'பிடித்திருந்தால் நடிப்பேன்'

'பிடித்திருந்தால் நடிப்பேன்'

2 mins read
a67efc53-150a-44f2-a36a-b671041a9679
-

நல்ல கதைக்­க­ரு­வுள்ள, சமூ­கத்­துக்கு நல்ல விஷ­யங்­களை எடுத்­துச் சொல்­லக்­கூ­டிய படங்­களில் நடிப்­ப­து­தான் தனது நோக்­கம் என்­கி­றார் ஷீலா ராஜ்­கு­மார்.

'டூலெட்', 'திரௌ­பதி', 'மண்­டேலா' என்று இவர் தேர்வு செய்­யும் படங்­கள் இவ­ரைக் கவ­னிக்க வைக்­கின்­றன. அதே ­ச­ம­யம் சர்ச்­சைக்­கு­ரிய படைப்­பு­களிலே நடிப்­பது மட்­டும் இலக்­கல்ல என்­றும் தெளி­வு­ப­டுத்­து­கி­றார் ஷீலா.

"'திரௌ­பதி' படத்­தின் கதைக்­கரு எனக்­குப் பிடித்­தி­ருந்­தது. எத்­த­கைய கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­தால் நான் முன்­னேற முடி­யும் என்­ப­தைக் கணக்­கிட்­டுச் செயல்­ப­டு­கி­றேன்.

"எனக்­குப் பிடித்த பாத்­தி­ரங்­களில் மட்­டுமே நடிப்­பேன்.

"அதே­ச­ம­யம் கருத்து ரீதி­யாக 'திரௌ­பதி' குறித்து ஏதும் விவா­திக்க விரும்­ப­வில்லை. படத்தை எப்­படி உரு­வாக்­கு­வது என்­பது இயக்­கு­ந­ரின் விருப்­பம். அதில் நான் தலை­யிட முடி­யாது," என்று பக்­கு­வ­மா­கப் பேசு­கி­றார் ஷீலா.

யோகி­பா­பு­வும் இவ­ரும் இணைந்து நடித்­துள்ள மண்­டேலா திரைப்­ப­டம் அண்­மை­யில் வெளி­யாகி வசூல், விமர்­சன ரீதி­யில் நல்ல வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது.

சிறு வயது முதலே இவ­ருக்கு நடிப்­பில் மிகுந்த ஆர்­வ­மாம். பள்­ளி­யில் எல்­லாப் பாடங்­க­ளி­லும் குறை­வான மதிப்­பெண் பெற்­று­தான் தேர்ச்சி பெற்­றுள்­ளார். ஆசி­ரி­யர்கள் அப்போது கண்­டிக்­கும்­பொழுது முகத்­தைப் பல­வி­த­மாக வைத்­துக்­கொண்டு அவர்­க­ளின் பரி­தா­பத்­தைப் பெற்றுவிடு­வா­ராம்.

"பள்­ளிப் படிப்பு முடிந்­த­வு­டன் பர­த­நாட்­டி­யத்­தில் பட்டமேற்­ப­டிப்பை முடித்­தேன். அதன்­பி­றகு பல நாட­கங்­களில் பங்­கேற்­கும் வாய்ப்­பு­கள் கிடைத்­தன. கூத்­துப்­பட்­டறை நாட­கங்­க­ளி­லும் என்­னைச் சிலர் பார்த்­தி­ருக்க முடி­யும்.

"அதன் ­பி­றகு சினி­மா­வில் நடித்­தால் நிச்­ச­யம் சாதிக்க முடி­யும் என்று தோன்­றி­யது. 'டூலெட்' படம் அதற்­கான நல்ல வாய்ப்­பாக அமைந்­தது. அந்­தப் படத்­தைத் தயா­ரித்த நிறு­வ­னமே பிறகு ஒரு தொலைக்­காட்­சித் தொட­ரில் நாய­கி­யாக நடிக்­கும் வாய்ப்பு கொடுத்­தது.

"நான் நடித்த எல்லா கதா­பாத்­தி­ரங்­க­ளுமே சமூக ரீதி­யில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­வை­யாக அமைந்­த­தும் நல்ல, வலு­வான கதை­கள் அமை­வ­தும் எனது அதிர்ஷ்­டம்," என்­கி­றார் ஷீலா ராஜ்­கு­மார்.

ஒரே மாதி­ரி­யான கதா­பாத்­தி­ரங்­க­ளைத் தேர்வு செய்­யா­மல் வித்­தி­யா­சம் காட்­ட­வேண்­டும் என்­பது­தான் தமக்­குப் பிடிக்­கும் என்று சொல்­ப­வர், 'மண்­டேலா' படத்­தில் யோகி­பா­பு­வு­டன் நடித்­தது நல்ல அனு­ப­வ­மாக இருந்­தது என்­கி­றார்.

யோகி­பா­பு­வைப் போல தானும் கல­க­லப்­பான பெண்­தான் என்று சொல்­ப­வர், அவ­ருக்கு இணை­யாக தானும் நகைச்­சு­வை­யில் மிளிர முயற்சி செய்­த­தா­கக் கூறு­கி­றார்.

"யோகி­பாபு ஏதா­வது நகைச்­சு­வை­யாக சொல்­லிக்கொண்­டி­ருப்­பாரே, அவரை எப்­படி சமா­ளித்­தீர்­கள் என்­று­ பலர் என்­னி­டம் கேட்­ட­னர். உண்­மை­யில் நானும் நிறைய சேட்­டை­கள் செய்­வேன். ஆனால் பார்ப்­ப­தற்கு அமை­தி­யாக இருப்­பேன்.

'மண்­டேலா' படம் குறித்து?

"அப்­ப­டிப்­பட்ட கதா­பாத்­தி­ரத்தை பெரும்­பா­லான கிரா­மத்­துப் பெண்­கள் நிச்­ச­யம் விரும்­பு­வார்­கள். பொது­வாக அழகு, புறத்­தோற்­றம் ஆகி­ய­வற்­றைக் கடந்து ஒரு தனிப்­பட்ட மனி­தன் என்ன செய்­கி­றான், மற்­ற­வர்­க­ளுக்கு எப்­படி முன்மாதிரியாக செயல்­ப­டு­கி­றான் என்பது­தான் நிஜ வாழ்க்­கை­யின் முக்­கி­ய­மான அம்­சங்­கள். அப்­ப­டி­யா­னதொரு கதா­பாத்­தி­ரம்­தான் 'மண்டேலா'. அத­னால்­தான் பட நாயகி தேன்­மொழி மண்­டே­லாவை நேசிப்­பாள். இப்­ப­டிப்­பட்ட கதா­பாத்­தி­ரங்­களை யாருக்­குத்­தான் பிடிக்­காது. ரசி­கர்­க­ளுக்­குப் பிடித்­த­தால் வர­வேற்­கி­றார்­கள்," என்­கி­றார் ஷீலா.