சந்திக்க வருகிறார் 'சுல்தான்'

சந்திக்க வருகிறார் 'சுல்தான்'

3 mins read
c1ca6fa7-5049-42de-9cb6-b1299376bfa7
-

கார்த்தி நடிக்­கும் 'சுல்­தான்' படம் ஏப்­ரல் 2ஆம் தேதி வெளி­யீடு காண்­கிறது.

இதை­ய­டுத்து அப்­ப­டக்­கு­ழு­வி­னர் சென்­னை­யில் செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கலந்து கொண்­ட­னர்.

அப்­போது 'மாஸ்­டர்' படம் திரை­ய­ரங்­கில் வெற்­றி­க­ர­மாக ஓடி­ய­தால்­தான் 'சுல்­தான்' படத்தை நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யி­டு­வது என்ற முடிவை கைவிட்­ட­தாக தயா­ரிப்­பா­ளர் எஸ்.ஆர். பிரபு தெரி­வித்­தார்.

கார்த்தி, ராஷ்­மிகா மந்­தனா இணைந்து நடித்­துள்ள 'சுல்­தான்' படத்தை பாக்­ய­ராஜ் கண்­ணன் இயக்­கி­யுள்­ளார். யோகி­பாபு, சமுத்­தி­ர­கனி, நெப்­போ­லி­யன் உள்­ளிட்­டோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர். செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் பேசிய கார்த்தி, ராஷ்­மி­கா­வை­யும் யோகி­பா­பு­வை­யும் வெகு­வா­கப் பாராட்­டி­னார்.

"ராஷ்­மி­கா­வின் நடிப்பு என்னை மலைக்க வைத்­தது. அவ­ருக்கு தென்­னிந்­தி­யா­வில் மட்­டு­மல்­லா­மல், வடக்­கி­லும் ஏரா­ள­மான ரசி­கர்­கள் உள்­ள­னர். சரி­யான விளை­யாட்­டுப் பெண்.

"படப்­பி­டிப்­புக்கு வந்­தால் லூட்டி அடித்­த­படி இருக்­கி­றார். அதே­ச­ம­யம் அவர் நடிக்­க­வேண்­டிய காட்­சிக்­காக அழைத்­தால் உடனே தலை­கீ­ழாக மாறி­வி­டு­வார். ஒரே நிமி­டத்­தில் தாம் ஏற்­றுக்­கொண்ட கதா­பாத்­தி­ர­மாக மாறி, சரி­யாக வச­னம் பேசி அவர் அசத்­து­வ­தைக் கண்டு வியந்­தேன்.

"தமி­ழில் அவ­ருக்கு நிறைய வாய்ப்­பு­கள் கிடைத்­தி­ருக்­கின்­றன. ஆனால், ஒரே­மா­தி­ரி­யான கதா­பாத்­தி­ரம் என்­றால் தவிர்த்து விடு­கி­றார். அத்­த­கைய பக்­கு­வம் அவ­ரி­டம் உள்­ளது. கிரா­மத்­துப் பெண்­ணாக நடிக்­க­வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யாக இருந்து இந்­தப் படத்­தில் என்­னு­டன் இணைந்து நடித்­துள்­ளார்," என்­றார் கார்த்தி.

தாம் வெவ்­வேறு ரகப் படங்­களில் நடிப்­ப­தையே விரும்­பு­வ­தாக குறிப்­பிட்ட அவர், 'தீரன்',' கைதி' ஆகிய இரு படங்­க­ளுமே மாறு­பட்டு இருந்­த­தால்­தான் வெற்றி பெற்­றன என சுட்­டிக் காட்­டி­னார்.

ஆளைப் பார்த்து எடை­போ­டக் கூடாது என்­பதை யோகி­பா­பு­வைப் பார்த்து கற்­றுக் கொண்­ட­தாக கார்த்தி குறிப்­பிட்­ட­போது அரங்­கில் சிரிப்­பலை எழுந்­தது.

தாம் சொல்­வது உண்மை என்­றும் யோகி­பா­பு­வு­டன் இணைந்து நடித்­தது நல்ல அனு­ப­வ­மாக இருந்­தது என்­றும் தெரி­வித்­தார் கார்த்தி.

"இயக்­கு­நர் அமீ­ரின் அலு­வ­ல­கத்­துக்கு வெளியே யோகி­பாபு காத்­தி­ருப்­ப­தைப் பார்த்­தி­ருக்­கி­றேன். அதன்­பி­றகு சின்ன கதா­பாத்­தி­ரங்­களில் நடித்து, படிப்­ப­டி­யாக முன்­னேறி வந்­துள்­ளார். 'யாமி­ருக்க பய­மேன்' படத்­தில் அவ­ரது நடிப்­பைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்­தி­ருக்­கி­றேன்," என்­றார் கார்த்தி.

யோகி­பா­புவை நேரில் சந்­தித்­த­போ­து­தான் அவர் பெரிய புத்­தி­சாலி என்­பது தமக்­குப் புரிந்­தது என்று குறிப்­பிட்­ட­வர், ஒரு காட்­சியை எப்­படி உரு­வாக்­க­வேண்­டும் என்­பதை யோகி நன்­றா­கத் தெரிந்து வைத்­தி­ருப்­ப­தா­க­வும் பாராட்­டி­னார்.

"ஒரு வார்த்­தை­யைச் சொன்­னால் அதை வைத்து நூறு வார்த்­தை­க­ளைச் சொல்­லும் அள­வுக்கு விவ­ர­மா­ன­வர். ஒரு­நாள் மொட்டை மாடி­யில் கிரிக்­கெட் ஆடும் காணொ­ளிப் பதிவு ஒன்­றைப் பகிர்ந்­தார். அவர் நல்ல விளை­யாட்டு வீரர் என்­பது அப்­போ­து­தான் தெரிந்­தது. நடிகர் சங்க விழா ஒன்­றில் சிறப்­பாக கால்­பந்து விளை­யா­டி­யதை நானும் பார்த்­தி­ருக்­கி­றேன்," என்­றார் கார்த்தி.

தாம் இரு­பது நிமி­டங்­கள் மட்­டுமே கதை கேட்டு நடிக்க ஒப்­புக்­கொண்ட ஒரே படம் 'சுல்­தான்' என்று குறிப்­பிட்ட அவர், எந்­தப் பட­மாக இருந்­தா­லும் யார் இயக்­கி­னா­லும் முழுத் திரைக்­க­தையை தம்­மி­டம் தர­வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யாக இருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

"எனது இந்த நிபந்­த­னை­யைக் கேட்டு பலர் ஓடி­வி­டு­வார்­கள். ஆனால் பாக்­ய­ராஜ் கண்ணன் மிகுந்த பொறு­மை­சாலி. இந்­தப் படத்­தின் திரைக்­க­தைக்­காக இரண்­டாண்­டு­கள் வேலை பார்த்­துள்­ளார்.

"பாக்­ய­ராஜ் பெரிய விஷ­யங்­க­ளாக யோசிக்­கி­றார். அதுவே இப்­போது அரி­தாக இருக்­கிறது. இந்­தப் படம் வெற்றி பெற்­றால் அனைத்து மொழி­க­ளி­லும் மறு­ப­திப்பு செய்­யப்­படும் என நம்­பு­கி­றேன். கார­ணம் இது அப்­ப­டிப்­பட்ட கதை," என்று பாராட்­டி­னார் கார்த்தி.

ராஷ்மிகா மந்தனாவுக்கு தமிழில் இது முதல் படம் என்பதால் அவரைக் கொண்டாடும் தெலுங்கு ரசிகர்களும் இப்படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

கார்த்தி

, :   