'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள திரைப்பட நகரில் நடைபெற்று வருகிறது.
ரஜினி, நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளைத் தற்போது படமாக்கி வருகின்றனர்.
படப்பிடிப்பின்போது ரஜினிகாந்தை யாரும் நெருங்கக் கூடாது என்றும் ஒருவேளை அருகில் சென்றால் தொட்டுப்பேசக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கூடுமான வரை அவரைத் தனிமைப்படுத்தி பாதுகாக்கிறார்களாம். ரஜினிக்கு வேகவைத்த காய்கறிகள்தான் முக்கிய உணவாக இருக்கிறது.
காலை, மாலை என இரு வேளையும் இட்லியும் மதியம் கொஞ்சமாக அரிசி சாதம் ஆகியவற்றை உட்கொள்கிறார்.
தந்தைக்குத் துணையாக ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா உடனிருந்து கவனித்துக்கொள்கிறார்.
அடுத்த இரு வாரங்களுக்குள் ரஜினி சம்பந்தப்பட்ட அனைத்துக் காட்சிகளையும் முடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார் இயக்குநர் 'சிறுத்தை' சிவா.
அதன்பிறகு சென்னை திரும்பி பின்னணிக் குரல் பதிவு பணிகளைத் துவங்க உள்ளனர்.