'ரசிகர் கூட்டம் வேண்டும்'

'ரசிகர் கூட்டம் வேண்டும்'

3 mins read
dd48c088-7ca0-4344-bdae-000a209c16d4
-

திரை­யு­ல­கில் அறி­மு­க­மான வேகத்­தி­லேயே பிரி­யங்கா மோக­னுக்கு வாய்ப்­பு­கள் குவி­கின்­றன. தெலுங்கு தேசத்­தி­லி­ருந்து கோடம்­பாக்­கத்­தில் கால்­ப­தித்­துள்ள இவர், சிவ­கார்த்­தி­கே­ய­னின் 'டாக்­டர்' படத்­தில் நாய­கி­யாக நடிக்­கி­றார்.

அதை­ய­டுத்து சிவா­வு­டன் மீண்­டும் 'டான்' படத்­தில் இணைந்­தி­ருப்­ப­வர், சன் பிக்­சர்ஸ் தயா­ரிப்­பில் பாண்­டி­ராஜ் இயக்­கும் 'சூர்யா 40' படத்­தின் நாய­கி­யா­க­வும் நடிக்­கி­றார்.

"அடிப்­ப­டை­யில் நான் மேடை நாடக நடிகை. நிறைய நாட­கங்­களில் நடித்­தி­ருக்­கி­றேன். அப்­போ­து­தான் தெலுங்­குப் பட வாய்ப்பு தேடி­வந்­தது. நானி சாரு­டன் 'கேங் லீடர்' படத்­தில் நடித்­தேன்.

"இயக்­கு­நர் விக்­ரம் குமார், பி.சி. ஸ்ரீராம் இரு­வ­ரும்­தான் நடிப்­புத் தேர்வு, ஒப்­ப­னைத் தேர்­வுக்­குப் பிறகு என்­னைத் தேர்வு செய்­த­னர். படப்­பி­டிப்­பின் முதல் நாளன்று சற்று மிரண்டு போனேன். கார­ணம் நானி சார் தவிர மூத்த நடி­கை­கள் லட்­சுமி, சரண்யா ஆகி­யோ­ரும் இருந்­த­னர்.

"அனு­பவ நடி­கை­களான அவர்­க­ளு­டன் இணைந்து நடித்­த­போது கொஞ்­சம் உத­றல் ஏற்­பட்­டது. ஆனால் இரு­வ­ருமே மிக­வும் கனி­வா­ன­வர்­கள். என் மன­நி­லை­யைப் புரிந்­து­கொண்டு அன்­பா­கப் பேசி, தயக்­கத்­தைப் போக்கி தைரி­ய­மூட்­டி­னர்," என்­கி­றார் பிரி­யங்கா மோகன்.

'கேங் லீடர்' படத்­தில் தாம் ஒப்­பந்­த­மான நாள்­தான் வாழ்­நா­ளில் மறக்­க­மு­டி­யாத தரு­ணம் என்று குறிப்­பி­டு­ப­வர், அந்­தப் படத்­தில் நடித்து முடிப்­ப­தற்­குள் திரை­யு­ல­கின் நெளிவு சுளி­வு­கள், நுணுக்­கங்­கள் பல­வற்­றைக் கற்­றுக்கொண்­ட­தா­கச் சொல்­கி­றார்.

"சிவா­வு­டன் நடிக்­கும் 'டாக்­டர்' படத்­தில் ஒப்­பந்­த­மா­ன­தும் மறக்க முடி­யாத தரு­ணம்­தான். சிவா­வைப் பொறுத்­த­வரை பழ­கு­வ­தற்கு மிக இனி­மை­யா­ன­வர். அவ­ரைப் பற்றி ஒரு ரக­சி­யம் சொல்­கி­றேன். இனிப்­பு­கள் என்­றால் மிக­வும் விரும்­பிச் சாப்­பி­டு­வார். உண­வுக் கட்­டுப்­பா­டு­களை மறந்­து­வி­டு­வார்.

"டாக்­டர்' படத்­தில் நடித்­த­போது நட்­பா­கப் பழ­கி­ய­து­டன் சினிமா சார்ந்த சந்­தே­கங்­கள் பல­வற்­றைப் போக்­கி­னார்.

"சூர்யாவு­டன் இணைந்து நடிக்­கும் படத்­தின் பணி­கள் இன்­னும் துவங்­க­வில்லை. விக்­ரம் குமார் இயக்­கத்­தில் உரு­வான '24' படத்­தில் சூர்­யா­வின் நடிப்­பைக் கண்டு வியந்­தி­ருக்­கி­றேன்.

"படப்­பி­டிப்­பின்­போது தான் அவ­ரு­டன் பேச வேண்­டும். அதற்­காக ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கிறேன்," என்று சொல்­லும் பிரி­யங்கா மோக­னுக்கு, காதல் மீது மிகுந்த நம்­பிக்கை உண்­டாம்.

ஆனால், காதல் திரு­ம­ணம், நிச்­ச­யிக்­கப்­பட்ட திரு­ம­ணம் ஆகி­ய­வற்­றில் எது சிறந்­தது என்று கேட்­டால், தம்­மால் பதில் சொல்ல இய­லாது என்­கி­றார்.

"இப்­போ­தைக்கு சினி­மா­வில் மட்­டுமே என் கவ­னம் குவிந்­தி­ருக்­கிறது. மேடை நாட­கத்­தில் இருந்து வெள்­ளித்­திரை வரை வந்­தி­ருக்­கி­றேன். மேடை­யில் நடிக்­கும்­போது எதிரே ரசி­கர்­கள் இருப்­ப­தால் ஏதும் தவறு செய்­து­வி­டக்­கூ­டாது எனும் உத­றல் ஏற்­படும். ஒப்­பனை செய்­து­கொள்ள வேண்­டிய அவ­சி­ய­மில்லை. சினி­மா­வைப் பொறுத்­த­வரை ஒப்­பனை அவ­சி­யம் என்­பது புரிந்­து­விட்­டது. மேலும், கண் எதிரே பார்­வை­யா­ளர்­கள் இல்லை என்­ப­தால் தைரி­ய­மாக நடிக்­க­லாம்," என்­கி­றார் பிரி­யங்கா.

தெலுங்­கில் தனது முதல் படத்­தின் மூல­மா­கவே ரசி­கர்­க­ளைக் கவர்ந்­து­விட்ட பிரி­யங்கா, தனது சம்­ப­ளத்தை உயர்த்தி இருப்­ப­தா­கத் தக­வல். அது­கு­றித்­துப் பேசு­வ­தைத் தவிர்த்துவிடு­கி­றார். அதே­ச­ம­யம் திற­மைக்­கேற்ற ஊதி­யத்­தைப் பெறு­வ­தில் எந்­தக் கலை­ஞ­ரும் தயங்­கக் கூடாது என்றும் சொல்கிறார்.

"தெலுங்கு, தமிழ் சினிமா ரசி­கர்­கள் தங்­கள் அபி­மான நாய­கி­க­ளி­டம் வெகு­வாக அன்பு பாராட்டு­கி­றார்­கள். தங்­கள் அபி­மா­னக் கலை­ஞர்­க­ளுக்­காக பதா­கை­க­ளுக்கு பாலா­பி­ஷே­கம் செய்­வ­தில் தொடங்கி கோவி­லும்­கூட கட்­டு­கி­றார்­கள். இப்படிப்பட்ட ரசிகர் கூட்டம் வேண்டும் என்பதே என் விருப்பம்," என்கிறார் பிரியங்கா மோகன்.