விஞ்ஞானியின் கதையைச் சொல்ல வருகிறது 'ராக்கெட்ரி'

1 mins read
312b468a-18c8-4b92-bd7a-6c698860461b
'ராக்கெட்ரி' படத்தில் இடம்பெறும் காட்சியில் மாதவன், சிம்ரன். -

நடி­கர் மாத­வன் திரைக்­கதை எழுதி, இயக்கி, தயா­ரித்­துள்ள படம் 'ராக்­கெட்ரி'. படத்­தின் நாய­க­னும் அவர்­தான்.

இது இந்­திய விண்­வெளி ஆய்­வுக்­க­ழ­கத்­தின் விஞ்­ஞா­னி­யான நம்பி நாரா­ய­ண­னின் வாழ்க்கை வர­லாற்றை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு உரு­வாகி உள்ள படம்.

நம்பி நாரா­ய­ண­னாக மாத­வன் நடித்­துள்­ளார். இவ­ருக்கு ஜோடி­யாக சிம்­ரன் நடித்­தி­ருக்­கி­றார்.

கடந்த 1994ஆம் ஆண்டு ராக்­கெட் தயா­ரிப்பு தொடர்­பான ரக­சி­யங்­களை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­ற­தாக விஞ்­ஞானி நம்பி நாரா­ய­ணன் மீது குற்­றம்­சாட்­டப்­பட்­டது. அதன் பேரில் அவர் கைதானார்.

எனி­னும் பின்­னர் நடை­பெற்ற விசா­ர­ணை­க­ளின் முடி­வில் அவர் எந்தக் குற்­ற­மும் செய்­ய­வில்லை என நிரூ­ப­ண­மா­னது. இதை­ய­டுத்து அவர் விடு­தலை செய்­யப்­பட்­டார்.

அவ­ரது வாழ்க்­கை­யில் நிகழ்ந்த பல்­வேறு சம்­ப­வங்­களை அடிப்­ப­டை­யாக வைத்து இப்­ப­டத்­தின் திரைக்­கதையை எழுதி உள்­ளார் மாத­வன். நடி­கர்­கள் சூர்யா, ஷாருக்­கான் கௌ­ரவ வேடத்­தில் நடித்­துள்­ள­னர். சாம் சி.எஸ். இசை­ய­மைத்­துள்­ளார். இப்­ப­டத்­தின் முன்­னோட்­டக் காட்­சித்­தொ­குப்பு நேற்று முன்­தினம் வெளி­யா­னது. நடி­கர் சூர்யா அத்­தொ­குப்பை வெளி­யிட்டு மாத­வ­னைப் பாராட்­டிப் பேசி­னார்.

தனக்­கும் இப்­ப­டத்­தில் ஓர் அங்­க­மாக இருக்க வாய்ப்­ப­ளித்த மாத­வ­னுக்கு நன்றி தெரி­விப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"ஒரு நாயை அழிக்க அதற்கு வெறி­நாய்னு பட்­டம் கட்­டி­னாலே போதும். அதுபோல ஒரு மனுஷனை தலைதூக்க முடி­யாத அள­வுக்கு அடிச்சிக் கொல்­ல­ணும்னா... அவ­னுக்கு தேச துரோ­கின்னு பட்­டம் கொடுத்தா போதும்," என இப்­படத்­தில் சூர்யா பேசும் வச­னங்­கள் முன்­னோட்­டத்­தில் இடம்­பெற்­றுள்­ளன. அவற்றுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.