கவர்ச்சி, நடனம் என அனைத்திலும் அசத்தும் கண்ணழகி என்று அழைக்கப்படும் அனு இமானுவேலுக்கு தற்பொழுது தெலுங்குத் திரையில் எக்கச்சக்கமான வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இவர் தற்பொழுது மிகப் பிரம்மாண்டமாக தெலுங்கில் உருவாகும் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சிவகார்த்திகேயனின் 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை அனு இமானுவேல். இப்பொழுது ரசிகர்களின் கனவு கன்னியாக உள்ளார். விரைவில் முன்னணி நடிகையாக இருக்கும் அனு இமானுவேல் தெலுங்கில் 'மஹா சமுத்ரம்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் இவருடன் அதிதி ராவும் மற்றொரு கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் படத்தில் இரண்டு நாயகர்களாக சித்தார்த்தும் சர்வானந்த்தும் நடிக்கின்றனர். இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் தெலுங்கு இயக்குநர் அஜய் பூபதி இயக்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் அனல் காற்றாக வீசி வரும் நடிகை அனு இமானுவேல் 'துப்பறிவாளன்' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன் பிறகு தன்னுடைய காந்தக் கண்ணால் 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தில் சிவாவுடன் இணைந்து கலக்கினார். 'நம்ம வீட்டுப் பிள்ளை' மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று குடும்பங்கள் கொண்டாடும் மிகச் சிறந்த திரைப்படமாக வெளியாகி கல்லா கட்டியது.
துருதுருவென்ற நடிப்பிற்கு மட்டுமல்லாமல் அனல் வீசும் சூடான கவர்ச்சிக்கும் எந்த ஒரு குறையும் வைக்காமல் ரசிகர்களை திரைப்படங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் குளிர்வித்து வருகிறார் இவர்.
இவருக்கு தெலுங்கு சினிமாவில் அதிக வரவேற்பு இருப்பதால் அங்கு இவரை, இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரும் தங்களது திரைப்
படங்களில் ஒப்பந்தம் செய்ய வரிசையில் நிற்கின்றனர்.
இனி தமிழில் நடித்தால் முன்னணி நடிகரின் திரைப்படத்தில்தான் நடிக்க வேண்டும் என்று தீர்மானமாக உள்ள அனு இமானுவேல் அதற்காகவே தாறுமாறான கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு கவர்ச்சிப் புயலாக மாறி உள்ளார்.
வரிக்குதிரை வண்ணத்தில் சன்னல் ஓரமாக காற்று வாங்கிக்கொண்டு கவர்ச்சியான கண்ணால் சிரித்துக்கொண்டு அமர்ந்து இருக்கும் படத்தை வலத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார் அனு.

