ஆத்மிகா: அமைதியின் ஒலியைக் கேட்டேன்

ஆத்மிகா: அமைதியின் ஒலியைக் கேட்டேன்

2 mins read
abe63fb9-f5fb-4b9a-a242-6759a26ff75b
-

அமை­தி­யின் ஒலி­யைக் கேட்­டி­ருக்­கி­றீர்­களா? அது­போன்ற இனி­மை­யான அனு­ப­வம் கிடைக்­காது என்று கவித்­து­வ­மா­கப் பேசு­கி­றார் ஆத்­மிகா.

தற்­போது விஜய் ஆன்­ட­னி­யு­டன் 'கோடி­யில் ஒரு­வன்' படத்­தில் நடித்து வரு­ப­வர், அண்­மை­யில் தேனி மாவட்­டத்­தில் நடை­பெற்ற படப்­பி­டிப்­பில் பங்­கேற்­றுள்­ளார்.

அழ­கான மலை­கள், சிலிர்க்க வைக்­கும் குளிர்­காற்று என மிக ரம்மி­ய­மான சூழ­லில் படப்­பி­டிப்பு நடந்­துள்­ளது.

படப்­பி­டிப்­புக்­காக தின­மும் சில கிலோ மீட்­டர் தூரம் காரில் செல்ல வேண்­டி இருந்­த­தாம்.

பிறகு ஒரு மலைப்­பகுதி­யில் குறைந்­த­பட்­சம் அரை மணி நேரம் நடந்து சென்­றால்­தான் படப்­பிடிப்பு நடக்­கும் இடத்தை அடைய முடி­யும். அந்த வகை­யில் சற்றே சிர­மப்­பட்­ட­தா­கச் சொல்­கி­றார் ஆத்­மிகா.

"முழு ஒப்­பனை செய்­து­கொண்டு தின­மும் அரை மணி நேரம் மலைப்­பாங்­கான பகு­தி­யில் நடக்­க­வேண்­டும் என்­ற­போது முத­லில் சங்­க­ட­மாக இருந்­தது. அதி­லும் மலைப்­ப­கு­திக்­குள் சென்­று­விட்­டால் சூரிய ஒளி மிகக் குறை­வாக இருக்­கும்.

"அடர்ந்த மரங்­கள், செடி, கொடி­க­ளுக்கு மத்­தி­யில் நடந்து செல்­லும்­போது மழை­யும் சேர்ந்­து­கொண்­டால் அவ்­வ­ள­வு­தான்.

"பல நாள்­கள் மழை­யில் செல்­லும்­போது வழுக்கி விழப் பார்த்­தி­ருக்­கி­றேன். கூடு­மா­ன­வரை என் உத­வி­யா­ளர்­களைப் பிடித்­துக்­கொண்­டு­தான் நடந்­தேன். பிறகு பழ­கி­விட்­டது. அது­மட்­டும் அல்ல, அந்த இயற்­கை­யான சூழ்­நிலை மன­துக்கு இத­ம­ளிக்­கத் தொடங்­கி­யது. இயற்­கை­யின் அழ­கில் என்­னையே நான் மறந்­து­போ­னேன்," என்­கி­றார் ஆத்­மிகா.

மழை கார­ண­மாக பல தினங்­கள் படப்­பி­டிப்பு கைவி­டப்­ப­டு­மாம். ஆனால், இதற்­காக வருத்­தப்­ப­டு­வதை விட இயற்­கையை அனு­ப­விக்­கக் கிடைத்த வாய்ப்­பாக கரு­தத் தொடங்­கி­னா­ராம்.

"உண்­மை­யில் அந்­தப் படப்­பி­டிப்பு பகுதி எனக்­கான புதிய உல­கத்­தைத் திறந்­து­விட்­ட­தாகவே நினைத்­தேன். நான் இயற்­கைக்கு மிக அரு­கா­மை­யில் இருப்­ப­தாக உணர்ந்­தேன்.

"கைபே­சி­யைப் பயன்­ப­டுத்த முடி­ய­வில்லை. அந்த அடர்ந்த காட்­டுப் பகு­தி­யில் குறிப்­பிட்ட ஒரு மரத்­தின் அரு­கில் சென்­றால் மட்­டுமே கைபேசி 'சிக்னல்' கிடைக்­கும். அந்த மரத்­துக்கு 'சிக்­னல் ஸ்பாட்' என்றே பெயர் வைத்­து­விட்­டோம். படப்­பி­டிப்­புக்கு மத்­தி­யில் புத்­த­கங்­கள் படிக்­க­வும் நேரம் கிடைத்­தது," என்­கி­றார் ஆத்­மிகா.

மாலை ஆறு மணிக்கு மேல் படப்­பி­டிப்பை நடத்த முடி­யாது என்­ப­தால் தங்­கும் விடு­திக்­குத் திரும்­பிய பிறகு ஏதா­வது புத்­த­கத்­தில் மூழ்­கி­வி­டு­வா­ராம்.

"தேனி­யைப்போல் அழ­கான இயற்கை சூழ்ந்த இடத்­தைப் பார்த்­த­தில்லை. அங்கு ஏரா­ள­மான புகைப்­ப­டங்­கள் எடுத்­துக்­கொண்­டேன்.

"அரை மணி நேரம் ஓய்வு கிடைத்­தா­லும் எனது உத­வி­யா­ளர்­க­ளு­டன் சுற்றி வந்து இயற்­கையை ரசிக்க முடிந்­தது. அங்கு யாருக்­கும் என்னை அடை­யா­ளம் தெரி­ய­வில்லை என்­ப­தும் வச­தி­யாக இருந்­தது.

"அங்­கு­தான் அமை­தி­யின் ஒலியை என்­னால் கேட்­டு­ உணர முடிந்­தது. இது­போன்ற அனு­ப­வம் கிடைப்­பது வாழ்க்­கை­யில் அரிது," என்று சொல்­லும் ஆத்­மிகா, காட்­டுப் பகு­தி­யில் யானை­கள் செல்லும் வழித்­த­டங்­க­ளி­லும் நடந்து சென்­றா­ராம்.

"உள்­ளூர் மக்­கள் தந்த பழங்­களும் உண­வும் அற்­பு­த­மாக இருந்­த­தா­கச் சொல்­கி­றார்.

"அவர்க­ளின் வாழ்க்கை முறையைத் தெரிந்­து­கொள்ள முடிந்­தது. அது நமது வேர்­களைத் தொட்­டுத் திரும்­பிய உணர்வை ஏற்­ப­டுத்­தி­யது," என்கி­றார் ஆத்­மிகா.

ஆத்மிகா

, :   