திருமணத்துக்குப் பிறகு திரையுலகை விட்டு விலகிய நடிகை நவ்யா நாயர் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
மலையாளத்தில் வெற்றி பெற்ற 'திரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகம் கன்னடத்தில் மறுபதிப்பாகிறது. பி.வாசு இயக்குகிறார்.
ரவிச்சந்திரன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நவ்யா நாயரையும் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
தமிழில் 'அழகிய தீயே', 'சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி', 'பாச கிளிகள்', 'மாயக்கண்ணாடி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

