தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'அடிதடிக்கு காத்திருக்கிறேன்'

2 mins read
6521b4f3-e43b-45d6-858f-00ab19529a7b
-

கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக பல விஷ­யங்­கள் தமக்கு மன­நி­றைவை ஏற்படுத்­தும் வகை­யில் நடந்து வரு­வ­தா­கச் சொல்­கி­றார் மஞ்சு வாரி­யர்.

தமி­ழில் 'அசு­ரன்', மலை­யா­ளத்­தில் 'த பிரீஸ்ட்', 'சதுர்­மு­கம்' ஆகிய படங்­க­ளுக்கு கிடைத்த வர­வேற்­பும் பாராட்­டு­களும் தமக்கு மிகுந்த உற்­சா­கம் அளித்­தி­ருப்­ப­தாக அண்­மைய பேட்­டி­யில் அவர் கூறி­உள்ளார்.

"மூன்று படங்­க­ளுமே எனது நடிப்­புத் திற­மைக்­குக் கிடைத்த அங்­கீ­கா­ரங்­க­ளாக உள்­ளன. கூடு­த­லாக விரு­து­களும் கிடைத்­தி­ருப்­பது மகிழ்ச்­சி­யைப் பன்­ம­டங்கு அதி­க­ரித்­தி­ருப்­பது உண்­மை­தான்.

"அதி­லும் 'அசு­ரன்' படத்­துக்கு தேசிய விரு­தும் பிற மொழி­களில் வர­வேற்பு கிடைத்­த­தும் நான் எதிர்­பா­ராத விஷ­யங்­கள். அதே­ச­ம­யம் விரு­து­களை மீறி ரசி­கர்­க­ளின் பாராட்­டு­தான் முக்கி­யம் எனக் கரு­து­கி­றேன். ஏனெ­னில் ஒவ்­வொரு கலை­ஞ­ருக்­கும் வளர்ச்­சி­யும் மன­நி­றை­வும் ரசி­கர்­க­ளின் பாராட்­டைப் பொறுத்தே அமை­கிறது," என்­கி­றார் மஞ்சு வாரி­யர்.

'த பிரீஸ்ட்', 'சதுர்­முகம்' ஆகிய இரு படங்­களும் நல்ல வசூ­லைப் பெற்­றுள்­ளன. திகில் படங்­க­ளாக உரு­வாகி உள்ள இவற்­றுக்கு விமர்­ச­கர்­கள் ஒரு­மித்த ஆத­ரவை வழங்­கி­யுள்­ள­னர். 'சதுர்­மு­கம்' கடந்த ஆண்டே வெளி­யாகி இருக்க வேண்­டு­மாம். ஆனால், கொரோனா விவ­கா­ரத்­தால் எல்­லாம் தாமதம் அ­டைந்­துள்­ளது.

"இரண்­டுமே திகில் படங்­கள்­தான் என்­றா­லும் மாறு­பட்ட கதைக்­க­ளங்­க­ளாக அமைந்­தன. மேலும் இரு­வேறு கதா­பாத்­தி­ரங்­க­ளில்­தான் நடித்­துள்­ளேன். இரண்டு படைப்­பு­க­ளுமே ரசிகர்களை திருப்­திப் ­ப­டுத்­தும் என்ற நம்­பிக்கை இருந்­தா­லும் வசூ­லி­லும் பெரி­தா­கச் சாதிக்­கும் என எதிர்­பார்க்­க­வில்லை," என்­கி­றார் மஞ்சு வாரி­யர்.

'சதுர்­மு­கம்' படத்­தின் இறு­திக்­காட்­சி­யில் இவ­ரது நடிப்­புக்கு பலத்த பாராட்டு கிடைத்­துள்­ளது. மேலும் சக கலை­ஞர்­களின் பங்­க­ளிப்­புக்­கும் ரசி­கர்­க­ளின் அங்­கீ­கா­ரம் கிடைத்­தி­ருப்­ப­து­தான் படத்­தின் வெற்­றிக்­குச் சான்று என்­று­ சொல்­லும் மஞ்சு வாரி­யர், இப்­போது படத் தயா­ரிப்­பி­லும் தம்மை ஈடு­ப­டுத்­திக் கொண்­டுள்­ளார்.

'சதுர்­மு­கம்' படத்­தில் எப்­போ­தும் சமூக வலைத்­த­ளங்­களில் மூழ்­கிக் கிடக்­கும் பெண்­ணாக நடித்­துள்­ளார். அது­கு­றித்து ரசி­கர்­கள் தெரிவிக்கும் கருத்­து­கள் தம்மை வெகு­வா­கக் கவர்ந்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

இதற்­கி­டையே அறி­முக இயக்­கு­நர்­கள் சில­ரது படங்­களில் நடிக்க ஒப்­புக் கொண்­டுள்­ளா­ராம் மஞ்சு. அவர்­க­ளி­டம் பல்­வேறு திற­மை­கள் குவிந்­தி­ருப்­ப­தா­கச் சொல்­ப­வர், அத்­த­கை­ய­வர்­க­ளுக்கு வாய்ப்பு அளித்­தால்­தான் திரை­யு­ல­கம் அடுத்­த­டுத்த கட்­டங்­க­ளுக்கு நகர்ந்து செல்­லும் என்­கி­றார். 'அசு­ரன்' பெரும் வெற்­றி­யைப் பெற்ற பிற­கும் தமிழ்ப் படங்­களில் ஏன் கவ­னம் செலுத்­து­வ­தில்லை என்று பல­ரும் கேட்­கி­றார்­க­ளாம். அதற்கு தனிப்­பட்ட கார­ணங்­கள் ஏதும் இல்லை என்­கி­றார்.

"அனை­வ­ருக்­கும் 'அசு­ரன்' படம் பெற்­றுள்ள அபார வெற்றி குறித்து தெரி­யும். எனவே, நான் அடுத்து நடிக்­கும் படம் 'அசு­ரனு'க்கு இணை­யாக அல்­லது அதை­விட சிறப்­பா­ன­தாக இருக்கவேண்­டும் என விரும்­பு­கி­றேன். அப்­ப­டிப்­பட்ட கதைக்­காக பொறு­மை­யு­டன் காத்­தி­ருக்­கி­றேன்.

"அது­மட்­டு­மல்ல, அடுத்து ஒரு அடி­தடி சண்­டைக்­காட்­சி­கள் நிறைந்த கதை­யில் நடிக்கவேண்­டும் என்ற ஆர்­வ­மும் உள்­ளது," என்று சொல்லும் மஞ்சு வாரியர், அடுத்து மாதவனுடன் இணைந்து இந்திப் படம் ஒன்றிலும் நடிக்கிறார்.

, :   

மஞ்சு வாரியர்