பரத்: இது புது அனுபவம்

பரத்: இது புது அனுபவம்

3 mins read
af687dd0-bb90-4a5b-8edb-3676f6e11b53
-

'காளி­தாஸ்' படத்­தின் வெற்­றிக்­குப் பிறகு படங்­க­ளைத் தேர்வு செய்­வ­தில் மிகுந்த கவ­னத்­து­டன் இருப்­ப­தா­கச் சொல்­கி­றார் பரத்.

தற்­போது 'யாக்­கைத் திரி'யில் நடித்­துள்­ள­வர், இந்­தப் பட­மும் ரசி­கர்­க­ளைக் கவ­ரும் என நம்­பிக்­கை­யு­டன் பேசு­கி­றார்.

முக்­கோ­ணக் காதல் கதை­யு­டன் உரு­வா­கும் 'யாக்­கைத் திரி'யில் பரத்­துக்கு ஜனனி ஐயர், சோனாக்‌ஷி சிங் ரவத் என இரு ஜோடி­கள். பிர­தாப் போத்­தன், பாண்­டி­ய­ரா­ஜன், பேராசி­ரி­யர் ஞான­சம்­பந்­தன், நடிகை சுதா சந்­தி­ரன் உள்­ளிட்­டோர் முக்­கி­ய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்க பரத் மோகன் இயக்­கு­கி­றார்.

"இது இசைக்­கும் காத­லுக்­கும் முக்­கி­யத்து­வம் அளிக்­கும் படம். அரோல் கரோலி இசை­யமைத்­துள்­ளார். படத்­தில் இடம்­பெ­றும் 4 பாடல்­களும் இளை­யர்­களை மட்­டு­மல்­லா­மல் எல்லா வய­தி­ன­ரை­யும் ரசிக்க வைக்­கும். நீண்ட நாள்களுக்குப் பிறகு கர்­நா­டக இசைப்­பா­டகி பாம்பே ஜெய­ஸ்ரீ ஒரு பாட­லைப் பாடி உள்­ளார்," என்­கி­றார் இயக்­கு­நர் பரத் மோகன்.

முக்­கோணக் காதல் கதை­யில் நடித்த அனு­ப­வம் மறக்கமுடி­யாத ஒன்று என்­றும் தமது பாத்­தி­ரத்­துக்­காக சற்றே மெனக்­கெட்­ட­தா­க­வும் கூறு­கி­றார் பரத். எனி­னும் சில சவா­லான காட்­சி­களில் நடித்­த­போது தர­மான படத்­தில் நடித்த மனநி­றைவு ஏற்­பட்­ட­தாம்.

"இது­வரை திரை­யில் பல­முறை எனக்­குத் திரு­ம­ணம் நடந்­துள்­ளது. ஆனால் இந்­தப் படத்­தில்­தான் முதன்­மு­றை­யாக கதைப்­படி நான் இரு­வரை திரு­ம­ணம் செய்­கி­றேன். இதுவே ஒரு வித்­தி­யா­ச­மான அனு­ப­வம்­தான்.

"கதைப்­படி ஜனனி, சோனாக்‌ஷி ஆகிய இரு­வ­ருமே என்­னைக் காத­லிக்­கி­றார்­கள். ஒரு­கட்­டத்­தில் இரு­வ­ரை­யும் திரு­ம­ணம் செய்­து­கொள்ள வேண்­டிய கட்­டா­யம் ஏற்­ப­டு­கிறது. இதில் கூடு­தல் சுவா­ர­சி­யம் என்­ன­வென்­றால், இரண்டு திரு­ம­ணக் காட்­சி­க­ளுமே ஒரே நாளில்­தான் பட­மாக்­கப்­பட்­டன.

"ஒரு படத்­தின் படப்­பி­டிப்­பில் அடுத்­த­டுத்து இரண்டு பேரை திரு­ம­ணம் செய்­து­கொள்­ளும் காட்சி பட­மாக்­கப்­பட்­ட­தும் எனக்கு புது அனு­ப­வம்," என்­கி­றார் பரத். குறிப்­பிட்ட அந்­தக் காட்­சி­க­ளைப் பட­மாக்­கி­ய­போது வேட்டி சட்டை­யு­டன் படப்­பி­டிப்­புக்குச் சென்­றா­ராம். முத­லில் பரத், ஜனனி சம்­பந்­தப்­பட்ட காட்­சி­களை எடுத்­துள்­ளார் இயக்­கு­நர் பரத் மோகன்.

"அந்­தக் காட்சி எடுக்­கப்­பட்ட அடுத்த சில நிமி­டங்­களில் என்­னைச் சுற்­றி­யுள்ள கதா­பாத்­தி­ரங்­கள், திரு­ம­ணம் நடை­பெ­றும் இடம், திரு­ம­ணத்­துக்கு வந்­துள்ள கூட்­டம், எனது தோற்­றம் ஆகிய எல்­லாமே மாறி­வி­டும்.

"அது­மட்­டு­மல்ல எனது உடல்­மொழி, வச­னங்­கள், முக­பா­வங்­களும் மாற­வேண்­டும் என்று இயக்­கு­நர் கூறி­விட்­டார். அத­னால்­தான் சற்றே மெனக்­கெட்­ட­து­டன் கவ­ன­மா­க­வும் இருந்­தேன்," என­கி­றார் பரத்.

கதைப்­படி இரு கதா­நா­ய­கி­க­ளை­யும் ஓராண்டு இடை­வெ­ளி­யில் திரு­ம­ணம் செய்து­கொள்­வ­தா­கத்­தான் இருக்­கி­ற­தாம். ஆனால் கொரோனா விவ­கா­ரத்­தால் கடந்­தாண்டு படப்­பி­டிப்பு பாதிக்­கப்­பட்­டது. எனவே, இந்­தாண்டு படப்­பி­டிப்பைத் தொடங்கி­ய­தும் 30 நாள்­க­ளிலே அனைத்துக் காட்சி­க­ளை­யும் எடுத்­தாக வேண்­டிய கட்டா­யம் ஏற்­பட்­ட­தால்­தான் இரு திரு­ம­ணங்­களை­யும் (கதைப்­படி) ஒரே நாளில் நடத்­தி­ய­தா­கச் சொல்லி சிரிக்­கி­றார் இயக்­கு­நர் பரத் மோகன்.

"ஒரே மாதத்­தில் ஒரு படத்தை எடுத்து முடிப்­பது எளி­தான காரி­ய­மல்ல. அனு­பவ நடி­க­ராக இதில் உள்ள சிர­மங்­களை நானும் அறிந்­துள்­ளேன். பல நாட்­கள் இரவு முழு­வ­தும் படப்­பி­டிப்பு நீடித்து அதி­கா­லை­யில்­தான் முடிந்­தது.

"அதன்­பின்­னர் வீடு திரும்பி நான்­கைந்து மணி நேர ஓய்­வுக்­குப் பிறகு மீண்­டும் படப்­பி­டிப்­பில் பங்­கேற்­றேன். ஒரு நாள் நான் இரு­சக்­கர வாக­னத்­தில் செல்­லும் முக்­கி­ய காட்சி ஒன்றை இர­வில் பட­மாக்­கி­னர்.

"ஏற்­கெ­னவே களைப்­பாக இருந்த நிலை­யில் கேம­ரா­வுக்கு முன்­னால் சீரான வேகத்­தில், ஒரே நேர்க்­கோட்­டில் இரு­சக்­கர வாக­னத்தை செலுத்­து­வது கடி­ன­ம். மேலும் கேம­ராவை விட்டு நான் வில­கிச் சென்­று­வி­டக் கூடாது என்­ப­தும் முக்­கி­யம். தூக்­க­மின்­மை­யும் களைப்­பும் சேர்ந்து­கொள்ள பல 'டேக்கு'கள் என்­னால் வீணா­கின. எனி­னும் படக்­குழு­வி­னர் முழு­மை­யாக ஒத்­து­ழைப்பு வழங்­கி­னர். இப்­படி ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் நன்கு புரிந்­து­கொண்டு செயல்பட்டோம்," என்கிறார் பரத்.

, :   

பரத்