'என் பெற்றோர் தந்த பரிசு'

'என் பெற்றோர் தந்த பரிசு'

2 mins read
046a1cbf-1a3e-4e92-b648-130bb40e936e
மிருணாளினி -

மிரு­ணா­ளி­னியை கோடம்­பாக்­கத்­தில் பெரும்­பா­லா­னோர் 'கண்­ண­ழகி' என்­று­தான் குறப்­பி­டு­கி­றார்­கள்.

'டிக்­டாக்' செயலி மூலம் ஏரா­ள­மான காணொ­ளி­கள் வெளி­யிட்டு மில்­லி­யன் கணக்­கான ரசி­கர்­க­ளைப் பெற்­றி­ருப்­ப­வர் மிரு­ணா­ளினி. தமி­ழ­கத்­தில் பெரும்­பா­லான இளை­யர்­க­ளுக்கு அவ­ரைத் தெரிந்­தி­ருக்­கக்­கூ­டும்.

தெரி­யா­த­வர்­க­ளுக்­காக அவ­ரைப் பற்­றிய சில விவகரங்கள். புது­வை­யில் பிறந்து பெங்­க­ளூ­ரு­வில் வளர்ந்த தமிழ்ப்­பெண் மிரு­ணா­ளினி. பொறி­யி­யல் துறை­யில் பணி­யாற்­றிக்கொண்டி­ருந்­த­வர் 'டிக்­டாக்' மூலம் பிர­ப­ல­மாகி, அதன்­மூ­லம் திரை­யு­ல­கில் நுழைந்­தி­ருக்­கி­றார்.

தியா­க­ரா­ஜன் குமா­ர­ரா­ஜா­வின் 'சூப்­பர் டீலக்ஸ்'தான் இவர் அறி­மு­க­மான படம். சிறிய கதா­பாத்­தி­ரம் என்­றா­லும் ரசி­கர்­க­ளின் மன­தில் பதிந்­து­விட்­டார். அதன்­பின்­னர் சுசீந்­தி­ர­னின் 'சாம்­பி­யன்' படத்­தில் முக்­காடு அணிந்து தனது முக­பா­வங்­க­ளால் அசத்­தி­னார்.

தற்­போது விக்­ரம், ஆர்யா, விஷால் என கோலி­வுட்­டின் பல முன்­னணி நாய­கர்­க­ளு­டன் சில படங்­களில் நடித்து வரு­கி­றார். சசி­கு­மா­ரு­டன் இணைந்து மிரு­ணா­ளினி நடித்­துள்ள 'எம்.ஜி.ஆர். மகன்' திரைப்­ப­டம் விரை­வில் வெளி­யா­கிறது.

யாரி­ட­மும் நடிப்­பைக் கற்­றுக்­கொள்­ளா­மல், யார் பாணி­யை­யும் பின்­பற்­றா­மல், இயல்­பாக நடிப்­பதே தமது பலம் என்று நினைப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"ஒரு பெண்­ணாக நிஜ வாழ்க்­கை­யில் மிரு­ணா­ளினி எப்­படி உணர்ச்­சி­களை வெளிப்­ப­டுத்­து­வாளோ அதை­யே­தான் படத்­தில் நடிக்­கும்­போ­தும் செய்­கி­றேன். எனது இந்த நடிப்பு மக்­க­ளுக்­குப் பிடித்­தி­ருக்­கிறது என்­பது அவர்­க­ளு­டைய பாராட்­டு­கள் வழி தெரி­கிறது. 'நீ, நீயாக இரு... நடிக்க முயற்சி செய்­யாதே' என்று சொல்­லித்­தான் நான் இது­வரை நடித்­துள்ள படங்­க­ளின் இயக்­கு­நர்­கள் என்னை வழி­ந­டத்­தி­யுள்­ள­னர்," என்­கி­றார் மிரு­ணா­ளினி.

இவர் முறைப்­படி பர­தம் பயின்­ற­தாக முன்பு வெளி­யான தக­வல் உண்மை அல்­ல­வாம். மிரு­ணா­ளி­னி­யின் தாயார்­தான் நட­னம் கற்­ற­வர்.

ஒரு­வேளை தம் அம்­மா­வின் திறமை மர­பணு மூல­மாக தமக்­கும் வந்­தி­ருக்கக்கூடும் என்று கிண்­ட­லா­கச் சொல்­கி­றார். கல்­லூரி கலை­வி­ழாக்­களில் நிறைய நட­ன­மாடி உள்­ளா­ராம். சில சம­யங்­களில் நட­னம் அமைத்த அனு­ப­வ­மும் உண்­டாம்.

"பொறி­யி­யல் வேலை­யில் மாதம் 40 ஆயி­ரம் சம்­ப­ளம் வாங்­கிக்கொண்­டி­ருந்­தேன். அதற்­குக் குடும்­பத் தேவை கார­ண­மல்ல. ஒரு பெண்­ணாக சொந்­தக் காலில் நிற்க பழ­கிக்­கொள்ள வேண்­டும் என்­பதே என் கொள்கை. என் பெற்­றோர் அப்­ப­டித்­தான் என்னை வளர்த்­துள்­ள­னர்.

"வேலை­யைக் கைவிட்­ட­போது, சற்று குழப்­ப­மாக இருந்­ததே தவிர, கஷ்­டம் ஏது­மில்லை," என்று சொல்­ப­வர், சினி­மா­வுக்­காக தாம் பார்த்­து­வந்த வேலையை மகிழ்ச்­சி­யா­கத்­தான் கைவிட்­டுள்­ளார்.

வேலை பார்த்­த­போ­து­தான் 'டிக்­டாக்' காணொ­ளி­கள் இவ­ருக்­குப் புக­ழைத் தேடிக் கொடுத்­தன. அழ­கான கண்­கள்­தான் தனது பலம் என்று குறிப்­பி­டு­ப­வர், தன் கண்­களைப் பெற்­றோர் தந்த பரி­சாக கரு­து­வ­தா­கச் சொல்­கி­றார்.

"அப்­பா­வின் பிர­வுன் நிறக் கண்­கள் எனக்கு ரொம்­பப் பிடிக்­கும். அம்­மா­வுக்கோ பெரிய கண்­கள். இவர்­கள் இரு­வ­ரு­டைய கல­வை­யாக அமைந்த கண்­கள் எனக்­குக் கிடைத்த வரப்­பி­ர­சா­தம். இயக்­கு­நர்­களும் ஒளிப்­ப­தி­வா­ளர்­களும் கேமரா வழி­யாக என் கண்­க­ளைப் பார்த்து வெகு­வா­கப் பாராட்டி உள்­ள­னர்.

"சினி­மா­வில் நடிக்க பெற்­றோர் முத­லில் அனு­மதி தர­வில்லை. சிறு கதா­பாத்­தி­ரங்­க­ளில்­தான் நடிக்­கி­றேன் என்று கூறி சமா­தா­னப்­ப­டுத்­தி­னேன். எனி­னும் சினிமா துறை பாது­காப்­பா­னது என்­பது தெரிய வந்­த­தும் அனு­மதி கொடுத்­த­னர்," என்­கி­றார் மிருணாளினி.