'உடனே முடிவு செய்தேன்'

3 mins read

'பாகு­பலி' பிர­பாஸ் ஜோடி­யாக 'ராதே ஷ்யாம்' படத்­தில் நடித்து முடித்­துள்­ளார் பூஜா ஹெக்டே.

ஒரே சம­யத்­தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மும்­மொ­ழி­களில் உரு­வா­கும் படம் இது. இந்­நி­லை­யில் 'தள­பதி 65' படத்­தி­லும் பூஜாவை ஒப்­பந்­தம் செய்­துள்­ள­னர். இத­னால் இரட்­டிப்பு உற்­சா­கத்­தில் மிதக்­கி­றார்.

"கிட்­டத்­தட்ட ஒன்­பது ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு தமி­ழில் நடிக்­கி­றேன். உல­கமே தமிழ் சினிமா உல­கின் படைப்­பு­களை ஆர்­வ­மா­கப் பார்த்து வர­வேற்­கும் நிலை­யில் விஜய்­யு­டன் இணைந்து நடிக்க கசக்­கவா செய்­யும்?

"முதல் கட்­டப் படப்­பி­டிப்பு தொடங்­கி­விட்­டா­லும் எனக்­கான காட்­சி­கள் இப்­போது எடுக்­கப்­ப­ட­வில்லை. இரண்டு அல்­லது மூன்­றாம் கட்­டப் படப்­பி­டிப்­பில்­தான் நான் பங்­கேற்­பேன்," என்­கி­றார் பூஜா.

தமி­ழில் ஏற்­கெ­னவே 'முக­மூடி' படத்­தில் நடித்­துள்­ளார் இவர். இம்­முறை விஜய் படத்­துக்­கான கதை­யைக் கேட்­ட­வு­ட­னேயே நடிக்­க­வேண்­டும் எனும் ஆர்­வம் மன­தில் மேலோங்­கி­ய­தா­கச் சொல்­கி­றார்.

"உண்­மை­யில் இப்­ப­டி­யொரு வாய்ப்பு கிடைத்­த­தில் வானத்­தில் பறப்­ப­து­போல் உணர்­கி­றேன். இயக்­கு­நர் நெல்­சன் கதையை விவ­ரித்­த­போதே சுவா­ர­சி­ய­மாக இருந்­தது. இப்­ப­டிப்­பட்ட கதை­யை­யும் விஜய்­யு­டன் ஜோடி சேர்­வ­தற்­கான நல்ல வாய்ப்­பை­யும் இழந்­து­வி­டக்­கூ­டாது என கதை கேட்டு முடித்த அந்த நொடியே முடி­வெ­டுத்து விட்­டேன்.

"ரசி­கர்­கள் இப்­ப­டத்­தைக் கொண்­டாடி தீர்ப்­பார்­கள். அப்­ப­டி­யொரு ஜன­ரஞ்­ச­க­மான வணிக அம்­சங்­கள் நிறைந்த கதை. இந்­தப் படத்­தி­லும் நான் அழ­கா­கத் தெரி­வேன். கார­ணம் 'ராதே ஷ்யாம்' படத்­தின் ஒளிப்­ப­தி­வா­ளர் மனோஜ் பர­ம­ஹம்சா சார்­தான் 'தள­பதி 65'க்கும் ஒளிப்­ப­தி­வா­ளர்," என்று உற­சா­கத்­து­டன் பேசு­கி­றார் பூஜா ஹெக்டே.

நடி­கை­யாக ஆகா­மல் இருந்­தி­ருந்­தால் பய­ணம் சார்ந்த துறை­களில் பணி­யாற்றி இருப்­பா­ராம். ஒரே இடத்­தில் அமர்ந்து வேலை பார்ப்­பது தமக்­குப் பிடிக்­காது என்­கி­றார்.

மாட­லிங், விளம்­ப­ரத் துறை­க­ளி­லும் மிகுந்த ஆர்­வம் உண்­டாம். உல­கின் மற்ற எந்­தப் பகு­தி­யை­யும் விட மும்­பை­யில் உள்ள தனது வீடு­தான் சொர்க்­கம் என்று சொல்­ப­வர், ஓய்­வெ­டுக்க வேண்­டும் என்று முடி­வெ­டுத்­தால் பாலி தீவுக்­குப் பறந்து விடு­கி­றார்.

தாமே இரவு உண­வைச் சமைத்து சாப்­பி­டு­வ­தில் ஆர்­வம் கொண்­டுள்ள பூஜா, மெழு­கு­வர்த்தி வெளிச்­சத்­துக்கு மத்­தி­யில் இரவு உணவை சுவைப்­பது அலா­தி­யான இன்­பம் தரும் அனு­ப­வம் என விவ­ரிக்­கி­றார்.

"'ராதே ஷ்யாம்' படம் எதிர்­பார்த்­த­தை­விட மிக நல்ல பட­மாக உரு­வாகி உள்­ளது. கொரோனா அச்­சு­றுத்­த­லுக்கு மத்­தி­யில்­தான் படப்­பி­டிப்பை நடத்­தி­னார்­கள். படக்­கு­ழு­வில் இருந்த எல்­லோ­ருமே எந்­நே­ர­மும் முகக்­க­வ­சம் அணிந்­தி­ருந்­தோம். தின­மும் நான்­கைந்து முறை­யா­வது உடல் வெப்­பத்­தைப் பரி­சோ­திப்­பார்­கள்.

"இப்­ப­டிப்­பட்ட கடு­மை­யான விதி­மு­றை­க­ளுக்கு மத்­தி­யில் கடி­ன­மான கால­கட்­டத்­தில் பணி­யாற்­றி­யதை நினைத்­துப் பெரு­மைப்­ப­டு­கி­றேன்," என்று சொல்­லும் பூஜா 'ராதே ஷ்யாம்' அனைத்து மொழி ரசி­கர்­க­ளி­டம் இருந்­தும் தமக்­குப் பாராட்­டு­க­ளைப் பெற்­றுத் தரும் என நம்­பு­கி­றார்.

பட நாய­கன் பிர­பா­சும் தயா­ரிப்­பா­ள­ரும் நெருங்­கிய நண்­பர்­க­ளாம். அத­னால் படப்­பி­டிப்­புத் தளம் எந்­நே­ர­மும் கல­க­லப்­பாக இருக்­கு­மாம்.

"பிர­பா­சை பொறுத்­த­வரை எப்­போ­துமே வேடிக்­கை­யா­க­வும் உற்­சா­க­மா­க­வும் பேசக்­கூ­டி­ய­வர். அவ­ரு­டன் பேசி­னால் பொழுது போவதே தெரி­யாது. அல்லு அர்­ஜு­னு­டன் நடித்த 'அல­வை­குந்­த­பு­ரம்லு' படம் வாழ்க்­கை­யில் மறக்க முடி­யா­தது. மிகப்­பெ­ரிய வெற்­றிப்­ப­ட­மாக அமைந்து ரசி­கர்­க­ளி­டம் எனக்­குப் பெயர் வாங்­கித் தந்­துள்­ளது.

"இந்­தப் படத்­தைப் பார்த்த ரசி­கர்­களில் பெரும்­பா­லா­னோர் அதில் நான் ஏற்று நடித்த 'புட்­டம்மா' கதா­பாத்­தி­ர­மா­கவே என்­னைப் பார்க்­கி­றார்­கள். நான் நடித்­த­தி­லேயே அந்­தப் படம்­தான் மிக அதி­க­மாக மொழி­மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளது. தமி­ழி­லும் 'வைகுந்­த­பு­ரம்' என்ற தலைப்­பில் வெளி­யா­னது.

"அந்­தப் படத்­தின் மூலம் இவ்­வாறு சின்­னச்­சின்ன மகிழ்ச்­சி­யான விஷ­யங்­கள் நடந்து கொண்டே இருக்­கின்­றன. மீண்­டும் தமிழ் ரசி­கர்­க­ளு­டன் இணை­யும் வாய்ப்பு கிடைத்­துள்­ளது. இந்த முறை அவர்­கள் மன­தில் நிரந்­த­ர­மாக ஓர் இடத்­தைப் பிடிப்­பேன். அதுதான் இப்போது என் இலக்கு," என்­கி­றார் பூஜா ஹெக்டே.