ரகுமான் கதையில் உருவாகும் '99 சாங்ஸ்'

ரகுமான் கதையில் உருவாகும் '99 சாங்ஸ்'

3 mins read
06bf8142-9f92-4489-b756-2fd98fc1b1d2
-

இசை­ய­மைப்­புப் பணி­களில் மூழ்கி இருக்­கும் ஏ.ஆர்.ரகு­மான் சொந்­தப் படம் தயா­ரிக்­கி­றார் என்­பது பல­ருக்கு ஆச்­ச­ரி­யம் அளிக்­கும்.

'99 சாங்ஸ்' என்ற தலைப்­பில் உரு­வா­கும் படத்­தைத் தயா­ரிப்­ப­து­டன் கதை­யும் எழு­தி­யுள்­ளார் ரகு­மான்.

ஒரே சம­யத்­தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மும்­மொ­ழி­களில் இப்படம் உரு­வாகி உள்­ளது.

இந்­நி­லை­யில் கதை எழுதி தயா­ரிப்­பது ஏன் என்­பது குறித்து ரகு­மான் விளக்­கம் அளித்­துள்­ளார்.

"தமி­ழ­கத்­தில் பிறந்த எனக்கு வட இந்­தி­யா­வி­லும் அங்­கீ­கா­ரம் கிடைத்­தது. அதன்­பி­றகு லண்­ட­னில் 'பாம்பே டிரீம்ஸ்' படத்­துக்கு இசை­ய­மைக்­கும் வாய்ப்பு அமைந்­தது. அப்­போது பல­ரும் படம் எடுக்க கதை இருக்­கி­றதா? என்று தொடர்ந்து கேட்ட வண்­ணம் இருந்த­னர்.

"அப்­போ­து­தான் கதை எழு­தும் எண்­ணம் என்­னுள் தோன்­றி­யது. அதற்­காக நிறைய கற்­கத் தொடங்­கி­னேன்," என்­கி­றார் ரகு­மான்.

கதை எழு­து­வது தொடர்­பான சில பயிற்­சிப் பட்­ட­றை­க­ளி­லும் பங்­கேற்­றா­ராம். அதன்­பி­றகு தான் '99 சாங்ஸ்' கதையை எழு­தி­யுள்­ளார்.

இந்­தப் படத்தை விஸ்­வேஸ் கிருஷ்­ண­மூர்த்தி இயக்க, இஹான் நாய­க­னாக நடித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில் '99 சாங்ஸ்' படத்­தின் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்பு, பாடல் வெளி­யீட்டு விழா சென்­னை­யில் நடை­பெற்­றது.

இதில் முன்­னணி இசை­ய­மைப்­பா­ளர்­கள் யுவன் சங்­கர் ராஜா, அனி­ருத், ஜி.வி.பிர­காஷ், முன்­னணி நடி­கர்­கள் சிவ­கார்த்­தி­கே­யன், எஸ்.ஜே.சூர்யா, இயக்­கு­நர்­கள் சங்­கர், கவு­தம் மேனன், கே.எஸ்.ரவி­கு­மார் உள்­ளிட்ட பலர் கலந்து கொண்­ட­னர்.

இந்­நி­கழ்­வில் பேசிய ஏ.ஆர். ரகுமான், இளம் தலை­மு­றை­யி­ன­ரி­டம் இருந்து நிறைய கற்­றுக்­கொள்ள வேண்­டும் என்­றார்.

நடி­கர் எஸ்.ஜே.சூர்யா பேசு­கை­யில், ரகு­மா­னு­டன் இணைந்து பணி­பு­ரி­யும் வாய்ப்பு கிடைத்­திருப்­பதே பெரும் பாக்­கி­யம் என்று குறிப்­பிட்­டார்.

"சினி­மா­வில் என்ன சாதித்­தோம் என்று யோசித்­தால் அவ­ரு­டன் பணி­யாற்­றி­ய­தையே ஒரு சாத­னை­யா­கத்­தான் கரு­து­கி­றேன். அவ­ரு­டன் பணி­பு­ரி­யும்­போது பல விஷ­யங்­களை நமக்­குச் சொல்­லா­மலே சொல்­லித் தரு­வார்.

"அவ­ரு­டைய நடத்­தையே நம்­மைக் கட்­டுப்­ப­டுத்­தும். அவர் கூறும் ஒரு வார்த்­தையே பல அர்த்­தங்­கள் கொண்­ட­தாக இருக்­கும். மிக­வும் தூய மனம் கொண்­ட­வர்.

"ரகு­மான் ஓர் உயர்­வான ஆத்மா என்­பேன். அத­னால் அவ­ரது படைப்­பு­களும் சிறப்­பாக அமை­கின்­றன. அவ­ரு­டைய இசை­யைப் போலவே இந்­தப் பட­மும் உல­க­மெங்­கும் செல்­லும் என நம்­பு­கி­றேன்," என்­றார் எஸ்.ஜே.சூர்யா.

ரகு­மா­னின் புதிய முயற்­சி­ இளம் தலை­மு­றை­யி­ன­ருக்கு ஊக்­கம் அளிக்­கும் வகை­யில் இருப்­ப­தாக இசை­ய­மைப்­பா­ளர் அனி­ருத் குறிப்­பிட்­டார்.

சிறு வய­தில் தாமும் நண்­பர்­களும் ரகு­மா­னின் இசையை நேசிக்­கும் வெறி­யர்­க­ளாக இருந்­த­தாக அவர் கூறி­னார்.

"சிறு வய­தில் எனக்­கும் எனது நண்­பன் லியோ­னுக்­கும் ரகு­மான் சார் ஒரு கீ போர்ட் பரி­ச­ளித்­தார். உண்­மை­யில் நான் இசை­யைத் தேர்ந்­தெ­டுக்க அது­தான் முக்­கிய கார­ண­மாக அமைந்­தது," என்­றார் அனி­ருத்.

"நான் சிறு­வ­ய­தில் முதன்­மு­த­லா­கக் கேட்க ஆரம்­பித்­தது 'காத­லன்' படத்­தின் பாடல்­கள்­தான். எனக்கு முதல் ஊக்­க­மாக அப்­பா­டல்­கள் அமைந்­தன. பள்­ளிக்­கா­லங்­களில் நானும் எனது நண்­பர்­கள் அனை­வ­ரும் ரகு­மா­னின் வெறி­யர்­க­ளாக இருந்­தோம்.

"அவ­ரது பாடல் கேசட் வெளி­யா­ன­தும் முதல் நாளே எப்­ப­டி­யா­வது போய் வாங்கிவிடு­வோம். இந்த அனு­ப­வம் எனக்கு மட்­டு­மல்ல, இசை ரசி­கர்­கள் பல­ருக்­கும் இருந்­தி­ருக்­கும் என நிச்­ச­யம் நம்­பு­கி­றேன்," என்று அனி­ருத் மேலும் தெரி­வித்­தார்.

'99 சாங்ஸ்' பட பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் கௌதம் மேனன், நடிகர் சிவகார்த்திகேயன், ஏ.ஆர். ரகுமான், எஸ்.ஜே.சூர்யா.