'அந்நியன்' மறுபதிப்பு: வெடித்தது சர்ச்சை

'அந்நியன்' மறுபதிப்பு: வெடித்தது சர்ச்சை

2 mins read
7a1b9966-34c8-4988-b884-086f51f75979
'அந்நியன்' படத்தின் காட்சியில் விக்ரம், சதா. -

'அந்­நி­யன்' படத்தை இந்­தி­யில் மறு­ப­திப்பு செய்­வ­தாக இயக்­கு­நர் சங்­கர் அறி­வித்த கையோடு சர்ச்சை வெடித்­துள்­ளது.

அந்­தப் படத்­தின் உரி­மம் தம்­மி­டம் இருப்­ப­தா­க­வும் மறு­ப­திப்பு செய்­வ­தற்­கான அனு­ம­தியை சங்­கர் முறைப்­படி தம்­மி­டம் பெற­வில்லை என்­றும் தயா­ரிப்­பா­ளர் ஆஸ்­கார் ரவிச்­சந்­தி­ரன் புகார் எழுப்­பி­யுள்­ளார். ஆனால் சங்­கரோ 'அந்­நி­யன்' கதை தன்­னு­டை­யது என்­ப­தால் யாரி­ட­மும் அனு­மதி பெற வேண்­டிய அவ­சி­யம் இல்லை என்­கி­றார்.

சங்­கர் இயக்­கத்­தில் விக்­ரம் நடித்து 2005ல் வெளி­யான படம் 'அந்­நி­யன்'. இதில் ரெமோ, அம்பி, அந்­நி­யன் ஆகிய மூன்று வித்­தி­யா­ச­மான தோற்­றங்­களில் நடித்து ரசி­கர்­க­ளி­டம் பாராட்­டு­க­ளைப் பெற்­றார் விக்­ரம்.

தற்­போது இப்­ப­டத்தை இந்­தி­யில் மறு­ப­திப்பு செய்ய உள்­ள­னர். இந்தியில் ரன்­வீர் சிங் நாய­க­னாக நடிப்­ப­தாக சங்­கர் அறி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில் 'அந்­நி­யன்' மறு­பதிப்பு தக­வல் தமக்கு அதிர்ச்சி அளித்­தி­ருப்­ப­தாக தயா­ரிப்­பா­ளர் ஆஸ்­கர் ரவிச்­சந்­தி­ரன் கூறி­யுள்­ளார்.

"எழுத்தாளர் சுஜாதாவிடம் அந்தக் கதையை முழு தொகை கொடுத்து நான் வாங்கி வைத்திருக்கிறேன். என்னிடம்தான் முழு உரிமை இருக்கிறது.

"மறு­ப­திப்பு செய்ய வேண்­டும் என்­றால் என்­னி­டம் அனு­மதி பெற வேண்­டும். அனு­மதி பெறா­மல் செயல்­ப­டு­வது சட்­டப்­படி குற்­றம்.

"பாய்ஸ்' படம் தோல்­வி­ அடைந்து சங்­க­ருக்கு மதிப்பு குறைந்­த­போது நான்­தான் 'அந்­நி­யன்' படத்தை இயக்­கும் வாய்ப்­பைத் தந்து அவரை பழைய நிலைக்கு கொண்டு வந்­தேன்.

"ஆனால் இப்­போது என்­னைத் தவிர்த்­து­விட்­டுச் செயல்­ப­டு­வது சங்­க­ரின் கீழ்த்­த­ர­மான மன­நி­லை­யைக் காட்­டு­கிறது," என்று ஆஸ்­கார் ரவிச்­சந்­தி­ரன் தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில் 'அந்­நி­யன்' படத்­தின் திரைக்­க­தை­யிலோ பாத்­தி­ரப் படைப்­பிலோ எழுத்­தா­ளர் சுஜாதா சம்­பந்­தப்­ப­ட­வில்லை என்­றும் வச­ன­கர்த்தா என்­ப­தைத் தாண்டி அவர் வேறு எந்த வகை­யி­லும் அப்­ப­டத்­தில் ஈடு­ப­ட­வில்லை என்­கி­றார் சங்­கர்.

"திரைக்­கதை என்­னி­டம் இருப்­ப­தால் அதை நான் விரும்­பும் வகை­யில் பயன்­ப­டுத்­திக் கொள்­ளும் முழு உரிமை எனக்கு உள்­ளது. 'அந்நியனு'க்காக நீங்­களோ, உங்­கள் நிறு­வ­னமோ எந்த வித­மான உரி­மை­க­ளை­யும் கோர முடி­யாது. ஏனெ­னில் அந்த உரிமை உங்­க­ளுக்கு எழுத்­து­பூர்­வ­மாக தரப்­ப­ட­வில்லை. எனவே கதைக்­கான உரிமை உங்­க­ளி­டம் உள்­ளது என்பதைச் சொல்ல உங்­க­ளுக்கு எந்த அடிப்­ப­டை­யும் இல்லை," என்று சங்­கர் தெரி­வித்­துள்­ளார்.