தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'அது மிகவும் அவசியம்'

2 mins read
1500483a-747d-4146-81d4-55549bffa7e4
-

மீண்­டும் கொரோனா தொற்­றுப்­ப­ர­வல் அதி­க­ரிக்­கக் கூடாது என்­பதே தமது பிரார்த்­த­னை­யாக உள்­ளது என்­கி­றார் நடிகை ரகுல் பிரீத் சிங்.

அண்­மைய பேட்டி ஒன்­றில், முறை­யாக உடற்­ப­யிற்சி செய்­தால் போதும், எத்­த­கைய கிரு­மித்­தொற்­றுப் பர­வ­லை­யும் எதிர்த்து நிற்க முடி­யும் என அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

சினி­மா­வில் நடித்­துக்­கொண்டே உடற்­பயிற்சி மையம் தொடங்கி அதை நல்­ல­ப­டி­யாக நடித்தி வரு­கி­றார். எனி­னும் கொரோனா விவ­கா­ரத்­தால் சில மாதங்­கள் நஷ்­டத்தை எதிர்­கொண்­டா­ராம்.

"நான் உடற்­ப­யிற்­சிக் கூடம் தொடங்­கி­யது எல்­லோ­ருக்­குமே தெரி­யும். ஆரம்­பத்­தில் இளை­ஞர்­க­ளால் உடற்­ப­யிற்சிக் கூடம் நிரம்பி வழிந்­தது. நல்ல வரு­மா­ன­மும் வந்­தது.

"ஆனால் ஊர­டங்கு காலத்­தில் வியா­பா­ரம் சுத்­த­மாக அடி­வாங்­கி­யது. அந்த நேரத்­தில் நஷ்­ட­மும் ஏற்­பட்­டது. ஆனா­லும் என்­னி­டம் வேலை பார்த்த அனைத்து ஊழி­யர்­களுக்­கும் முழு சம்­ப­ள­மும் கொடுத்­தேன்," என்­கி­றார் ரகுல் பிரீத் சிங்.

உடற்­ப­யிற்சிக் கூடத்தை எப்­படி நடத்த வேண்­டும் என பாடம் நடத்­து­வ­தற்­காக தமது அனு­ப­வத்தை பகி­ர­வில்லை என்று குறிப்­பிட்­டுள்ள அவர், உடற்­ப­யிற்­சி­யின் முக்­கி­யத்­துவத்தை புரிந்துகொள்ள வைப்­பதே தமது நோக்­கம் எனக் கூறி­யுள்­ளார்.

"எனக்­குத் தெரிந்து ஊர­டங்­கின்போதும் வீட்­டிலோ, வேறு ஏற்­பா­டு­கள் மூல­மா­கவோ உடற்­ப­யிற்­சி­யில் ஈடு­பட்­ட­வர்­களைக் கொரோனா கிருமி அண்­ட­வில்லை. என­வே­தான் உடற்­ப­யிற்சி அவ­சி­யம் என்­கி­றேன்.

"இப்­போது வியா­பா­ரம் மீண்­டும் பழைய நிலைக்கு திரும்­பிக்­கொண்டு இருக்­கிறது. உடற்­ப­யிற்சி மையம் தொடங்­கிய பிறகு கஷ்­டமோ நஷ்­டமோ எது வந்­தா­லும் சோர்ந்து போய்­வி­டக்­கூ­டாது என்­ப­தில் உறு­தி­யாக இருக்­கி­றேன்.

"இன்­னொரு தடவை ஊர­டங்கு வரா­மல் இருந்­தால் நல்­லது. எனி­னும் என்ன நடக்­குமோ என்­பது குறித்து யோசிக்­கா­மல் உடற்­பயிற்சி செய்­வ­தில் நமது கவ­னம் இருக்க வேண்­டும்.

"உடற்­ப­யிற்சி செய்­வது உடலை கட்­டுக்­கோப்­பாக வைத்­தி­ருக்க உத­வும் என்­ப­தோடு நோய்­கள் அண்­டா­மல் பாது­காக்­க­வும் செய்­யும். இதை அனை­வ­ரும் புரிந்துகொள்ள வேண்­டும்," என்­கி­றார் ரகுல் பிரீத் சிங்.

இதே அறி­வு­ரையை வழங்­குகிறார் மற்றொரு நடிகை 'பிக்­பாஸ்' புகழ் சாக்‌ஷி அகர்­வால்.

சமூக வலை­த்த­ளங்­களில் அவ்­வப்­போது தனது புகைப்­ப­டங்­களை பதி­விடு­கி­றார். அவற்­றுள் பல அவர் உடற்­பயிற்சி செய்­யும்­போது எடுக்­கப்­பட்ட படங்­க­ளா­கவே இருக்­கும்.

அந்­தப் படங்­கள் மற்­ற­வர்­க­ளுக்­கும் உடற்­ப­யிற்சி மீதான ஆர்­வத்தை தூண்­டக்­கூ­டி­ய­தாக இருக்­கும் என்­கி­றார். அண்­மைய பேட்­டி­யில் கூட உடற்­பயிற்சி செய்­வ­தன் அவ­சி­யம் குறித்து தாம் விரி­வாக விவ­ரித்து இருப்­ப­தா­கச் சுட்­டிக்­காட்­டு­கி­றார்.

"கொரோனா காலம் எல்­லா­ரை­யும் போலவே எனக்­கும் மிகப்பெரிய சவா­லாக இருந்­தது. படப்­பி­டிப்­பு­கள் ஒத்தி வைக்­கப்­பட்டு, வீட்­டை­விட்டு வெளியில் கால் எடுத்து வைக்க முடி­யா­மல் தவித்­தேன். குறிப்­பாக, உடற்­ப­யிற்­சிக்­கூ­டம் போக முடி­ய­வில்லை.

"அப்­போ­து­தான் மாற்று ஏற்­பாடு குறித்து யோசிக்­கத் தோன்­றி­யது. ஏன்... வீட்­டில் உள்ள பொருட்­களை வைத்தே உடற்­ப­யிற்சி செய்­யக்­கூ­டாது என்று நினைத்­தேன்.

"பிற­கென்ன... கையில் கிடைத்த தண்­ணீர் போத்­தல், தலை­யணை, நாற்­காலி போன்ற பொருள்­களை வைத்து உடற்­ப­யிற்­சி­களை செய்ய ஆரம்­பித்தேன். அது தொடர்­பான காணொ­ளி­கயை சமூக வலைத்­த­ளங்­களில் பதி­விட்­ட­போது நல்ல வர­வேற்பு கிடைத்­தது," என்­கி­றார் சாக்‌ஷி.

, :   

ரகுல் பிரீத் சிங்