தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாதித்து காட்டிய அறிமுக இயக்குநர்களின் அடுத்தடுத்த படைப்புகள்

3 mins read
335f0ed2-df23-4ad0-9da5-8137c98840a2
'பாம்பு சட்டை' படத்தில் கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா. -
multi-img1 of 2

விஜய் முதல் சிவ­கார்த்­தி­கே­யன் வரை முன்­னணி நடி­கர்­கள் அறி­முக இயக்­கு­நர்­க­ளின் படங்­களில் நடிக்க விரும்­பு­கி­றார்­கள்.

கார­ணம் அண்­மைய சில ஆண்­டு­களில் எடுத்த எடுப்­பி­லேயே பெரும் வசூல் கண்ட படைப்­பு­களை புது இயக்­கு­நர்­கள் தந்­துள்­ள­னர்.

அத்­த­கை­ய­வர்­க­ளின் அடுத்­த­டுத்த படைப்­பு­கள் மேலும் கூடு­தல் எதிர்­பார்ப்­பில் மின்­னும். எனி­னும் பெரி­தும் எதிர்­பார்க்­கப்­பட்ட சில இயக்­கு­நர்­கள் இன்­னும் அடுத்த படம் குறித்து அறி­விப்பு வெளி­யி­ட­வில்லை. அவர்­களில் சிலர் இப்­போது என்ன செய்­கி­றார்­கள்?

'டோரா' தாஸ் ராம­சாமி

நயன்­தாரா நடித்து தாஸ் ராம­சாமி இயக்­கிய 'டோரா' ரசி­கர்­களை வெகு­வா­கக் கவர்ந்­தது. அடுத்த படத்தை இயக்­கு­வார் என்று பார்த்­தால் 'மிடில் கிளாஸ்' படத்­தின் மூலம் தயா­ரிப்­பா­ள­ரா­கி­விட்­டார்.

"அடுத்து வணிக அம்­சங்­கள் நிறைந்த ஒரு கதையை தயார் செய்­துள்­ளேன். இயக்­கு­நர்­கள் 'கில்லி' தரணி, லிங்­கு­சாமி பாணி­யில் கதை சொல்­ப­வர்­கள் குறைந்­து­விட்­ட­னர்.

"எனவே அவர்­க­ளது வழி­யைப் பின்­பற்றி கதையை உரு­வாக்கி இருக்­கி­றேன். நான்கு சண்­டைக் காட்­சி­கள், ஐந்து பாடல்­கள் என்று உரு­வான கதை­யில் கதா­நா­ய­கன் கொஞ்­சம் அப்­பா­வி­யாக இருப்­பார்.

"பெரிய நாய­கனை மன­தில் வைத்து எழு­திய இந்­தக் கதையை தயா­ரிப்பு நிறு­வ­னம் ஏற்­றுக்­கொள்­ளும் என நம்­பு­கி­றேன்," என்­கி­றார் தாஸ் ராம­சாமி.

'பாம்பு சட்டை' ஆடம் தாசன்

'துன்­பச் சூழ­லி­லும் எளிய மனி­தர்­கள் தரம் தாழ்ந்­து­விட மாட்­டார்­கள்' என்ற கருத்தை தனது முதல் படத்­தி­லேயே ஆழ­மாக விதைத்­த­வர் ஆடம் தாசன்.

பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிப்­பில் வெளி­யான 'பாம்பு சட்டை'யைப் பார்த்­து­விட்டு காவ­லா­ளி­க­ளாக, தொழி­லா­ளர்­க­ளாக உள்ள அறி­மு­க­மற்­ற­வர்­கள் கூட தம்மை நெகிழ்ந்து பாராட்­டி­ய­தா­கச் சொல்­கி­றார் ஆடம் தாசன்.

"தற்­போது இரண்டு கதை­களை தயார் செய்­துள்­ளேன். அதில் பெண் கதா­பாத்­தி­ரத்தை மைய­மாக வைத்து உரு­வான கதை முத­லில் பட­மாக்­கப்­பட வாய்ப்­புண்டு," என்­கி­றார் ஆடம் தாசன்.

'நிசப்­தம்' மைக்­கேல் அருண்

நடுத்­தர வர்க்க குடும்­பத்­தின் பெண் குழந்­தைக்கு நேரும் பாலி­யல் வன்­மு­றையை இத­யம் பதை­பதைக்க எடுத்­துச் சொன்ன படம் மைக்­கேல் அருண் இயக்­கிய 'நிசப்தம்'. அடுத்து மாறு­பட்ட கதை­யு­டன் கள­மி­றங்­கு­கி­றா­ராம்.

"நல்ல காதல் கதை­யைச் சொல்­லப் போகி­றேன். இம்­முறை பெரிய நடி­கர், நடி­கை­களை நடிக்க வைக்­கத்­திட்­டம்," என்­கி­றார் மைக்­கேல்.

'ஒரு நல்­ல­நாள் பாத்து சொல்­றேன்' ஆறு­மு­க­கு­மார்

"என் முதல் படத்தை குழந்­தை­கள்கூட ரசித்­துப் பார்த்­த­னர். அடுத்த படத்­திற்­கான கதையை விஜய் சேது­ப­தியை மன­தில் வைத்து எழு­தி­யி­ருக்­கி­றேன்," என்­கி­றார் 'ஒரு நல்­ல­நாள் பாத்து சொல்­றேன்' இயக்­கு­நர் ஆறு­மு­க­கு­மார்.

விஜய் சேது­ப­திக்கு கதை பிடித்து­விட்­ட­தாம். விரை­வில் அறிவிப்பு வெளி­யா­கக்­கூ­டும்.

'பீச்­சாங்கை' அசோக்

'பீச்­சாங்கை' படத்­துக்கு விமர்­சன ரீதி­யில் நல்ல வர­வேற்பு கிடைத்­தது. இதை­ய­டுத்து ஐந்து கதை­களைத் தயார் செய்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார் அசோக்.

"ஒரு கதையைப் பட­மாக்­கும் உரி­மையை ஏற்­கெ­னவே ஒரு தயா­ரிப்­பா­ள­ரி­டம் விற்­று­விட்­டேன். தற்­போது திகில், நகைச்­சுவை என ஒவ்­வொரு அம்­சத்­துக்­கும் ஒரு கதை தயா­ராக உள்­ளது.

"மேலும் ஜோதி­கா­வுக்கு ஏற்ற ஒரு திகில் கதை­யை­யும் உரு­வாக்கி உள்­ளேன். எது முத­லில் பட­மா­கும் என்­பது சூழ்­நி­லை­யைப் பொறுத்து முடி­வா­கும்," என்­கி­றார் அசோக்.

'காளி­தாஸ்' ஸ்ரீசெந்­தில்

பரத் மீண்­டும் கோடம்­பாக்­கத்­தில் வெற்றி வலம்­வர கைகொ­டுத்த படம் 'காளி­தாஸ்'.

இரண்டு கொலைச் சம்­ப­வங்­கள் குறித்து நடக்­கும் விசா­ர­ணையை விவ­ரிக்­கும் கதை ரசி­கர்­க­ளி­டம் வர­வேற்­பைப் பெற்­றது. இதை­ய­டுத்து 'கைதி' படத்தை வெளி­யிட்ட நிறு­வ­னம், ஸ்ரீசெந்திலை வைத்து படம் தயா­ரிக்­கிறது.

"கதை தயாராகிவிட்டது. நாய­கன் யார் என்­பது முடி­வா­க­வில்லை. அது முடிவு செய்­யப்­பட்­ட­தும் அறி­விப்பு வெளி­யா­கும்," என்­கி­றார் ஸ்ரீசெந்­தில்.