சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' படத்தின் வெளியீடு பொருளாதாரச் சிக்கல், கொரோனா உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தப் படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.
இப்படம் ரமலான் பண்டிகையை ஒட்டி வெளியாகும் என சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. பின்னர் கொரோனா விவகாரத்தால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் 'டாக்டர்' வெளியீடு குறித்து சிவாவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு படத்தின் தயாரிப்புத் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா விவகாரம், பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் பட வெளியீட்டிற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. கொரோனா சூழ்நிலையில் பட வெளியீடு குறித்து பேச விரும்பவில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

