'கங்கனா உடலில் ஜெயா ஆன்மா புகுந்ததுபோல் தோன்றியது'

'கங்கனா உடலில் ஜெயா ஆன்மா புகுந்ததுபோல் தோன்றியது'

2 mins read
1209ddac-9be3-4e0b-9831-c766d73e1d4a
'தலைவி' படக் காட்சிகளில் கங்கனா ரணாவத். -

ஜெய­ல­லி­தா­வின் வாழ்க்கை வர­லாற்­றுப் பட­மான 'தலைவி'யின் வெளி­யீட்டை ரசி­கர்­கள் ஆவ­லு­டன் எதிர்­பார்த்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில் இப்­ப­டத்­தின் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்பு வெளி­யீடு அண்­மை­யில் நடை­பெற்­றது.

இதில் கங்­கனா ரணா­வத், அர­விந்த்­சாமி உட்­பட ஒட்­டு­மொத்த படக்­கு­ழு­வி­ன­ரும் பங்­கேற்­ற­னர்.

நிகழ்ச்­சி­யில் பேசிய படத்­தின் நாய­கன் அர­விந்த்­சாமி, தாம் எம்ஜிஆர் கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க அதி­கம் சிர­மப்­ப­ட­வில்லை என்­றார்.

"உண்­மை­யில் இந்த வேடத்­தில் ரசித்து நடித்­தேன். கடந்த ஒன்­றரை ஆண்­டு­க­ளாக இந்­தப் படத்­து­ட­னான பய­ணம் நீடித்­தது. கண் முன்பு உள்ள மைக்­கைப் பார்க்­கும்­போது 'என் ரத்­தத்­தின் ரத்­த­மான உடன்­பி­றப்­பு­களே' என்று தொடங்­க­வேண்­டும் எனத் தோன்று­கிறது.

"ஆனால் அந்த வார்த்­தை­கள் ஒரு­வ­ருக்கு மட்­டுமே சொந்­தம் என்­ப­தால் வணக்­கம் என்று மட்­டும் சொல்­கி­றேன். பல ஆளு­மை­களின் கதா­பாத்­தி­ரங்­கள் நிறைந்த இப்­ப­டத்­தில் புரட்­சித்­த­லை­வ­ராக நடிக்கவைத்­துள்ள இயக்­கு­நர் விஜய்க்கு என் நன்­றி­கள்," என்­றார் அர­விந்த்­சாமி.

சிறு வயது முதலே எம்­ஜி­ஆர் என்ற மனி­த­ரைப் பார்த்து தாம் பிர­மித்­துப் போன­தாக குறிப்­பிட்ட அவர், எம்­ஜி­ஆர் கதா­பாத்­தி­ரத்­தில் நடிப்­பதை மிகப்­பெ­ரிய பொறுப்­பாகக் கரு­தி­ய­தாக தெரி­வித்­தார்.

"ஒரு கதா­பாத்­தி­ரத்தை எடுத்­துக்­கொண்­டால் அதற்கு என்­ன­வெல்­லாம் தேவை என்­பது நமக்கு முன்பே தெரிந்­து­வி­டும். அந்­தக் கதா­பாத்­தி­ரம் திரை­யில் நன்­றாக இருக்­க­வேண்­டும் எனும் ஆர்­வம் அதி­க­ரிக்­கும்.

"இதனால் எது­வுமே சிர­ம­மா­கத் தெரி­யாது. அந்த வகை­யில் நான் இந்­தப் படத்­துக்­காக சிர­மப்­ப­ட­வில்லை," என்­றார் அர­விந்த்­சாமி.

படத்­தின் நாயகி கங்­கனா ரணா­வத் பேசு­கை­யில், "இயக்­கு­நர் விஜய் அள­விற்கு திரை­யு­ல­கில் வேறு யாரும் தம்மை மரி­யா­தை­யு­டன் நடத்­தி­ய­தில்லை," என்று நெகிழ்­வு­டன் குறிப்­பிட்­டார்.

மீண்­டும் விஜய்­யு­டன் இணைந்து செயல்­பட தாம் எப்­போ­துமே தயா­ராக இருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார். இப்­ப­டத்­தில் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­துள்ள சமுத்­தி­ரக்­கனி, இத்­த­கைய வாய்ப்­பு கிடைத்­ததை பெரும் ஆசீர்­வாதம் எனக் கரு­து­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

"மிகப்­பெ­ரிய கலை­ஞர்­க­ளு­டன் நானும் பணி­யாற்றி இருப்­பதை நினைத்­தால் மகிழ்ச்­சி­யாக உள்­ளது. இயக்­கு­நர் விஜய் ஆயி­ரம் பக்­கங்­கள் கொண்ட ஒரு புத்­த­கத்­தைக் கொடுத்து படிக்­கச் சொன்­னார். நள்­ளி­ரவு 2 மணிக்கு புத்­த­கத்­தைப் படித்து முடித்­த­தும் அவ­ரைத் தொடர்­பு­கொண்டு, இப்­ப­டி­எல்­லாம்­கூட மனி­தர்­கள் வாழ்ந்­துள்­ள­னரா என கேட்டு வியந்­தேன்.

"எனக்­கான கதா­பாத்­தி­ரத்­தில் என்­னால் சிறப்­பாக நடிக்­க­மு­டி­யுமா எனும் சந்­தே­கத்தை நானே எழுப்­பி­ய­போது விஜய் ஊக்­க­ம­ளித்­தார். எம்­ஜி­ஆரை சினி­மா­வில்­தான் பார்த்­தி­ருக்­கி­றேன்.

"அண்­ணன் அர­விந்த்­சா­மி­யால் 40 நாட்­கள் எம்­ஜி­ஆ­ரு­டன் பய­ணம் செய்­யும் பாக்­கி­யம் கிட்­டி­யது," என்­றார் சமுத்­தி­ரக்­கனி.

கங்­கனா முன்பு நின்று நடிப்­பதற்­குத் தமக்கு பய­மாக இருக்­கும் என்று குறிப்­பிட்­ட­வர், பல தரு­ணங்­களில் அம்மா ஜெய­ல­லி­தா­வின் ஆத்­மாவே கங்­க­னா­வுக்­குள் புகுந்து நடிப்பது போல் இருந்­தது எனப் பாராட்­டி­னார்.