'இவர் அகதிகளின் பிரதிநிதி'

'இவர் அகதிகளின் பிரதிநிதி'

3 mins read
b8fe7782-5e9e-47c5-8b0b-2ff12662a5ff
-

விஜய் சேது­பதி நடிப்­பில் உரு­வாகி வரு­கிறது 'யாதும் ஊரே யாவ­ரும் கேளிர்'. அறி­முக இயக்­கு­நர் வெங்­கட கிருஷ்ண ரோகாந்த் இயக்­கு­கி­றார்.

இது தேசங்­க­ளைத் தாண்­டிய அக­தி­யின் கதை என்­றும் விஜய் சேது­பதி இசைக்­க­லை­ஞ­ராக நடிப்­ப­தா­க­வும் சொல்­கி­றார் இயக்­கு­நர்.

"எட்டு வய­தில் வீட்­டி­லி­ருந்து தொடங்­கும் ஒரு சிறு­வ­னின் பய­ணம் ஓர் இசைக்­க­லை­ஞ­ரா­க­வும் அக­தி­யா­க­வும் அவனை நட­மாட வைத்து, பிறகு எந்த இடத்­தில் அவ­னைக் கொண்டு சேர்க்­கிறது என்­ப­து­தான் கதை.

"நம்­மில் பெரும்­பா­லா­ன­வர்­க­ளின் வாழ்க்கை­யில் அனைத்து முக்­கிய நிகழ்வு­க­ளுமே முப்­பது வய­துக்­குள் நடந்து முடிந்­து­வி­டும். வாழ்க்­கை­யைப் புரட்­டிப்­போ­டும் இந்த விஷ­யங்­கள் சொல்லி வைத்­தாற்­போல் அடுத்­த­டுத்து நிக­ழும். நம் மன­தில் ஏதோ ஓர் ஆசை இருக்­கும். ஏதோ ஒரு தவற்­றைச் செய்­யத் தூண்­டும். வாழ்க்­கை­யில் வித­வி­த­மான மனி­தர்­கள் குறுக்­கி­டு­வார்­கள். வினோ­த­மான நிகழ்­வு­கள் நடக்­கும். பெண்­கள், வாழ்க்கை, பணம் என்று நிறைய மாற்­றங்­கள் நடக்­கும் கால­கட்­டம் அது.

"இப்­ப­டிப்­பட்ட அனு­ப­வங்­களை எதிர்­கொள்­ளும் ஒரு­வனை வாழ்க்கை எங்கே கொண்­டு­போய் நிறுத்­து­கிறது என்­ப­தை எடுத்­துச்­சொல்­லும் படம் இது," என்­கி­றார் இயக்­கு­நர் வெங்­கட கிருஷ்­ணன் ரோகாந்த்.

விஜய் சேது­பதி ஒரு கதா­பாத்­தி­ரத்­தில் அம­ரும்­போது அவ­ருக்­கென உள்ள தனி பாணி வெளிப்­படும் என்று குறிப்­பி­டு­ப­வர், சேது­ப­தி­யைத் தாம் திற­மை­யின் வடி­வ­மா­கப் பார்ப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"அவ­ரது நடிப்­பைப் பார்த்து பல இடங்­களில் வியந்து போயி­ருக்­கி­றேன். தாம் எங்­கேயோ எப்­போதோ கேட்ட, பார்த்த அனு­ப­வங்­களை எடுத்­துக் கொள்­கி­றார். நான் எதிர்­பார்ப்­ப­தற்­கும் அதி­க­மான நடிப்­பைத் தரு­கி­றார்.

"நாம் மன­தில் ஒன்று நினைத்­தி­ருப்­போம். பல அம்­சங்­க­ளைச் சுருக்­கித் தேர்ந்­தெ­டுத்து நான்கு வரி­யில் வச­னம் கொடுத்­தி­ருப்­போம். ஆனால் அவரோ அனைத்­தை­யும் அனா­யா­ச­மா­கக் கடந்­து­வி­டு­வார். சுண்­டக் காய்ச்­சிய அந்த வச­னங்­க­ளைக் கடந்து அவ­ரது முக­பா­வங்­களும் உடல் மொழி­யும்­தான் முந்தி நிற்­கும். வச­னங்­களே தேவை­யில்லை எனும் நிலையை ஏற்­ப­டுத்திவிடு­வார்," என்று பாராட்­டித் தள்­ளு­கி­றார் இயக்­கு­நர்.

'யாதும் ஊரே யாவ­ரும் கேளிர்' படத்­தில் இயக்­கு­நர் மகிழ்­தி­ரு­மே­னி­தான் வில்­லன். கனிகா முக்­கி­யப் பாத்­தி­ரத்­தில் தோன்­று­கி­றார்.

கதா­நா­யகி மேகா ஆகாஷ் குறித்து?

"எது வேண்­டுமோ அதை அவ­ரி­டம் தெளி­வா­கச் சொல்­லி­விட்­டால் போதும். கச்­சி­த­மாக நடித்து விடு­வார். அவர் இன்­னும் பல உய­ரங்­களை எட்­டிப்­பி­டிக்­கும் வாய்ப்­புள்­ளது. இயக்­கு­நர் மகிழ்­தி­ரு­மேனி குறித்து தனியே சொல்ல வேண்­டி­ய­தில்லை. தன் குர­லுக்­கா­க­வும் அறி­யப்­பட்­ட­வர். இப்­போது முதல் தர­மான வில்­ல­னாக மாறி­யுள்­ளார். இந்தப் படத்­துக்­குப் பிறகு அவர் பல இயக்­கு­நர்­க­ளால் தேடப்­படும் ஆளாக மாறு­வார்," என்று சொல்­லும் இயக்­கு­நர் வெங்­கட கிருஷ்ண ரோகாந்த், இந்­தப் படத்­தில் நாய­க­னாக நடிக்க கரு. பழ­னி­யப்­ப­னை­த்தான் அணு­கி­னா­ராம்.

ஆனால், அவரோ விஜய் சேது­ப­தி­தான் பொருத்­த­மாக இருப்­பார் என்று திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­யி­ருக்­கி­றார்.

சேது­ப­தியை இசைக் கலை­ஞ­ராக்கி விட்­டீர்­களே?

"அது மட்­டும் அல்ல, அக­தி­க­ளின் பிர­தி­நிதியாக­வும் அவர் பார்க்­கப்­படு வார். சாதா­ரண மனி­தன் படும் பாடு, அவ­னது இன்­ப துன்­பம் என எல்­லாம் இருக்­கும்.

'யாதும் ஊரே யாவ­ரும் கேளிர்' என்ற வார்த்­தை­கள் எத்­தனை ஆண்­டு­கள், யுகங்­க­ளைக் கடந்து நிற்­கிறது என்­பது தெரி­யும்.

"அந்த வார்த்­தை களுக்கு அர்த்­தம் கொடுப்ப தாக இப் படம் அமை யும்," என்கி றார் வெங்­கட்.

விரை­வில் திரை­ காண்கி றது 'யாதும் ஊரே யாவ­ரும் கேளிர்' திரைப்படம்.

விஜய் சேதுபதி

, :   