தமிழகத்தில் திரையரங்குகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே அடுத்த இரு மாதங்களுக்கு திரையரங்குகளில் வெளியீடு காண இருந்த படங்களை நேரடியாக இணையத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
விஜய் சேதுபதி நடித்த 'துக்ளக் தர்பார்' இணையத்தில் வெளியாவது உறுதியாகி உள்ளது.
இதையடுத்து சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள 'பீட்சா 3', 'மாமனிதன்', 'லாபம்', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'கடைசி விவசாயி' ஆகிய படங்களும் வெளியீடு காணத் தயாராக உள்ளன. எனவே அவற்றையும் ஓடிடி தளங்களில் வெளியிட தயாரிப்பாளர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளதாகத் தகவல். இதேபோல் நயன்தாரா நடித்துள்ள 'நெற்றிக்கண்', திரிஷாவின் 'ராங்கி' ஆகிய படங்களின் தயாரிப்புத் தரப்பும் இணைய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

