ஜார்ஜியாவில் நடைபெற்று வரும் 'தளபதி 65' படத்தின் படப்பிடிப்பு அங்கு பெய்துவரும் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த கையோடு 'தளபதி 65' படக்குழுவினர் ஜார்ஜியா புறப்பட்டனர். அங்கு முக்கிய காட்சிகளைப் படம்பிடிக்கத் திட்டமிட்டுள்ளார் இயக்குநர் நெல்சன்.
கொரோனா விவகாரத்தால் எந்த நேரத்திலும் பிரச்சினை வரலாம் என்பதால்தான் ஜார்ஜியாவில் முதலில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்தனராம்.
ஆனால், அங்கு அண்மைய சில தினங்களாக திடீர் மழை வெளுத்துக் கட்டுகிறதாம். அதனால் கடந்த இரு தினங்களாக படக்குழுவினர் தங்கும் விடுதிகளிலேயே முடங்கியுள்ளனர்.
வேறு வழியின்றி திட்டமிட்டதைவிட மேலும் மூன்று தினங்களுக்குப் படப்பிடிப்பை நீட்டிக்க வேண்டும் என்று இயக்குநர் நெல்சன் கூற அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் விஜய்.
இதனால் இயக்குநர் தரப்பு நிம்மதி அடைந்துள்ளது. கொட்டும் மழையில் ஒரு சண்டைக்காட்சியைப் படமாக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.