'கீர்த்தி சுரேஷைக் காணவில்லை'

'கீர்த்தி சுரேஷைக் காணவில்லை'

1 mins read
d86030a1-0286-4e45-b2d2-89ba5de88c6a
-

நடிகை கீர்த்தி சுரேஷ் 'ராங் தே' என்ற தெலுங்கு படத்­தில் நடித்து முடித்­துள்­ளார். அந்­தப் படத்­தில் நடி­கர் நிதின் கதா­நா­ய­க­னாக நடித்­துள்­ளார். படம் மார்ச் 26ஆம் தேதி வெளி­யாக உள்­ளது.

அத­னால் இந்­தப் படத்­தின் விளம்­பர நிகழ்ச்­சிக்­காக கீர்த்தி சுரே­ஷும் நிதி­னும் தீவி­ர­மாக வேலை செய்து வந்தனர்.

இரு­வ­ரும் ஒரு­வரை ஒரு­வர் அடிக்கடி கிண்­டல் செய்து பதி­விட்டு வந்தனர்.

அப்­படி அவர்­கள் பதிவிடும் பதி­வு­கள் மக்­க­ளி­டையே பகிரப்பட்டு வந்தது.

அண்மையில் நிதின், கீர்த்தி

சுரே­ஷின் இள­மைக்­கால புகைப்­ப­டம் ஒன்றை வெளி­யிட்டு, "இவ­ரைக் காண­வில்லை. அன்­புள்ள அனு, நீ எங்கு இருக்­கி­றாய்? 'ராங் தே' படத்­தின் விளம்­பர நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொள்ள வா. இப்­ப­டிக்கு உன்­னு­டைய அர்­ஜுன்," என்று பதி­விட்­டி­ருந்­தார்.

இதற்கு பதி­ல­ளித்த ஹைத­ரா­பாத் காவல்­துறை, "கவ­லைப்­ப­டா­தீர்­கள் நிதின். நாங்­கள் இருக்­கி­றோம். உங்­கள் கீர்த்­தி­யைக் கண்­டு­பி­டித்­துத் தரு­கி­றோம்," என்று வேடிக்கையாகப் பதி­ல­ளித்­துள்­ள­து.

இந்­தப் பதிவு இணை­யத்­தில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்டு வரு­கிறது.