எஸ்.எஸ்.ராஜமித்ரன் இயக்கத்தில் ஆரி அர்ஜுனா, ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகி வரும் படம் 'அலேகா'.
கடந்து போன காதல், தற்போதைய காதல் என காதலை மட்டுமே மையப்படுத்தி இப்படம் உருவாகிறது என்கிறார் இயக்குநர்.
சத்யா இசையமைக்க, விவேகா, யுகபாரதி ஆகியோர் பாடல்களை எழுதி உள்ளனர்.
'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பிறகு ஆரி நடிக்கும் படம் இது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இயக்குநர் ராஜமித்ரன் இதற்கு முன்பு 'அய்யனார்' என்ற படத்தை இயக்கியவர். அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதையுடன் இப்படத்தை இயக்கி உள்ளார்.