'ஹாஸ்டல்': நான்கு மணிநேர கதை

'ஹாஸ்டல்': நான்கு மணிநேர கதை

2 mins read
75899d4c-6a67-42e2-aad1-bc7275b406d6
-

அழ­கான முத்­துக்­க­ளைத் தேர்வு செய்­வது போன்று நல்ல கதை­களை அடை­யா­ளம் கண்டு நடித்து வரு­கி­றார் பிரியா பவானி சங்­கர்.

அசோக் செல்­வ­னு­டன் இணைந்து இவர் நடித்­துள்ள 'ஹாஸ்­டல்' திரைப்­ப­டம் எதிர்­பார்ப்­பு­களை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

சுமந்த் ராதா­கி­ருஷ்­ணன் இயக்­கும் இந்­தப் படம் நான்கு மணி நேரம் மட்­டுமே நடக்­கும் கதை­யைக் கொண்டு உரு­வா­கிறது. சார்லி சாப்­ளின்­தான் தனக்­குப் பிடித்­த­மான மனி­தர் என்­கிறார் சுமந்த்.

காதல், அன்பு, வறுமை, கொடுமை என்று அனைத்­தை­யும் தமது படைப்­பு­களில் கல­வை­யாகக் கொடுத்த கலை­ஞன் சார்லி சாப்­ளின் என்று குறிப்­பி­டு­ப­வர், சாப்­ளி­னைப் போன்று வாழ்க்­கையை நகைச்­சு­வை­யாகப் பார்க்­கத் தொடங்­கி­விட்­டால் சோத­னை­களில் இருந்து தப்­பித்து விட­லாம் என்கிறார்.

"அத­னால்­தான் இந்­தப் படத்­தில் அனை­வரும் இடைவிடாமல் சிரிக்கும் வகையில் நகைச்­சு­வைக்கு முக்­கி­யத்­து­வம் அளித்திருக்கிறோம். கொரோனா கால­கட்­டத்­தில் மக்­கள் அனு­ப­வித்து வரும் துன்­பங்­களை முற்­றாக இது மறக்­கச் செய்யும்.

"எப்­போ­துமே கதை­யுடன் இழைந்த நகைச்­சுவை அமைந்­தால் நல்­லது. இந்­தப் படத்­தில் அவ்­வாறு அமைந்­துள்­ளது," என்­கி­றார் சுமந்த்.

இன்­றைய இளை­யர்­களில் பல­ருக்கு கல்­லூரி விடுதி­யில் தங்­கிப் படித்த அனு­ப­வம் இருக்­கும் என்று குறிப்­பி­டு­பவர், வீட்­டி­லி­ருந்து புறப்­பட்டு வந்து அனைத்­துக் கவ­லை­க­ளை­யும் தற்­கா­லி­க­ம­காக மறந்து நிம்­மதி பெறக்­கூ­டிய இட­மாக அந்த விடு­தி­கள் இருந்­தி­ருக்­கும் என்­கி­றார்.

கல்­லூரி விடு­தி­யின் ஒரு பகுதி திடீ­ரென இடிந்து விழு­வ­தால் வேறொரு இடத்­துக்கு மாண­வர்­கள் செல்­ல ­வேண்­டிய நிலை ஏற்படுகிறது.

அசோக் செல்­வன், சதீஷ், 'கலக்­கப் போவது யாரு' யோகி, கிரிஷ் உள்­ளிட்ட சிலர் இவ்வாறு இடம்­பெ­யர்­கி­றார்­கள்.

கல்­லூரி விடு­திக்கு நாச­ரும் முனீஷ் காந்­தும்­தான் வார்­டன்­கள். மாண­வர்­கள் தேர்­வில் கோட்டை விட்­டா­லும் பர­வா­யில்லை, ஒழுக்­கத்­து­டன் இருக்­க­வேண்­டும் என்­பா­ராம் நாசர்.

இந்­நி­லை­யில் மாணவர் விடு­திக்கு இரவு 11 மணிக்கு வரு­கி­றார் பிரியா பவானி சங்­கர். அதி­காலை மூன்று மணிக்கு அவர் அங்­கி­ருந்து வெளி­யே­று­வ­தாக திட்­டம் போடு­வார்­க­ளாம்.

"இந்த இடத்­தில் வேறு கற்­ப­னை­க­ளுக்கு இட­மில்லை. மாணவர் விடு­திக்கு வரும் அவர், அங்­கி­ருந்து வெளி­யே­று­வ­தற்­குள் பல்­வேறு பிரச்­சி­னை­கள் தோன்­று­கின்­றன.

"மாண­வர்­கள் எப்­ப­டி­யெல்­லாம் போராடி அவரை அனுப்பி வைக்­கின்­ற­னர் என்­பதை முழு­நீள கலாட்­டா­வாக சொல்­லப் போகி­றோம். நான்கு மணி நேரக் கதையை இரண்டு மணி நேரத்­தில் சொல்­லும்­போது ரசி­கர்­கள் நகைச்­சு­வை­யில் மூழ்­கிப் போவார்­கள்.

"அசோக் செல்­வன், பிரியா பவானி சங்­கர் இரு­வ­ருமே சிறப்­பாக நடித்­துள்­ள­னர். அசோக் செல்வன் பொறுத்தவரையில் நல்ல கதைகளாகத் தேர்வு செய்து நடிக்கிறார். அவரது நடிப்பும் மெருகேறி உள்ளது.

"மாண­வர் விடு­திக்­குள் நுழைந்து வெளி­யே­றும் ஓர் இளம்­பெண் எப்­ப­டி­யெல்­லாம் நடந்­து­கொள்­வார் என்­பதை தமது நடிப்­பில் அழ­காக வெளிப்­ப­டுத்தி உள்­ளார் பிரியா.

"அவரை நம்பி வித்­தி­யா­ச­மான, சவா­லான கதா­பாத்­தி­ரங்­களை ஒப்­ப­டைக்­க­லாம். அவற்றில் தன்னை கச்சிதமாகப் பொருத்திக் கொள்கிறார்," என்று பாராட்டுகிறார் இயக்குநர் சுமந்த்.