தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜனனி: இனி அப்படிச் செய்யவே மாட்டேன்

2 mins read
b9a88fa0-4faf-4e66-b8ef-8147d7843514
தமது சகோதரியுடன் ஜனனி ஐயர். -

'பகீரா' திரைப்­ப­டத்­துக்­காக செய்து­கொண்ட புதிய சிகை­ய­லங்­கா­ரம் தமது ஒட்­டு­மொத்த தோற்­றத்­தை­யும் மாற்­றி­விட்­ட­தா­கச் சொல்­கி­றார் ­ப­ட நாயகி ஜனனி ஐயர்.

ஆதிக் ரவிச்­சந்­தி­ரன் இயக்­கும் இப்படத்­தில் நவ­நா­க­ரிக நக­ரத்­துப் பெண்­ணாக நடித்­துள்­ளா­ராம்.

"இதற்­காக அண்­மைய புதிய 'ஃபேஷன்' உடை­களை அணி­யச் செய்­தார் இயக்­கு­நர் ஆதிக். மேலும் ஒப்­ப­னை­யி­லும் கூடு­தல் கவ­னம் செலுத்­தி­னார். சொன்­னால் நம்ப மாட்­டீர்­கள், என் தலை­மு­டிக்கு செயற்கை மை (டை) பூச வேண்­டும் என்­ப­தற்­காக மும்­பை­யில் உள்ள ஒப்­பனை நிலை­யத்­தைத் தொடர்புகொண்டு பேசி­னார். பிறகு விமா­னத்­தில் அங்கு அனுப்பி வைத்­தார்," என்­கி­றார் ஜனனி.

ஆனால் இந்­தப் பய­ணம் அவரை சங்­க­டத்­துக்­கும் ஆளாக்­கி­ய­தாம். புதிய சிகை­ய­லங்­கா­ரத்­து­டன் தன்­னைக் கண்­ணா­டி­யில் பார்த்­த­போது தமது தோற்­றமே மாறிப்­போ­ன­தாக ஜன­னிக்­குத் தோன்றி இருக்­கிறது.

எனி­னும் படக்­கு­ழு­வி­னர் தம்மை எப்­ப­டிப் பார்க்­கப் போகி­றார்­களோ என்று தயங்­கி­யுள்­ளார். இப்­ப­டத்­தின் நாய­கன் பிர­பு­தேவா.

"நல்­ல­வே­ளை­யாக படக்­கு­ழு­வி­னர் எனது சிகை­ய­லங்­கா­ரம் நன்­றாக இருப்­ப­தா­கக் கூறி­னர். பிர­பு­தேவா சாருக்கு முத­லில் என்னை அடை­யா­ளம் தெரி­ய­வில்லை.

"பிறகு சிரித்­துக்­கொண்டே 'அடி­யோடு மாறி­விட்­டீர்­களே. ஒப்­பனை நன்­றாக இருக்­கிறது' என்­றார். இப்­படி எல்­லாம் சரி­யா­கத்­தான் சென்று கொண்­டி­ருந்­தது.

"எனி­னும் படப்­பி­டிப்பு முடிந்த சில வாரங்­க­ளுக்­குப் பின்­னர் என் தலை­மு­டி­யில் பூசப்­பட்ட செயற்கை சாயம் தனது வேலை­யைக் காட்­டி­யது. தலை­முடி வேக­மாக உதி­ரத் தொடங்­கி­யது. சில நாட்­க­ளி­லேயே ஒரு­பக்­கத் தலை­முடி மட்­டும் கொட்­டி­ய­தால் அதிர்ந்து போனேன்.

"நல்­ல­வே­ளை­யாக கொரோனா ஊர­டங்கு கார­ண­மாக அந்­தக் கோலத்­தில் என்னை யாரும் பார்க்­க­வில்லை. பல்­வேறு எண்­ணெய் வகை­க­ளைப் பயன்­ப­டுத்தி என் அம்மா வீட்­டுச் சிகிச்­சை­களை அளித்­தார். சுமார் ஐந்து மாதங்­க­ளுக்கு நான் பயன்­ப­டுத்­தாத மூலிகை, எண்­ணெய், ஷாம்பூ, கிரீம்­கள் சந்­தை­யில் இல்லை என­லாம். எப்­ப­டியோ தலை­முடி மீண்­டும் வள­ரத் தொடங்­கி­யது.

"மேலும் எனக்கே உரிய கருங்­கூந்­த­லைத் திரும்­பப் பெற்­றேன். அதன்­பி­றகு வாழ்­வின் எந்­தத் தரு­ணத்­தி­லும் தலை­மு­டிக்கு செயற்கை சாயம் பூசக்­கூ­டாது என்று முடி­வெ­டுத்­துள்­ளேன். வித்­தி­யா­ச­மான கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்­கும் விருப்­பம் உள்­ளது. ஆனால், அதற்­காக என் சிகை­ய­லங்­கா­ரத்தை மாற்­ற­வேண்­டும்; செயற்கை சாயம் பூச­வேண்­டும் என்­றால், அது எவ்­வ­ளவு பெரிய வாய்ப்­பாக இருந்­தா­லும் ஏற்­க­மாட்­டேன்," என்கிறார் ஜனனி.