கே.வி.ஆனந்த் மறைவு: திரையுலகம் அதிர்ச்சி

கே.வி.ஆனந்த் மறைவு: திரையுலகம் அதிர்ச்சி

2 mins read
3cdf88e6-992b-45ce-b652-714323d93c57
சூர்யா, ஆர்யாவுடன் இயக்குநர் கே.வி.ஆனந்த் (நடுவில்) -

இயக்­கு­ந­ரும் ஒளிப்­ப­தி­வா­ள­ரு­மான கே.வி. ஆனந்த் நேற்று மார­டைப்­பால் கால­மா­னார். அவ­ருக்கு வயது 54. அவ­ருக்கு கொரோனா தொற்­றும் இருந்­தது என 'ஒன் இந்­தியா' இணை­யத்­த­ளம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

கடந்த 2005ஆம் ஆண்டு வெளி­யான 'கனா கண்­டேன்' படத்­தின் மூலம் தமிழ் சினி­மா­வில் இயக்­கு­ந­ராக அறி­மு­க­மா­னார் கே.வி. ஆனந்த்.

இளம் வய­தில் புகைப்­ப­ட செய்தியாளராக தமது பய­ணத்தைத் தொடங்­கி­ய­வர், பிர­பல ஒளிப்­ப­தி­வா­ளர் பி.சி. ஸ்ரீரா­மி­டம் உத­வி­யா­ள­ராக இருந்து 'தேவர் மகன்', 'திருடா திருடா' போன்ற படங்­களில் பணி­யாற்றி உள்­ளார்.

'அயன்', 'கோ', 'மாற்­றான்', 'அனே­கன்', 'கவண்', 'காப்­பான்' உள்­ளிட்ட படங்­களை இயக்கி உள்­ளார் ஆனந்த். முன்­னணி இயக்­கு­ந­ராக வலம் வந்த இவர், 'காதல் தேசம்', 'முதல்­வன்', 'பாய்ஸ்', 'சிவாஜி' உள்­ளிட்ட படங்­க­ளுக்­கு ஒளிப்­ப­தி­வா­ள­ரா­க­வும் பணி­யாற்­றி­யுள்­ளார்.

2005ஆம் ஆண்டு ஆனந்த் இயக்­கிய 'கனா கண்­டேன்' படம் வசூ­லில் சாதிக்காவிட்­டா­லும் விமர்­சன ரீதி­யில் பாராட்­டுப் பெற்­றது. அதன்­பின்­னர் தமிழ் சினி­மா­வில் வெற்றி வலம் வந்­தார்.

நேற்று அதி­கா­லை­யில் அவ­ருக்கு திடீர் நெஞ்­சு­வலி ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து தனி­யார் மருத்­து­வ­மனையில் தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்­டது. அவ­ரது மனைவி, மகளும் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தால் அரு­கில் இருக்க முடி­ய­வில்லை. இந்­நி­லை­யில் சிகிச்சை பல­ன­ளிக்­கா­மல் அவர் உயி­ரி­ழந்­தார்.

கவி­ஞர் வைர­முத்து விடுத்­துள்ள இரங்­கல் செய்­தி­யில், "விதவை­யான கேமரா கேவிக்­கேவி அழு­கிறது கே.வி.ஆனந்த்" என்­றும் "ஒளி­யாய் வாழ்­வாய் இனி நீ" என்­றும் குறிப்­பிட்­டுள்­ளார். ரஜினி, கமல், தனுஷ் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.