தமயந்தி: ஆழ் மன சாதிய உணர்வை சுட்டிக்காட்டும் படம்

தமயந்தி: ஆழ் மன சாதிய உணர்வை சுட்டிக்காட்டும் படம்

3 mins read
ab22b4d2-966e-45dc-b645-9db3f94600d1
'காயல்' படத்தில் லிங்கேஷ், காயத்ரி, அனு மோல். -

இன்­றைய சமூ­கத்­தில் பெண்­க­ளின் எந்­தத் தேர்­வுக்­கும் முக்­கி­யத்­து­வம் கொடுக்­கப்­ப­டு­வ­தில்லை என்­ப­தால் அவர்­கள் தங்­க­ளுக்­குள்­ளேயே ஒரு­வித தனி­மையை அனு­ப­வித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள் என்­கி­றார் இயக்­கு­நர் தம­யந்தி.

பெண்­க­ளுக்கு உரிய முக்­கி­யத்­து­வம் தரா­த­போது என்ன ஆகிறது என்­பதை விவ­ரிக்­கிறது இவ­ரது கைவண்­ணத்­தில் உரு­வா­கும் 'காயல்' திரைப்­ப­டம்.

நல்ல தரு­ணங்­களை ஒரு சினி­மா­வில் பதிவு செய்­வது சாதா­ரண காரி­ய­மல்ல என்று குறிப்­பி­டும் தம­யந்தி, அப்­ப­டி­யொரு முயற்­சியை தாம் மேற்­கொண்­டுள்­ள­தாக சொல்­கி­றார்.

"பெரும்­பா­லான குடும்­பங்­களில் ஒரு­வித ஆழ­மான மௌனம் உறைந்­தி­ருக்­கும். அவற்­றைக் கீறும்­போது சில விளை­வு­கள் ஏற்­ப­டவே செய்­யும். அதைக் 'காயல்' படத்­தில் பதிவு செய்­கி­றேன்.

"தந்தை-மகள், அம்மா-மகள் எனும் உறவு இருக்­கி­றதே... அதில் மிகுந்த அழ­கும் அர்த்­த­மும் இருக்­கின்­றன. இந்­தியா சுதந்­தி­ரம் பெற்று ஆண்­டு­கள் கடந்­தோடி விட்­டன. ஆனால், இன்­னும்­கூட பல வீடு­களில் நான் குறிப்­பிட்ட அப்பா-மகள், அம்மா-மகள் உற­வுக்கு மத்­தி­யில் ஒரு­வித சுதந்­தி­ரப் போராட்­டம் நடந்­த­ப­டி­தான் இருக்­கிறது," என்­கி­றார் தம­யந்தி.

ஒட்­டு­மொத்த ஆண் வர்க்­க­மும் மிக மோச­மா­னது என்று சொல்­லப்­படும் கூற்றை உடைக்க விரும்­பு­வ­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், ஆண், பெண் இடை­யே­யான உறவு எப்­ப­டிப்­பட்­ட­தாக இருக்­க­வேண்­டும் என்­பதை 'காயல்' படம் விரி­வா­கப் பேசும் என்­கி­றார்.

அதே­ச­ம­யம் எந்­தத் தரப்பின ருக்கும் ஆத­ர­வா­க பரிந்து பேசு­வது தமது நோக்­க­மல்ல என்­றும் படம் பார்க்­கும்­போது இதை உண­ர­மு­டி­யும் என்­றும் சொல்­கி­றார்.

"நான் எதிர்க்­கும் அதி­கா­ரம் குறித்து கேள்­விப்­பட்­டி­ருக்­கி­றேன். எங்­கள் ஊரில் இன்­ன­மும் கூட ஒரு­வ­ரி­டம் கேட்­கப்­படும் இரண்­டா­வது கேள்வி, 'நீங்க என்ன ஆளுங்க' என்­ப­து­தான்.

"அந்­தக் கேள்வி தவறு என்­ப­து­கூட அதைக் கேட்­ப­வர்­க­ளுக்­குத் தெரி­யாது. அப்­ப­டிப்­பட்ட ஆழ்­மன சாதிய உணர்வை இந்­தப் படம் சுட்­டிக் காட்­டும்," என்­கி­றார் தம­யந்தி.

'கபாலி'யில் நடித்த லிங்­கேஷ்­தான் இப்­ப­டத்­தின் நாய­கன். தாம் எதிர்­பார்த்­த­தை­விட சிறப்­பாக நடித்­தி­ருப்­ப­தா­கப் பாராட்­டு­கி­றார் தம­யந்தி. நாய­கி­க­ளாக காயத்ரி, அனு­மோல் இரு­வ­ரும் நடித்­துள்­ள­னர்.

"இந்­தப் படத்­துக்­கான கதையை எழு­தும்­போதே லிங்­கேஷ் என் மன­தில் தோன்­றி­னார். அவர் ஒரு தமிழ் முக­மாக மன­தில் பதிந்து விட்­டார். சவால்­களை தைரி­ய­மாக ஏற்­றுக்­கொள்­ளும் பக்­கு­வத்தை அவ­ரி­டம் காண­மு­டிந்­தது.

"காயத்­ரி­யைப் பொறுத்­த­வரை மிகச்­சி­றந்த நடிகை. எவ்­வ­ளவு மகிழ்ச்­சி­யாக இருந்­தா­லும் கண்­களில் ஒரு மெல்­லிய இனம்­பு­ரி­யா­த­தோர் சோகம் குடி­கொண்­டி­ருக்­கும். அவ­ரது நடிப்பு இந்­தப் படத்­துக்கு பலம்.

"அனு­மோல் என்­மீது மிகுந்த நம்­பிக்கை உள்­ள­வர். நான் எப்­போது அழைத்­தா­லும் எந்­தக் கதா­பாத்­தி­ர­மாக இருந்­தா­லும் அவர் நடிப்­பார். பாடகி சுவா­கதா, ஐசக் வர்­கீஸ் ஆகி­யோ­ரும் உள்­ள­னர்," என்­கி­றார் தம­யந்தி.

'காயல்' படத்­துக்கு ஜஸ்­டின் கெனன்யா இசை­ய­மைக்க, ரமேஷ் வைத்­யா­வும் தம­யந்­தி­யும் பாடல்­களை எழு­தி­யுள்­ள­னர்.

"இது­போன்ற பய­ணக் கதை­களை குறைந்த செல­வில் பட­மாக்­கு­வது கடி­ன­மான வேலை. அதற்கு இடம் கொடுக்­கா­மல் தயா­ரிப்­பா­ளர் ஜேசு சுந்­த­ர­மா­றன் பெரிய பல­மாக இருந்­தார்.

"நீதி சொல்­வது என் பணி­யல்ல. அதற்கு அப்­ப­ழுக்­கில்­லாத மன­சும் தனித்­து­வ­மான சிந்­த­னை­யும் தேவை. எனவே, நிலைமை இப்­படி இருக்கு பார்த்­துக் கொள்­ளுங்­கள் என்று சில விஷ­யங்­க­ளைச் சொல்லி இருக்­கி­றேன். என் படம் இப்­ப­டிப்­பட்­ட­தா­கத்­தான் இருக்­கும்," என்­கி­றார் தம­யந்தி.